ஞாயிறு, 28 ஜூன், 2009

அமெரிக்க கொலைக்காரன் குற்றவாளிக் கூண்டிலல்ல... நீதிபதியாய் நிமிர்ந்து நிற்கிறான்.


மிர் ஹுஸைன் மூஸவியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்தபோது சுட்டுக்ககொல்லப்பட்ட நிதா அகா சுல்தான் என்ற இளம் ஈரானிய பெண்ணி்ன் கொலையில் சீ.ஐ.ஏ. தொடர்பு பட்டிருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தப்பெண் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொல்வதற்காக தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்துசென்றுக்கொண்டிருந்த போது அவரின் முதுகுப்புறத்திலிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்த காட்சியை ஊடகவியலாளர்கள் படம் பிடித்திருப்பது இப்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறாத இடத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தை எப்படி முன் கூட்டியே இவ்ர்கள் படம் எடுத்தார்கள் என்ற விடயம் இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

நிதா அகா சுல்தானின் மரணத்தை மிகவும் கவலையுடன் ஒளிபரப்பிய அமெரிக்க ஊடகங்கள் இணைய தளங்களில் பலதரப்பட்ட பிரசாரங்களை செய்தும் வருகின்றன.

இது உலகிலேயே இடம்பெற்ற முதலாவது கொலைபோன்றும், பட்டப்பலில் படுகொலை செய்த இந்த இஸ்லாமிய நாட்டை சும்மா விடக் கூடாது என்பது போன்றும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

இந்தக் கொலை இடம் பெற்ற முறையும் இந்த கொலைக்கு அமெரிக்க ஊடகங்கள் கொடுக்கின்ற தந்திரமான பிரசார மும் கொலையாளி யாராக இருக்கும் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

இந்தக் கொலையை அமெரிக்க சீ.ஐ.ஏ. செய்து விடடு பழியை இரான் மீது போடுவதற்கு முயற்சி செய்வதை இந்த செய்தியை பார்க்கும் எவரும் எளிதில் புரிந்துகொள்வர்.

ஈரான்தான் இந்தக்கொலையை செய்திருக்கிறது என்று வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் கொலையைப்பற்றி கண்டணம் தெரிவிப்பதற்கும், கண்ணீர் வடிப்பதற்கும் அமெரிக்காவிற்கு என்ன அருகதை இருக்கிறது.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் சிறுவர்கள் பெண்கள் முதியவர் என்று பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைக் கொன்று இரத்தத்தைக் குடித்து ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு ஈரானில் கொல்லப்பட்ட ஒரு நிதா ஒரு பொருட்டல்லவே!

அமெரிக்க கொலைக்காரன் குற்றவாளிக் கூண்டிலல்ல... நீதிபதியாய் நிமிர்ந்து நிற்கிறான். நிதா!... நீ... இரத்தம் குடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இரையாகிப் போன ஆயிரமாயிரம் பேர்களில் ஒருத்தி மட்டுமே!

உனக்கு குறுக்கு வழி காட்டிய மூஸவி எதிரிகளோடு கைகோர்த்து நடு வீதியில் நிற்கிறார். .குற்றுயிராய்.... நீ...வீதியில் வீழ்ந்து கிடக்கிறாய்!

கருத்துகள் இல்லை: