சனி, 27 ஜூன், 2009

நேபாளத்தில் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள்!

நேபாளப் பிரதமர் மாதவ் குமார் தனது அமைச் சரவையை விரிவுபடுத்தியுள்ளார். தனது அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களை கூடுதலாக சேர்த்துள்ளார். இதில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் களும் அடங்குவர்.
முஹம்மது அஃப்தாப் ஆலம், நேபாளி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். இவர் ரவுதாஹத் மாவட்டத்தில் உள்ள தேராய் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தொழிலாளர் நலத்துறை மற்றும் கட்டுமானத் துறையின் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள் ளார். ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரிஸ்வான் அன்சாரி உள்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நேபாளத்தில் ஏற்பட்ட புரட்சிக்குப் பிறகு முதன் முறையாக இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்களாக தற்போதுதான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: