வியாழன், 23 டிசம்பர், 2010

தலித் பெண்ணை ஒரு வாரமாக வன்புணர்ந்த கும்பல்!

தலித் பெண்மணி ஒருவர் சமூக விரோத கும்பலால் கடத்தப்பட்டு, ஒரு வாரகாலமாக வன்புணரப்பட்ட கொடுமைச் சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் லலித்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 6ஆம் தேதியன்று, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த 35 வயதான தலித் பெண்மணி ஒருவரை சோட்டேலால் என்பவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கடத்திச் சென்றனர். கடத்திச் செல்லப்பட்ட அந்த பெண்ணை மயோன் என்ற கிராமத்தில் அடைத்து வைத்து ஒரு வார காலமாக கூட்டாக வன்புணர்வுக்கு உள்ளாக்கினர். அதிருஷ்டவசமாக சமூக விரோத கும்பலிடமிருந்து தப்பிய அப்பெண்மணி தனது மாமியார் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். பின்னர் அவர்கள் சம்மந்தப்பட்ட கும்பல் மீது கோட்வாலி காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இதன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, சோட்டேலால் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: