
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நக்கீரன்[20 -06 - 09 ]இதழில் கருத்து தெரிவித்துள்ள திருமதி. திலகவதி ஐ.பி.எஸ்.என்பவர், இந்த சம்பவத்தை வைத்து இஸ்லாத்தை இழிவு படுத்தும் வகையில் விஷக்கருத்தை உதிர்த்துள்ளார்.
அவரது கருத்து; பெற்றோரின் முடிவுக்கு எதிராகவும், குடும்பத்தின் கவுரவத்திற்கு சீர்குலைவு ஏற்படும் வகையில் ஒரு ஆணோ, பெண்ணோ செயல்பட்டால், குடும்ப கவுரவத்தை காப்பாற்ற பெற்றோர்களே அந்த பிள்ளையை கொன்று விடும் கவுரவக்கொலைகள் அரபு நாடுகளில் அளவுக்கதிகமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இது புதிதானதும் அல்ல. என்று கூறியுள்ளார்.
திலகவதியின் கூற்று பிரகாரம் சலீம் செய்த கொலையை இஸ்லாம் ஆதரிப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்க முனைகிறார். எந்த உயிரையும் அநியாயமாக கொள்ளுமாறு இஸ்லாம் ஒரு போதும் சொன்னதில்லை. ஒரு ஆத்மாவின் ரத்தம் எப்போது பூமியில் சிந்தப்படவேண்டும் என்பதை படைத்த இறைவன் தெளிவாக சொல்லியுள்ளான்;
مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا وَلَقَدْ جَاء تْهُمْ رُسُلُنَا بِالبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُم بَعْدَ ذَلِكَ فِي الأَرْضِ لَمُسْرِفُونَ
இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" [5:32 ].
யாரோ ஒரு ஒரு தனிமனிதன் செய்ததை வைத்து இஸ்லாத்தை இழிவு படுத்திய திலகவதி முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்கு கொடி பிடித்து கோஷம் போடும் சமுதாய இயக்கங்கள் திலகவதியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும். அல்லது திலகவதி மீது வழக்கு தொடரவேண்டும். செய்வார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக