புதன், 9 பிப்ரவரி, 2011

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்லிம்களை கைதுச் செய்தது அநீதம் - தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர்



புதுடெல்லி,பிப்.9:மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சில முஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்த நடவடிக்கை சரியல்ல என தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவராக பொறுப்பேற்றுள்ள வஜாஹத் ஹபீபுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கெதிராக எவ்வித ஆதாரமும் இல்லை. இனிமேலும் அவர்களை சிறையில் அடைத்திருப்பது அநீதமாகும் எனக் கூறிய ஹபீபுல்லாஹ், இது தனது தனிப்பட்டக் கருத்து எனக் குறிப்பிட்டார்.

சுவாமி அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்ய முயற்சி மேற்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஹபீபுல்லாஹ், "அக்காரியத்தைக் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன்" என பதிலளித்தார்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதுக் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, இடஒதுக்கீட்டினால் மட்டும் முஸ்லிம்களின் வாழ்க்கையை சீரமைக்க முடியாது. அரசு வேறு சில நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

ஒவ்வொரு மாநிலமும் சிறுபான்மை கமிஷனை உருவாக்க வேண்டுமென தெரிவித்தார் அவர்.

செய்தி:மாத்யமம்

கருத்துகள் இல்லை: