வியாழன், 19 பிப்ரவரி, 2009

துபாயில் ரத்ததான முகாம்

துபாய்: துபாயில் வரும் 27ம் தேதி ரத்ததான முகாம் நடக்கிறது.

துபாய் நகரில் உள்ள அல் வசல் மருத்துவமனையில் தமிழ்நாடு ஜமாஅத்துத் தவ்ஹீத் சார்பில் ரத்ததான முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம் வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு துவங்குகிறது. ரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ளுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தானங்களின் சிறந்த தானமான ரத்ததானம் வழங்கவதில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 050-5756518, 04-2715830.

கருத்துகள் இல்லை: