செவ்வாய், 25 ஜனவரி, 2011

நவீன உலகின் ஹிட்லர்!!! அவர்தான் நரேந்திர மோடி!!


குஜராத் சோகங்கள் ஒரு பார்வை: நவீன உலகின் ஹிட்லராக தன்னை அடையாளபடுத்தி கொண்ட குஜராத் முதல்வர் மோடியின் கட்டளையின் பெயரில் குஜராத் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரால் கலவரம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்து, பெண்களைக் கற்பழித்து, முஸ்லிம் பெண்களின் கருப்பையைக் கிழித்து பட்சிலம் பிஞ்சு குழந்தைகளை வாள் முனையில் சொருகிக் கொன்று ரத்த வெறியாட்டம் ஆடியது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம்.

குஜராத் கலவரத்தை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் எப்படி திட்டமிட்டு நடத்தினார்கள் என்பதை அவர்கள் வாயாலே வெட்கம் இல்லாமல் தெகல்கா வீடியோ முன் அப்பட்டமாக நின்று எப்படித் திட்டமிட்டோம், எப்படிக் கொன்றோம் என்று குற்றவுணர்ச்சியே இல்லாமல் விவரித்தார்கள். இப்படி கொலை செய்து கலவரங்கள் நடத்தும் ஆர்.எஸ்.எஸ் கொலைகாரர்களை பற்றிய செய்திகள் வெளியிட இந்த பார்பன ஹிந்துவா பத்திரிக்கைகளுக்கு மனம் வரவில்லை. இவர்கள் செய்த கலவரங்களை, இந்தியா முழுவதும் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகள் பற்றி வாய்திறக்காமல் தொடர் மவுனவிரதம் இருந்து வருகிறார்கள். அது மட்டும் இல்லை அத்வானி, மோடி, பால்தாக்ரே, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத், போன்றவர்களை வரலாற்று நாயகர்களாக சித்தரிக்க தலைப்படுகிறார்கள்.

இந்த கலவரங்களை நடத்த நீண்டகாலம் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளனர். குஜராத்தில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் பல பத்தாண்டுகளாக அங்கே வேலை செய்திருக்கிறது. கலவரத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே குஜராத்தைப் பற்றிய ஒரு முழுமையான சர்வேயை வி.எச்.பி எடுத்துள்ளது. அதில் முஸ்லிம்கள் மக்கள் தொகை, முஸ்லிம்கள் செய்து வந்த வியாபாரம் போன்ற விவரங்களைத் திரட்டி முன் தயாரிப்பு செய்திருக்கிறார்கள். வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் மூலம் பழங்குடியினரிடையே ஊடுருவி அவர்களிடையே மதவெறி நஞ்சூட்டி முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராய் அணி திரட்டியிருக்கிறார்கள்.

இந்த கலவரம் ஒன்றும் சட்டென்று நிகழ்ந்ததல்ல பல்லாண்டுகளாகத் திட்டமிட்டு படிப்படியாக ஊடுருவி ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்களையே பாசிசமயமாக்கியிருக்கிறார்கள். இத்தனை விமரிசையாக அம்பலப்பட்ட பின்னும் மோடியின் தேர்தல் வெற்றி சாத்தியமாகி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இது தான். நாஜிக் கட்சியினர் எப்படி ஜெர்மானியர்களின் மனங்களை பாசிசமயமாக்கி யூதர்களுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வெறும் பார்வையாளர்களாக ஆக்கினார்களோ அதே வழிமுறையைத் தான் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் குஜராத்தில் பின்பற்றியது – தேசமெங்கும் அதையே விரித்துச் செல்லும் திட்டத்தையும் வைத்துள்ளது. அதனால்தான் குஜராத் இந்துத்வத்தின் சோதனைச் சாலையாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை: