ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

ஸ்மார்ட் சிட்டி

அரபிக் கடலின் அழகி
என வர்னிக்கப்படும் அழகிய நகரம் தான்
கொச்சி என அழைக்கப்படும் எர்னாகுளம்.
ஐந்து சிறிய தீவுகளை கொண்ட நகரம் எனவும் சொல்லலாம்.
மிக நீண்ட சேர நாட்டில் தற்போது வளர்ந்து வரும் ஒரு நகரம்.

கொச்சியில் உள்ள மக்களுக்கும், மற்றும் ஏனைய பாகங்களில் உள்ள
மலையாளிகளும் மிகவும் எதிர்பார்த்த ஒன்று 'ஸ்மார்ட் சிட்டி.'
ஐந்து வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த திட்டம்,
இத்தனை காலமாக அச்சுதானந்தன் அரசின் மெத்தனத்தில் தள்ளி..தள்ளி.. செல்ல,
சில தினங்களுக்கு முன்பு தான் இந்த திட்டம் இறுதி வடிவம் பெற்றது.
இதற்காக இறுதியாக அரும்பாடு பட்டு இந்த திட்டத்திற்கு உறுதுனையாக இருந்த
'யூசுப் அலி' மலையாளிகளின் மனதில் கதா நாயகன் ஆனார்.



'ஸ்மார்ட் சிட்டி' என்றால் நமக்கு பழகிய பாஷையில் சொல்ல 'இன்டர்னெட் சிட்டி'.
இது தான் அங்கே உள்ள காக்கனாடு பகுதியில் வரப்போகுது.
இது வரப்போகுது என தெரிந்து இந்த பகுதியைச் சுற்றி
ஏராளனமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்க்கப்பட்டு
நல்ல வாடகைக்கு விட வாங்கியவர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, இந்த பகுதி சுற்றிலும் ஏராளனமான வணிக வளாகங்கள்,
இன்னும் பல வியாபார முன்னேற்றங்கள் தயாராகி இருக்கின்றன.




இதன் வருகையால் வேலைவாய்ப்பு பெருகும்.
தொடக்கத்தில் ஸ்மார்ட் சிட்டியில் மட்டும்
தொன்னூறாயிரம் பேருக்கு வேலை கிடைக்குமாம்.
வாவ்வ்வ்வ்வ்..
ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர்.



அடுத்து கொச்சியில் வருவது வல்லார்பாடம் என்ற இடத்தில்
புதியதாக திறந்த container terminal .
இன்னும் இதை சொல்லவேண்டுமானல் transhipment container terminal என சொல்லலாம்.
உதாரனமாக இந்தியாவிற்கு வரும் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள்
கொழும்பு அல்லது சிங்கப்பூர் சென்று பின்னர் தான்
இந்தியா வருகிறது.. ஆனால், இந்த டெர்மினல் வந்த பின் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள்

எல்லாம் நேரடியாக இந்த துறைமுகம் வந்து
இங்கே இறக்குமதியாக சாலைவாழியாகவோ,
அல்லது சரக்கு இரயில் மூலமாகவோ
நாட்டின் பல பாகங்களுக்கும் செல்லும்.
துவக்கத்தில் பத்து இலட்சம் கன்டெய்னர் வருமாம்.
பின்னர் சில காலங்களில் அது முப்பது இலட்சமாகுமாம்.
நல்ல விஷயம் தானே.



ஆனால் ஐந்து வருடமாக
அச்சுதானந்தன் அரசால் இழுத்தடிக்கப்பட்ட
ஸ்மார்ட் சிட்டியை நமது தமிழர்கள்
நம்ம தமிழகத்திற்கு கொண்டு வர நினைத்து இருந்தால்
அந்த வேலை வாய்ப்புகள் நம்ம ஊருக்கு வந்து இருக்குமே..
தமிழன் வழக்கம் போல தூங்குகிறானா?
இல்லை போனால் போகுது என விட்டு விட்டோமா?!

http://nalamnalamariya.blogspot.com/2011/02/blog-post_13.html

கருத்துகள் இல்லை: