திங்கள், 29 ஜூன், 2009

ஓரினசேர்க்கை;ஓலமிடும் நரிகளும், ஒத்து ஊதும் அரசும்!

மேற்க்கத்திய நாட்டின் புதிய வரவான பன்றி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் எகிறி, நம்மை 'பல்ஸ்' பார்த்துக்கொண்டிருக்க அதே மேற்க்கத்திய நாட்டின் மற்றொரு பயங்கரமான நோயை வரவேற்க சிவப்பு கம்பளமும் இந்தியாவில் விரிக்கப்பட்டுள்ளது. ஆம்! கற்பையும்-கலாச்சாரத்தையும் உயிரென மதிக்கும் தமிழகத்தில் நேற்று, கலாச்சாரம் கிலோ என்னவிலை? என கேட்கும் ஓரின சேர்க்கையாளர்கள், அரவாணிகள் அடங்கிய கூட்டம் மாபெரும் பேரணியை தமிழக தலைநகர் சென்னையில் நடத்தியுள்ளது. இந்த பேரணியில் ஆபாச/கவர்ச்சி உடையில் கலக்கியவர்கள் வைத்த கோரிக்கை என்னதெரியுமா? ஓரின சேர்க்கை குற்றம் என்று கூறும் சட்டப்பிரிவை நீக்கவேண்டும் என்பதே!

கலாச்சார சீரழிவை விதைக்கும் இந்த பேரணிக்கு அரசு அனுமதியளித்தது பெரும் வியப்பாக உள்ளது . இன்று ஓரின சேர்க்கையை அனுமதிக்கவேண்டும் என்று கூறும் கும்பலுக்கு அனுமதியளித்தால் நாளை விபச்சாரத்தை தடை செய்யும் சட்டத்தை நீக்கவேண்டும் என்று ஒரு கும்பலும், மது- சூதாட்டம் உள்ளிட்ட வேறுபல தீமைகளை தடை செய்யும் சட்டத்தை நீக்கவேண்டும் என்று வேறு சில கும்பலும் பேரணி நடத்த முன்வந்தால், அதை அனுமத்தித்தால் நாடு என்னவாகும் என்பதை சிந்திக்க மறந்துவிட்டது தமிழக அரசு.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், இது போன்ற கலாச்சார சீரழிவை உண்டாக்குபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று அறிவிக்கவேண்டிய மத்திய நடுவன் அரசின் அமைச்சர் வீரப்பமொய்லி, ஓரின சேர்க்கைக்கு தடையை நீக்குவது பற்றி மதத்தலைவர்கள் உட்பட அனைவரின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் முடிவு எடுக்கப்படும் என்கிறார். விரைவில் ஓரின சேர்க்கையை அனுமதிப்போம் என்பதை வேறு வார்த்தையில் அமைச்சர் சொல்வதாகவே அறிவுடையவர்கள் விளங்கிக்கொள்வர்.

மேலும், இறைவனின் படைப்பில் மனிதர்களில் சிலர் அரவாணிகளாக பிறப்பதுண்டு. அந்த அரவாணிகளை ஆண்களாக கருத வேண்டுமா? அல்லது பெண்களாக கருதவேண்டுமா என்ற கேள்விக்கும் இஸ்லாம் விடையளிக்கிறது. உடல் கூற்றில் பெரும்பாலும் பெண்களுக்கு ஒப்பாக இருந்தாலும் அவர்கள் ஆண்களாகவே கருதப்பட வேண்டும் என்பதுதான் இஸ்லாம் கூறும் தீர்ப்பாகும்.


(நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த 'அலி', (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம், 'அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று கூறினார்கள்.[புஹாரி 4324 ]


பெண்கள் இருக்கும் இடங்களில் இந்த அரவாணிகள் வரக்கூடாது என்று நபி[ஸல்]தடுப்பதில் இருந்து அரவாணிகளை ஆண்களாகவே கருதவேண்டும் என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால், இன்று அரவாணிகள் தங்களை முழுக்க-முழுக்க பெண்களாகவே அடையாளப்படுத்தவே விரும்புகின்றனர். பெண்கள் போன்றே நடை-உடை-பாவனைகளை மாற்றிக்கொண்டு, அதன் மூலம் பெரும்பாலான அரவாணிகள் பாலியல் ரீதியாய தொழிலில் தங்களை ஐக்கியப்படுத்தி அதன் மூலம் சமூகத்தின் கலாச்சார சீரழிவிற்கு வழிவகுப்பதை யாரும் மறுக்கமுடியாது.


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துu கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், 'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்!' என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெறியேற்றினார்கள்; உமர்(ரலி) அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள்.[புஹாரி 6834 ]


தமிழக அரசு அரவாணிகளை மூன்றாவது பாலினமாக அறிவித்து அவர்களுக்கென தனியாக நலவாரியமும் அமைத்துள்ளது. இந்த நல வாரியம் மூலம் அரவாணிகளை பாலியல் ரீதியான தொழில் செய்வதில் இருந்து மீட்டெடுத்து கவுரவமான தொழில் செய்து பிழைப்பவர்களாக மாற்ற அரசு முன்வரவேண்டும் . மேலும் அரவாணிகளுக்கு பெண்களாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்வதை தடை செய்யவேன்டும். விரும்பினால் ஆண்களாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கலாம்.

அடுத்து, ஓரின சேர்க்கையாளர்களை எடுத்துக்கொண்டால், இவர்கள் வருங்கால சந்ததியை அஸ்தமிக்க செய்பவர்கள். ஆணுக்கு பெண்ணின் தேட்டத்தையும்- பெண்ணுக்கு ஆணின் தேட்டத்தையும் ஏற்படுத்தி அவ்விருவர் திருமணம் என்ற உறவு மூலம் இணைந்து இல்லற வாழ்வின் மூலம் சந்ததிகளை பெற்றெடுத்து அதன் மூலம் மனித சமூகத்தை இறைவன் தழைத்தோங்க வகை செய்திருக்கும் நிலையில், ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் இணைவதால் ஏற்படும் விளைவு என்ன? இந்த ஓரின சேர்க்கையாளர்கள் செய்யும் விபச்சாரத்தால் பல்வேறு நோய்கள் பரவுவதோடு, இந்த ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் என்ற கேலிக்கூத்தில் ஈடுபட்டு அதன் மூலம் சந்ததி அற்ற மனித குலத்திற்கு வழிவகை செய்கிறார்கள். ஓரின சேர்க்கையாளர்களில் திருமணம் செய்வதற்காக இருவரில் ஒருவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும், பின்பு அவ்விருவருக்கிடையில் பிணக்கு ஏற்படும்போது, தம்பதிகள் சம்மந்தப்பட்ட விவாகரத்து- ஜீவனாம்சம் உள்ளிட்ட எந்த சட்டமும் பயனளிக்காமல் இருவரும் அல்லது இருவரில் ஒருவர் பாதிக்கப்பட்டுவதை பார்க்கிறோம்.

எனவே, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக அரசு இருக்காமல் விபச்சாரம் - ஓரின சேர்க்கை ஆகியவற்றை இரும்புக்கரம் கொண்டு தடுக்க முன்வரவேண்டும். நாகரீகம், சம உரிமை என்ற பெயரில் அரசு இதை கண்டு கொள்ளாமல் இருக்குமானானால் இந்தியாவின் தனித்துவ அடையாளமான கலாச்சாரம் அடிபட்டு, பண்பாடற்ற வருங்கால சமுதாயம் உருவாக வழி வகுத்துவிடும்.ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?

கருத்துகள் இல்லை: