திங்கள், 21 பிப்ரவரி, 2011

ம ம க வுக்கு மூணு சீட்டு? ஒரு சமுதாய ஊழியனின் குமுறல்

ம ம க வுக்கு மூணு சீட்டு? ஒரு சமுதாய ஊழியனின் குமுறல்
மனித நேய மக்கள்கட்சியாவது மூன்று தொகுதியை தனி சின்னத்தில்வாங்கியுள்ளது..இதுவரை
எந்த முஸ்லிம் கட்சியாவது இதை யாவது சாதித்ததா ? கருணாநிதி முஸ்லிம் களின் அரசியல் எழுச்சியை அடக்க நினைத்து ஒரு சீட் மட்டுமே நாடாளுமன்றத்தில் கொடுப்போம் என் கொக்கரித்தார்.திமுக வை பொறுத்தவரை முஸ்லிம்கள் தான் அக்கட்சியின் பிரதான வாக்கு வங்கி முதல்வர் , துணை முதல்வர் நிதியமைச்சர் என எல்லோரும் முஸ்லிம் பெரும்பான்மையான தொகிதிகளில் தான் வென்றுள்ளனர். எம் ஜி ஆர் என்ற சக்தியை திமுக 13 ஆண்டுகள் சமாளித்து கட்சியை நடத்தியதே முஸ்லிம்கள் ஆதரவை வைத்து தான் முஸ்லிம்களின் ஒருங்கிணைந்த ஆதரவு இல்லைஎன்றால் திமுக 77 ,84 89 91 ஆகிய தேர்தல்களில் டெபாசிட்டினைகூட பல தொகுதிகளில் இழக்கும் நிலை ஏற்பட்டிருக்ககூடும் .திமுக் ஒரு சமுதாயத்திற்கு நன்றி கடன் பட்டிருக்கிறது என்றால் அது முஸ்லம் சமுதாயத்திற்கு மட்டுமே ஆனால் நன்றி மறந்த திமுக முஸ்லிம் அரசியல் எழுச்சியை முன்னிறுத்தும் கட்சியான மமகவைஉதாசீனம் செய்தது.
ம ம க தன்மான அரசியலை முன்னிறுத்தியது. இந்த சமுதாயம் தன்னை சேயைக்கண்ட தாயை போல் வாரிஅணைக்கும் என அந்த கட்சித்தலைமை தப்புக்கணக்கு போட்டது. . சமுதாயத்தின் தன்மானம் காக்க புறப்பட்ட அந்த கட்சிக்கு சமுதாயம் எதை பரிசாக கொடுத்தது. ?ஏமாற்றத்தை பரிகாசத்தை அவதூறை கடைசியாக படுதோல்வியை அன்பளிப்பாக கொடுத்தது. அவர்கள் தனிப்பட்ட லாபத்தை நோக்கத்தை கணக்கில் கொண்டு நடந்திருந்தால் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.நம்மை சமுதாயத்தை நம்பியதால் அவர்களுக்கு அந்த அவல நிலை ஏற்பட்டது எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் ஒரு கட்சியின் கடந்த கால அரசியல் தேர்தல் வெற்றி தோல்வி நிலவரங்களை வைத்து தான் அவர்கள், உடன்பாடு பேசுவார்கள் . மமக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன ரிசல்ட்டை வைத்துள்ளது என்பது தான் நமக்கு தெரியுமே ?
இதில் தமிழக் சட்டமன்றத்திற்கு 3 புதுவையில் ஒன்று மற்றும் தமிழ் நாட்டில் இரண்டு வாரியங்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.என தெரிய வந்துள்ளது. இது வே ஓவர் ம ம க வின் கட்டமைப்பிற்கு அதன் தொண்டர் பலத்தை வைத்து தான் இதுவாவது கிடைத்தது என அரசியல் பார்வையாளர்கள் சொகிறார்கள்
இதற்கு முன்பு
அதிக தொகுதிகள் போட்டியிட்ட திமுக அதிமுக மதிமுக போன்ற கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளை குறைக்கும் நிலையம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ம ம க வை கிண்டல் செய்வது நிச்சயம் சமுதாய துரோகமாகும் இதை ஊக்குவிப்பவர்கள் ஒன்று விவரம் புரியாதவர்கள் அல்லது சமுதாய துரோகிகள் என்றே சமுதாயம் தூற்றும் .

கருத்துகள் இல்லை: