புதன், 8 டிசம்பர், 2010

பாலஸ்தீன் நாட்டை பிரேசில் அங்கீகரித்து உள்ளது.



பாலஸ்தீனை அதன் 1967ஆம் ஆண்டின் எல்லைப்படி தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரேசில் அறிவித்துள்ளது. பிரேசிலின் இந்த அறிவிப்பிற்கு இஸ்ரேல் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.பாலஸ்தீன அதிபர் அப்பாசுக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா எழுதியுள்ள கடிதத்தில், 1967ஆம் ஆண்டின் எல்லைகளின் படி பாலஸ்தீனை தனி நாடாக பிரேசில் அங்கீகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், பாலஸ்தீன் மக்களின் குடியிருப்புகளை இடித்துவிட்டு அங்கு யூதக் குடியிருப்புகள் அமைக்கும் பணிகளை இஸ்ரேல் நிறுத்தும் வரை தாம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: