ஞாயிறு, 7 ஜூன், 2009

இஸ்ரேல் போர் குற்றவாளி - ஐ.நா.


கடந்த 2008 டிசம்பர் மாதம் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மூலம் குழந்தைகள் உட்பட 1350 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சுமார் 5400 பேர் படுகாயமடைந்தனர்.


இந்த தாக்குலை விசாரித்த ஐ.நா விசாரணைக் குழு இஸ்ரேல் போர் குற்றம் புரிந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.


யூத மத நீதிபதி ரிச்சர்ட் கோல்ட் ஸ்டோண் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த இந்த விசாரணைக் குழு தாக்குதலைப் பற்றிய செய்திகள் மற்றும் புகைப் படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே இஸ்ரேலின் அத்து மீறலை உறுதி செய்துள்ளது.


மேலும் பல பகுதிகளில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் வீசியது. பள்ளிக்கூடம், மருத்துவமனை மற்றும் ஐ.நா. தலைமையகம் உட்பட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியதைப் பற்றி இஸ்ரேல் தெளிவான பதிலொன்றையும் சமர்ப்பிக்கவில்லை.


மேலும் இஸ்ரேலின் அத்து மீறல் சம்பந்தமான பல ஆதாரங்களை விசாரணைக் குழு முன்பாக ஹமாஸ் இயக்கமும் அளித்திருக்கின்றது.

கருத்துகள் இல்லை: