புதன், 25 பிப்ரவரி, 2009

ம.ம.க தலைமை நிர்வாகிகள் நியமனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகளாக பின்வரும் சகோதரர்கள் தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு நியமனம் செய்துள்ளது.

ஏனைய ம.ம.க தலைமை நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பு பிறகு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுளளது.

துணைப் பொதுச் செயலாளர்
எம் . தமீமுன் அன்சாரி



மனிதநேய மக்கள் கட்சி துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் எம். தமிமுன் அன்சாரி 32 வயது நிரம்பியவர். 1990 முதலே சமுதாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். பாபரி மஸ்ஜித் தொடர் பான விஷயங்களும், பழனிபாபாவின் உரைவீச்சுக்களும் இவரது கவனத்தை ஈர்த்த நேரத்தில் 1990ல் நிகழ்ந்த வளைகுடா யுத்தம் இவரை நேரடியாக அமெரிக்க எதிர்ப்புப் பிரச்சாரம் மூலமாக சமுதாயப் பணிக்கு வந்தார். 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது சக நண்பர்களோடு முஸ்லிம் மாணவர் முன்னணி என்ற அமைப்பை தொடங்கி நடத்தினார்.


நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்த எம். தமிமுன் அன்சாரி சென்னை புதுக்கல்லூரியில் 1995ல் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கையில் தமுமுகவில் இணைந்தார். பின்னர் தமுமுகவின் மாணவரணிச் செயலாளராக சீரிய முறையில் பணியாற்றினார். 1997ல் புதுக்கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் பெருவாரியான வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ல் மாணவரணி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். மாணவரணி நிர்வாகி களாக இருந்த ஹாரூண், இஸ்மத், ஹாஜாகனி, தைமிய்யா உள்ளிட்ட நிர்வாகிகளோடு தமிழகமெங்கும் 10 கல்லூரிகளில் மாணவரணியை உருவாக்கினார்.


2001ல் தமுமுகவின் மாநிலச் செயலாளராக கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப் பட்டு, தொடர்ந்து அப்பொறுப்பில் இருந்து வருகிறார். தமுமுக சார்பாக அமீரகம், குவைத், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். சிறந்த மேடைப் பேச்சாள ரான இவர் கவிஞராகவும், எழுத்தாளராகவும் விளங்கு கிறார். தற்சமயம் மக்கள் உரிமை ஆசிரியராக இருக்கின்றார்.


அமைப்புச் செயலாளர்கள் எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன்


தமுமுகவின் தொடக்கத்தில் வடசென்னை மாவட் டத் தலைவராக இருந்து, பிறகு 7 மாவட்டங்கள் உள்ளடங்கிய வட தமிழக மண்டலத் தின் பொறுப்பாளராக செயல்பட்டார். பிறகு 2001 முதல் 2007 வரை தமுமுகவின் மாநிலச் செயலாளராக செயல்பட்டார். களப் பணிகளில் சீரிய அனுபவம் கொண்ட இவர் வணிகராக இருக்கிறார்.


கே. முஹம்மது கவுஸ்


மதுரையை சேர்ந்த கே. முஹம்மது கவுஸ், தமுமுக வில் கிளை நிர்வாகி முதல் மாநிலச் செயலாளர் வரை பொறுப்புகளை வகித்தவர். சிறந்த பேச் சாளரான இவர் சீரிய களப் பணியாளராக வும் இருக்கிறார். தற்சமயம் தமுமுகவின் மாநிலச் செய லாளராக இருக்கும் இவர், மதுரையில் வணிகம் செய்து வருகிறார்.


மவ்லவி சம்சுதீன் நாஸர் உமரி


வேலூர் நகரத்தைச் சேர்ந்த மவ்லவி சம்சுதீன் நாஸர் உமரி, ஜாமிஆ தாருஸ்ஸலாம் உமராபாதில் பயின்று ஆலிம் பட்டம் பெற்றவர். வர்த்தகரான இவர் வேலூரில் பல சமூக சேவை நிறு வனங்களுடன் இணைந்து சமூக சேவை யாற்றி வருகிறார். வேலூ ரில் இயங்கும் நஸாயீ ஆங்கிலலிஅரபி பள்ளிக் கூடத்தின் தாளாளராக தற்சமயம் இருந்து வரு கிறார். தமுமுகவின் வேலூர் மாவட்ட உலமா அணிச் செயலாளராக வும் இருந்த இவர் தற்போது மாநில உலமா அணி பொருளாளராகவும் சேவை செய்து வருகிறார். உருது மொழியில் சிறந்த பேச்சாளராகவும் இவர் இருக்கிறார்.



தலைமை நிலையச் செயலாளர் டி.. முஹம்மது இஸ்மாயீல்

தமுமுகவின் தொடக்க காலம் முதல் அதில் இணைந்து சேவையாற்றி வரும் இவர், திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 2007 முதல் தமுமுக வின் துணைச் செயலா ளராக சேவையாற்றி வரு கிறார். தமுமுக தலைமைக் கழகத்தில் செயல்படும் ஷரீஅத் சமாதானக் குழு வில் நீண்டக்காலம் நிர்வாகியாக இருந்த இவர் 2004 முதல் அதன் தலைவ ராகவும் இருந்து வருகிறார்.

கருத்துகள் இல்லை: