ஞாயிறு, 23 மே, 2010

தமிழக தலைமை தேர்தல் ஆணையாளராக முனீர் ஹோதா நியமனம்

syed munir hoda
தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்துவதற்காக தனி தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகின்றது. தமிழநாடு மாநில தேர்தல் ஆணையம் என்று அழைக்கப்படும் இந்த அமைப்பிற்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சைய்யது முனீர் ஹோதா தலைமை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு தமிழக உள்துறை செயலளாராகவும், முதல்வரின் முதன்மை செயலாளராகவும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத் தலைவராகவும் திறம்பட செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் முனீர் ஹோதா தற்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியின் ஓய்விற்கு பிறகு தலைமைச் செயலளராக நியமிக்கப்படும் தகுதி பெற்றிருந்தார். இருப்பினும் அவர் தற்போது மாநில தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் உள்துறை செயலளராக இருந்து கண்காணிப்பு ஆணையாளராக மாற்றப்பட்டுள்ள மாலதி அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகின்றது. இதுவரை தமிழகத்தில் முஸ்லிம் அதிகாரிகளில் ஒருவர் கூட தலைமைச் செயலாளராக பணியாற்றியதில்லை.

கருத்துகள் இல்லை: