செவ்வாய், 18 மே, 2010

கர்நாடகா உள்ளாட்சித் தேர்தல்:65 இடங்களில் எஸ்.டி.பி.ஐ வெற்றி

பெங்களூர்:கர்நாடகாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா 65 இடங்களில் இதுவரை வெற்றிப்பெற்றுள்ளது. முழுமையான விபரம் நாளைத் தெரியவரும்.

10 மாவட்டங்களில் 368 வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். தெற்கு கர்நாடகா-39, குர்க்-8, உடுப்பி-11, தும்கூர்-3, ஹம்ஸூர், ஹாஸன், ராம்நகர், கோலார் ஆகிய இடங்களில் ஒரு வார்டிலும் எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த மே மாதம் 8.12 தேதிகளில் 80,159 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 2.32 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: