புதன், 9 பிப்ரவரி, 2011

மாயாவதி செருப்பை துடைத்த பாடிகார்ட்: மீண்டும் சர்ச்சையில் உ.பி முதல்வர்

அவுரியா,பிப்.8:உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி அணிந்திருந்த செருப்பை பணியில் இருந்த மெய்க்காப்பாளர் தனது கைக்குட்டையால் துடைத்துள்ளார்.அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவது மாயாவதிக்கு வழக்கமாகிவிட்டது. முன்பு பொதுக் கூட்டத்தில் ஆள் உயர பணமாலை, நொய்டாவில் அரசு செலவில் தனக்கு சிலை என ஒரு பெரிய சர்ச்சை பட்டியலே உள்ளது.இந்நிலையில் தற்போது தனது மெய்க்காப்பாளரை தனது காலணியைத் துடைக்க சொல்லி தரைக்குறைவாக நடத்தியுள்ளார்.
மாயாவதி இவ்வாறு சொல்வார் என்று சற்றும் எதிர்பாராத அந்த அதிகாரி மறுமொழி பேசாமல் தனது கைக்குட்டையால் காலணியைத் துடைத்துள்ளார். அவர் காலணியில் உள்ள தூசியைத் துடைக்க மாயாவதியோ தனக்கெனவென்று அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: