ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

10 கிலோ இலஞ்சம் வாங்கிய நால்கோ தலைவர் மனைவியுடன் கைது-சிபிஐ காவல்!


புதுடெல்லி: 10 கிலோ இலஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட தேசிய அலுமினிய நிறுவனம் எனும் நால்கோ நிறுவனத்தின் தலைவர் ஏ.கே. ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட 4 பேருக்கு மார்ச் 4-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அலுமினிய நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீவஸ்தவா, அவரது மனைவி மற்றும் இருவர் லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுதில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை சிபிஐ விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக மார்ச் 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.