சனி, 22 மே, 2010

ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் விடுதலைச் செய்தது.

காஸ்ஸா:இஸ்ரேலால் சிறையிலடைக்கப்பட்ட ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான முஹம்மது அபூ தீரை இஸ்ரேல் விடுதலைஸ் செய்துள்ளது.

இஸ்ரேலிய ராணுவ வீரன் கிலாத் ஷாலிதை ஹமாஸ் கைது செய்ததைத் தொடர்ந்து அபூ தீர் உள்ளிட்ட 50 ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் கைது செய்து சிறையிலடைத்தது.

ஷாலிதை விடுவிக்க தயாரான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அபூ தீர் விடுதலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் ஒன்பது ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் விடுதலை செய்திருந்தது.

ஷாலிதின் விடுதலைக்கு பகரமாக ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென்பது ஹமாஸின் கோரிக்கையாகும். அபூதீர் 40 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிறையிலிருந்து விடுதலையான அபூ திரை ஏராளமான ஃபலஸ்தீன் மக்கள் வரவேற்றனர்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: