திங்கள், 16 பிப்ரவரி, 2009

TNTJ மாணவர் அணியின் காதலர்தின எதிர்ப்பு பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மாணவர் அணி சார்பாக பிப்ரவரி 14 ம் தேதியை கற்பு கொள்ளையர் தினம் என்று அறிவித்து மதுரையின் முக்கிய வீதிகளில் காதலர் தின சீர்கேடுகளை பற்றிய துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

காலையில் பெரியார் நிலையத்தில் நோட்டிஸ் விநியோகிக்கும் போது காவல் துறையினர் TNTJ வினரை கைது செய்தனர். காவல் நிலையத்தில் காவல் துறையினரிடம் TNTJ நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவில் 2 மணி நேரம் கழித்து அணைவரையும் விடுவித்தனர். பின்பு மாலை 5 மணிக்கு மேல் மதுரையில் முக்கிய வீதிகளான ராஜாஜி பார்க், எக்கோ பார்க், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் பேனர் ஏந்தி துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கண்ட பொதுமக்கள் பலர் இப்பிரச்சாரம் அறிவிப்பூர்வமானது என்று பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ். இப்பிரச்சாரத்திற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கலீல் ரஹ்மான் தலைமை தாங்கினார். காதலர் தினம் என்ற பெயரில் வாலிபர்கள் அதிலும் குறிப்பாக மாணவர்கள் செய்யும் ஒழுக்க சீர்கேடுக்களுக்கு மத்தியல் TNTJ வின் மாணவர் அணியினரின் இந்த வழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!.

நன்றி; த.த.ஜ. வலைத்தளம்.

கருத்துகள் இல்லை: