சனி, 26 பிப்ரவரி, 2011

மனித உரிமையா? கிலோ எவ்வளவு? கேட்க்கும் குஜராத்!!


புதுடெல்லி,பிப்.25: 'இன்ஸ்டிடியூட் ஆஃப் அப்ஜெக்டிவ் ஸ்டடீஸ்' என்ற அமைப்பின் சார்பாக "குஜராத்தின் நிலைமை குறித்து ஆராயப்பட்டு கொடுக்கப்பட்ட அறிக்கை என்னவென்றால்.

(1) வருமான அளவீட்டில் பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் இருக்கும் குஜராத், இன்னும் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் (Human Development Index) கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகாவை விட பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. மேலும், மிகவும் பின்தங்கிய மாநிலமான ஒரிஸா கூட தற்போது தங்களின் நிலமையை மனித மேம்பாட்டுக் குறியீட்டிலும், ஏழ்மையிலிருந்து ஏழ்மையற்ற நிலைக்கு தன்னை முன்னேற்றி வருவதில் முனைந்து செயல்பட்டு வருகிறது.

ஆனால் வருமானத்தில் நான்காம் இடத்தில் இருக்கும் குஜராத் பசி, பட்டினி அதிகம் உள்ளோர் மாநிலப் பட்டியலில் முதலில் பதிவாகி இருப்பது அதிர்ச்சி தரக் கூடியது. வருமானம் அதிகம் உள்ள ஒரு மாநிலத்தில் பசி, பட்டினி இருப்பது மிகவும் வியக்கத்தக்க ஒன்று என்று தெரிவித்தார். இதைச் சற்று கூர்ந்து கவனிக்கும்பொழுது, குஜராத்தில் முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் மட்டுமே வறுமையிலும், வருமானத்தில் சமமற்ற நிலையிலும் வேரூன்றி இருப்பதை உணர முடிகிறது. அதிகமான முஸ்லிம்களே ஏழ்மையான நிலையில் வலுக்கட்டாயமாக வாழ வைக்கப்பட்டுள்ளனர்.

(2) கல்வி ரீதியிலும், முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட நிலையில் உரிமை பறிக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் குழந்தைகள் தொடக்க நிலைப் பள்ளியில் 75 சதவிகிதம் சேர்ந்தாலும், வெறும் 26 சதவிகிதம் மட்டுமே உயர்நிலைப் படிப்புக்குச் செல்கின்றனர்.

(3) இந்த அறிவிப்பின் மூலம், நாம் அறியக்கூடிய மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால் குஜராத்தில் மட்டுமே 2 சதவிகித முஸ்லிம்கள் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். 11 சதவிகித மக்கள் அடிப்படைத் தேவைகளான வீட்டு உபயோகப் பொருட்கள் எதுவுமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தேசிய அளவில், 13 சதவிகித முஸ்லிம்கள் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள் என்பது மற்றொரு தகவல்.

(4) நகர்ப்புறங்களில் முஸ்லிம் பெண்களின் நிலையைக் கவனிக்கும் பொழுது, அதிக அளவில் தொந்தரவுக்கு உட்படுத்த படுபவர்களில் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையே அதிகம். 11 சதவிகிதம் மட்டுமே உள்ள மக்கள் தொகையில், 17 சதவிகித வழக்குகள் பதிவாகியுள்ளது மிகவும் வருத்தத்தில் ஆழ்த்துகிறது.

(5) இன்னும் மிகக் குறைந்த அளவில் பணிபுரிபவர்களும், அதிக அளவில் படிப்பறி வற்றவர்களும் முஸ்லிம்களில் உள்ளனர். மரபு ரீதியாக பார்க்கையில் முஸ்லிம்கள் கலை, இயந்திரம் மற்றும் கருவிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் ஆட்சியில் இருந்த போது மற்ற மக்களை விட வைர வியாபாரத்திலும், கைத்தறி வியாபாரத்திலும் அதிக அளவில் இருந்தனர். ஆனால், இன்றைய முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாகி விட்டது. பொருட்கள் உற்பத்தி செய்யும் பணிகளுக்கும், நிர்வாகப் பகுதியில் உள்ள வேலைகளுக்கும் இன்று அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.