சனி, 7 பிப்ரவரி, 2009

மனிதநேய மக்கள் கட்சியின் அழைப்பிதழ் விவரம்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. முக்கிய பிரமுகர்களுக்கான அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணி தீவிரமடைந்து விட்டது. முதல்வர் கலைஞர் மற்றும் அமைச்சர்
அமைச்சர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, விஜயகாந்த், தங்கபாலு, ஜி.கே. வாசன், வைகோ, டாக்டர் ராமதாஸ், பழ நெடுமாறன், திருமாவளவன், நடராஜன் (சசிகலா),
தா. பாண்டியன், நல்லக்கண்னு, சரத்குமார், கார்த்திக், இயக்குனர் அமீர் உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மத்தியஅமைச்சர்கள், உயர் அதிகாரிகள், முன்னனி பத்திரிக்கையாளர்கள், முஸ்லிம் பத்திரிக்கையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், சமூக சேவகர்கள், இயக்கத் தலைவர்கள், பிரமுகர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது.
இஸ்லாமிய சமுதாய அமைப்புகளில் முஸ்லிம்லீக், தேசியலீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே இஸ்லாமி, சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், மில்லி கவுன்சில், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம், தமிழ் மாநில முஸ்லிம் லீக், இஸ்லாமிய இலக்கிய பேரவை, ஜமாத்துல் உலமா உள்ளிட்ட அமைப்புகளுக்கும் முக்கிய பொறுப்பாளர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினர்.

கருத்துகள் இல்லை: