திங்கள், 15 ஜூன், 2009

தேர்தல் முடிவுகள் உண்மையானவை: இரானிய அதிபர் அகமதிநிஜாத்

வெற்றி ஊர்வலத்தில் அகமதிநிஜாத் ஆதரவாளர்கள்

இரானில் அதிபர் மஹ்மூத் அகமதிநிஜாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைக் கொண்டாடும் முகமாக தெஹ்ரானில் நடந்துவரும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெற்றுவருகிறார்கள்.

முன்னதாக செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிய அகமதிநிஜாத், இந்தத் தேர்தல் முடிவுகள் சுதந்திரமானது, உண்மையானது என்று கூறினார்.

தேர்தல் ஒரு கால்பந்து ஆட்டம்போன்றது, தோற்பவர்கள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அகமதிநிஜாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய வேட்பாளரான மீர் ஹொசைன் முஸாவி, தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக புகார் கொடுத்துள்ளார். அமைதியான வழியில் போராட்டங்கள் நீடிக்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்றிரவு பொலிசார் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் டஜன் கணக்கானோரை கைதுசெய்திருந்தனர். முன்னாள் அதிபர் முகமது கடமியின் சகோதரரும் அவர்களில் ஒருவர். அவர்களில் சிலர் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை: