
மனித நேய மக்கள் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையில் 25.01.2011 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மனித நேய மக்கள் கட்சியில் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த 15 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவி்த்தார்.
தங்களது கூட்டணியில் தேமுதிக இணைவது புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என தெரிவித்தார்.