சனி, 20 பிப்ரவரி, 2010

ஹமாஸ் தலைவர் கொலையில் மொஸாத் பயன்படுத்தியது ஆஸ்திரியா சிம்கார்டு- 2008 மும்பைத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது

துபாய்:துபாயில் ஹமாஸ் தலைவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலையாளிகளான மொஸாத் ஏஜண்டுகள் ஆஸ்த்ரியா நாட்டின் சிம் கார்டுகளை பயன்படுத்தியது குறித்து தீவிரவாத தடுப்பு போலீசார் விசாரித்துவருவதாகம் இது தொடர்பாக துபாய் போலீசுடன் தொடர்புக் கொண்டுள்ளதாகவும் ஆஸ்திரியா நாட்டின் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ருடோல்ஃப் கொள்ளிய கூறினார்.

விசாரணை நடந்து வருவதால் இதுக்குறித்து அதிகம் கூற இயலாது என அவர் தெரிவித்தார். 7 ஆஸ்திரியா சிம் கார்டுகளை கொலையாளிகள் பயன்படுத்தியுள்ளனர். 2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போதும் இத்தகைய சிம் கார்டுகளை பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஸீ நியூஸ் சானல் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: