திங்கள், 21 பிப்ரவரி, 2011

சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து பிரிவினைவாத தலைவர்களை நீக்க வேண்டும். ஒரு சமுதாய ஊழியரின் குமுறல்


சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து பிரிவினைவாத தலைவர்களை நீக்க வேண்டும். அதுவரை முஸ்லிம் சமுதாயத்துக்கு விமோசனம் கிடைக்காது.இன்று தமிழகத்தில் 9 கோடி மக்களில் கிட்டத்தட்ட 2 கோடி முஸ்லிம்கள் இருந்தும்.>>> 50 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உறுப்பினராக இருக்க வேண்டிய இடத்தில் 4 சீட்டுக்கூட கிடைக்காத நிலைக்கு காரணம் என்ன?
பிரிவினையில் இன்பம் காணும் இயக்கவாதிகள்தான்.
நமது சமுதாயத்தை பல கூறுகளாக பிரித்துவிட்டு > ஒரு இயக்கத்தின் ஆதரவாளர் மற்றொரு இயக்கத்தின் செயல்களை விமர்சித்துக்கொண்டும்.
காபிர்களை விட அதிகமாக முஸ்லிம் சகோதரர்களை வெறுத்துக்கொண்டும்.
ஏதோ இவர்கள் மட்டும் நல்லவர்கள் இவர்களுக்கு மட்டும்தான் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது ஆதிக்கமும்? அக்கறையும் !!! இருப்பதுபோல். நினைத்துக்கொண்டு மற்ற இயக்கவாதிகளை. தாக்கிப்பேசுவதும் எழுதுவதும். பார்த்தாயா எனது பதிவிற்கு பதிலையே காணோம். என்று தமக்கு தாமே பெருமைப்பட்டுக்கொள்வதும். ஒருவர் காலை ஒருவர் வாறி விட்டு அதிலே இன்பம் காணுவதும், (குறிப்பாக) தமிழக இயக்கவெறியர்கள். சமுதாயத்தை கூறு போட்டதால்தான்>> இந்த நிலைமை ஏற்பட்டது.

தமிழகத்தில் எங்களைவிட பெரிய இயக்கம் இல்லை என்று தட்டிக்காட்டுபவர்கள். எங்களைவிட பெரிய கூட்டம் இல்லை என்று கூட்டிக்காட்டுபவர்கள். தங்கள் சக்தியை நிரூபிக்க தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்யும் தி.மு.க அல்லது அ.தி.மு.க கட்சியிடம் தங்களது பெரும்பான்மையை காட்டி தங்களின் சார்பில்
குறைந்தது 10 சீட்டுகளையாவது முஸ்லிம் சமுதாயத்துக்கு வாங்கித்தரலாமே? உங்க இயக்கத்துக்கு வேண்டாமய்யா > எந்த கட்சியில் 10 க்கும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்களுக்கு சீட்டு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எங்கள் ஆதரவு என்று பேசி பாருங்களேன்.
அதை விட்டு விட்டு வெட்டிப்பேச்சி வீரர்களாக > மைக்குப்பேச்சி வீரர்களாக > அழுக்கு நுரைபோல் கூட்டம் கூடி என்ன பயன்?. கட்சிகள் கொடுக்கும் காசுக்காக > முஸ்லிம்கள் போட்டியிடும் தொகுதியில் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும். காபிர்களின் கட்சிக்கொடியை பிடித்துக்கொண்டு முஸ்லிம்களை எதிர்த்து முஸ்லிம்களே போரடுவது போன்ற (ஜமாத்து )இயக்கத்துக்கு பின்னால் ஒரு முஸ்லிம் கூட்டம்.
தாங்களும் அரசியலில் இறங்கி போட்டி போடமாட்டர்களாம். அடுத்த இயக்கத்தை சார்ந்த முஸ்லிம் போட்டி போட்டாலும் ஜெயிக்க விட மாட்டாங்களாம். இது இவர்களின் இயக்க கொள்கையாம். இப்படி அறிக்கைவிட வெட்கமாக இல்லையா ? இவர்கள்தான் முஸ்லிம் சமுதாயத்துக்கு பாதுகாவலர்களா?
. முஸ்லிம் சமுதாயம் இத்தகைய இயக்கங்களால் சந்திக்கும் சமூக இழப்பைப்பற்றி சிந்திக்க வேண்டும். இயக்கவெறியர்கள் இருக்கும்வரை இயக்கங்கள் அழியாது,
இயக்கங்கள் அழியாதவரை சமுதாய ஒற்றுமை ஏற்படாது.
சமுதாய ஒற்றுமை ஏற்படாதவரை முஸ்லிம் சமுதாயத்திற்கு எந்த கட்சியும் மதிப்பளிக்காது.
கட்சிகளின் பிரித்தாலும் சூழ்ச்சிக்கு நம் சமுதாயம் பழியாகிவிட்டது.
இயக்கத்தலைவர்கள் (தங்கள் பெருமை புகழ் பதவி பணம் போன்ற ) சுயநலத்துக்காக நம் சமூகத்தை பழி கிடாவாக்கி விட்டர்கள்.
இயக்கவெறி பிடித்தால் சமுதாய சிந்தனை இல்லாமல் போய்விடும். என்பதை கண் கூடாக பார்த்தும் திருந்தாதவர்களுக்கு அல்லாஹ்தான் நேர்வழி காட்டவேண்டும்.
உலகம் முழுவதும் சூழ்ச்சியும் ஆட்சியும் மாறி வருகிறது. தலைவர்கள் விரட்டப்படுகிறார்கள். நாட்டை விட்டு ஓடுகிறார்கள். நம் நாட்டு தலைவர்களுக்கும். நம் சமுதாய தலைவர்களுக்கும் இப்படி ஒரு நிலைமை சீக்கிரம் வர வேண்டும். சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து பிரிவினைவாத தலைவர்களை நீக்க வேண்டும். அதுவரை முஸ்லிம் சமுதாயத்துக்கு விமோசனம் கிடைக்காது.

சிந்திப்போம் செயல்படுவோம்.

S.N.ABDUL ALEEM
RIYADH - K.S.

source :


கருத்துகள் இல்லை: