செவ்வாய், 14 டிசம்பர், 2010

முஸ்லிம்களை இழிவுபடுத்திய காவல்துறையை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

திவிரவாதிகள் தாக்குதலில் இருந்து போலீசார் எவ்வாறு பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து திண்டுக்கல்லில் போலீசார் ஒத்திகை நடத்தும் நிகழ்ச்சி டிசம்பர் 09, 2010 அன்று நடந்தது. திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது போலவும், தபால் நிலையத்தில் பதுங்கிக் கொள்வது போலவும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீவிரவாதி களாக சித்தரிக்கப்பட்டவர்கள் தாடி வைத்த முஸ்லிம்கள் போன்ற தோற்றத்தை போலீசார் அமைத்திருந்தனர். இந்த செய்தி மறுதினம் புகைப்படத்துடன் வெளிவந்தது. புகைப்படத்தைப் பார்த்த முஸ்லிம்கள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாயினர். போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சி தங்களை அவமானப்படுத்துவது போல் இருப்பதாக கூறி, திண்டுக்கல் பேகம்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளைச் சேர்ந்தவர்கர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல்-மதுரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், போலீசாரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

உயர் அதிகாரிகள் வருத்தம்

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், முருகன் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன் பாடு ஏற்பட வில்லை. போலீஸ் உயர் அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்.சிவானந்தம், நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோர் வந்து சமரசம் செய்தனர். இறுதியில் போலீஸ் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மதுரை சாலையில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால், போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மதுரை செல்லும் வாகனங் கள், திண்டுக்கல்லுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மறியல் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங் கியது.

தமிழக காவல்துறையின் இந்த செயலுக்கு தமுமுக தலைவர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது..

“தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல் துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டை யாடுவதாக போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதி களைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந் துள்ளது.

போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதி களுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்தரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.

சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர் களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பது போல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்கச் செய்து பத்திரிகை களில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர் வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.

உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந் தப் படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக் கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்ப தாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?

தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம் களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள் ளதற்கு தமுமுக வன்மையான கண்டனத் தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.”மேற்கண்டவாறு தனது அறிக்கையில் தமுமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: