திங்கள், 3 ஜனவரி, 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக மாநிலத் தலைவராக A.S.இஸ்மாயில் தேர்வு

ஜன.3:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக மாநில நிர்வாகிகள் தேர்வு தேனி மாவட்டத்தில் நடந்த மாநில பொதுக்குழுவில் நடைப்பெற்றது.

இத்தேர்தலுக்கு தேசிய பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் தலைமைத் தாங்கினார். முன்னாள் பொதுச்செயலாளர் பக்ருத்தீன் அறிக்கை வாசித்தார். பின்னர் நடந்த நிர்வாகிகள் தேர்தலில் தமிழக மாநிலத் தலைவராக கோவை மாவட்டத்தைச் சார்ந்த A.S.இஸ்மாயில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

A.S.இஸ்மாயில் ஏற்கனவே தமிழக மாநில பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார். இதர நிர்வாகிகள் வருமாறு:
நிஜாம் முஹியத்தீன் - பொதுச்செயலாளர்
முஹம்மது இஸ்மாயில் - துணைத்தலைவர்
இப்ராஹீம் என்ற அஸ்கர் - பொருளாளர்
முஹம்மது ஷேக் அன்ஸாரி, காலித் ஃபைஸல் அஹ்மத் - செயலாளர்கள்:

தேர்தல் நிகழ்ச்சியின் இறுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் உரை நிகழ்த்தினார்.
source:popularfrontindia.org

கருத்துகள் இல்லை: