ஞாயிறு, 23 ஜனவரி, 2011

தினமலரின் காவி நரித்தனம்

இஸ்லாமிய மக்களுக்கு எதிரான செய்திகளை உருவாக்குவதில் தினமலரின் பங்கு கனிசமானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இது போன்ற காவி ஊடகங்கள் முஸ்லிம்களுக்கெதிராக மட்டுமில்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராகவும் செய்திகளை வெளியிடுகின்றனர். மண்டல் கமிஷனுக்கு எதிராக உயர் ஜாதி வகுப்பினர் நடத்திய போராட்டங்களைப் பூதாகரமாக்கி வெளியிட்டனர். நாடே இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கினர். இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்களைத் திட்டமிட்டு மறைத்தனர்.
”வாளின் முனையை விட பேனாவின் முனை வலிமை மிக்கது”
என்பது நாம் வாழும் காலத்திற்கே மிகவும் பொருந்தி வருகிறது.
“ஆவதும் ஊடகத்தாலே அழிவதும் ஊடகத்தாலே” என்பது நிதர்சன உண்மை ஊடகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைப்பவர் உலகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். மக்களின் சிந்தனை, நடை, உடை, பாவனை, உணவு, பொழுதுபோக்கு இத்தனையிலும் ஊடகங்கள் தாக்கத்தை ஏற்ப்படுத்துகின்றன.
அவர்கள் மக்களை சிந்திக்க விடுவதில்லை. மக்களுக்காக அவர்கள் சிந்திக்க விரும்புகிறார்கள். மேல்நாட்டு ஆதிக்க சக்திகளும் நம் நாட்டு ஆதிக்க சக்திகளும் இஸ்லாத்தைத் தமது பொது எதிரியாகக் கருதுகின்றன. பொதுவாக ஆதிக்க சக்திகள் ஒரு பொது எதிரியைக் காட்டியே தமது பலத்தை பெருக்கிக் கொள்வர். கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவர்கள் ஒரு பொது எதிரியை தேடிக் கொண்டிருந்த வேளையில் முஸ்லிம்களில் ஒரு நுண்ணிய பிரிவினர் செய்த வன்முறைச் செயல்கள் அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எல்லா நிலைகளிலும், எல்லா வகைகளிலும் மோசமாகச் சித்தரித்து முஸ்லிம்கள் மீது வெறுப்பை உண்டாக்கி சமூகங்களுக்கிடையில் இடைவெளியை அதிகரிப்பது என்ற ‘ஒற்றைத் திட்டத்தின்’ கீழ் செயல் பட துவங்கினர். அதற்காக அவர்கள் பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.
உதாரணத்திற்கு 22/01/2011 சனிக்கிழமை இன்று தினமலரின் வலைத்தளத்தியுள்ள முகப்பு செய்தியை பாருங்கள்.


16hrs : 49mins ago
பெங்களூரு : கர்நாடக மாநில கவர்னருக்கு எதிராக ஆளும் பா.ஜ., நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ஜ., தொண்டர்கள் மாநிலம் முழுவதும் 30 பஸ்களை தீ வைத்து கொளுத்தினர். .
என்ற செய்தியை சிறிய புகைப்படத்தோடு போட்டு விட்டு
உடனே பா. ஜ.க 30 பஸ்களை கொளுத்தியவுடன் பா.ஜ வன்முறை கட்சி என்று மக்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக. இதுலாம் சின்ன வன்முறைங்க இதைவிட பெரிய வன்முறையேல்லாம் முஸ்லிம்கள் நடத்தி இருக்கிறார்கள் என்பதை நிருபிக்க காஷ்மீர் சம்பந்தமான வீடியோவை சம்பந்தமே இல்லாமல் வெளியிட்டுயிருக்கிறார்கள் (அதாவது பா.ஜ வுக்கு புகைப்படம் என்றால் முஸ்லிம்களுக்கு அதைவிட பவர்புல்லான காணொளி)
video
இந்த வீடியோவை பார்த்தீர்களா? கடந்த வருடத்தில் காஷ்மீர் மக்கள் செய்த கலவரத்தால் அரசுக்கு ஏற்ப்பட்ட இழப்பு 700 கோடியாம் (இதோடு 30 பஸ்களை இனைத்து பார்த்தால் இது சாதரணம் அல்லாவா) சுற்றுலா தொழில்துறையில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கு சேர்க்கவில்லையாம் .
ஒரு கல்லில் இரு மங்காய் அடிக்கிற ஆதிக்க சக்தியின் ஊடகத்தின் நரித்தனத்தை பாருங்கள்.
1. காஷ்மீர் காட்டுமிராண்டி முஸ்லிம் மக்களை விட பா.ஜ.தொண்டர்கள் இந்திய நாட்டிற்கு பெரிய நஷ்டத்தை ஏற்ப்படுத்தி விடவில்லை.

2.பார்த்தீகளா காஷ்மீர்ல தேவையில்லாமா போராடி இப்ப பாதிப்பு யாருக்கு அந்த மக்களுக்கு தான் பாத்தீகளா காஷ்மீர்ல தொழில் துறைகள் நசிந்து வறுமையில 10 வருஷம் பின்னாடி போயிட்டாக அதனால அரசங்கத்த எதிர்த்து யாரும் போராட கூடாது .போராடினால் காஷ்மீர்க்கு ஏற்பட்ட நிலை தான் எல்லாருக்கும் என்று மறைமுகமாக பயமுறுத்தி அட்வைஸ் பன்னி ஊளை விடுகிறது தினமலர் காவி நரி தமிழ்நாட்டில் நம்பர் ஒன் பத்திரிக்கைகாக போட்டியிடும் மற்ற பத்திரிக்கையான,


























இந்த கல்லெறித் திருவிழாவிற்கு காரானமானவன் ஜனவரி எட்டாம் தேதி காஷ்மீரில் கொல்லப்பட்ட இனாயத்கான் என்ற பதினாறு வயது இளைஞன் தான் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வு பெற்ற துடிப்பான பையன் டூவிஷன் வகுப்புக்குப் போகும் வழியில் பாதுகாப்புப் படையினர் அவனை சுட்டு கொன்றனர். அவனை அடக்கம் செய்யும் போது, இனாயத், தேரே கூன்ஸே இன்கிலாப் ஆயேகா” (இனாயத் உன்னுடைய உதிரத்திலிருந்து புரட்சி வந்தே தீரும்) எனும் முழக்கம் விண்ணை அதிர வைத்தது இறந்த உயிர்களுக்கு நீதி கேட்டு சொந்த உயிர்களை பணயம் வைத்து முடிவுறாத முழக்கங்களுடன் தெருவுக்கு வருகிறார்கள் இனியும் வருவார்கள்.
கொல்லப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே இருக்க, நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக செய்திகளை மறைப்பதற்குத்தான் அரசு பெரிதும் முயன்றது.
சென்ற ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பாதுகாப்புப் படையினர் பதின்பருவ இளைஞர்களைக் குறி வைத்துத் தாக்கி வருகிறார்கள் மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி 57க்கும் மேற்பட்டவர்கள் இது வரை கொல்லப்பட்டார்கள். சிலர் விளையாட்டு மைதானத்திலும் வீட்டுச்சரிவுகளின் அருகிலும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவ்வாறு கடந்த juneல் மட்டும் 13 குழந்தைகள் துடிதுடித்துச் செத்திருக்கிறார்கள், ஸ்ரீநகரில் கனி மெமோரியல் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற பதின்மூன்று வயதே ஆன வமிக் பாரூக் ஜனவரி 31ஆம் நாள் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி இறந்தான் அடுத்த ஐந்து நாள்களுக்குள் ஷாஹித் பாரூக் எனும் பதினாறு வயது இளைஞன் தன் வீட்டின் அருகிலேயே எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) கொல்லப்பட்டான். ஏப்ரல் 13ஆம் நாள் ஜீலம் நதிக்கரை ஒரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் சுபைர் அஹமது பட்(17) இராணுவத்தினர் தங்களை நோக்கி வருவதைக் கண்டதும் பிள்ளைகள் நதியில் குதித்து விட்டனர். மற்றவர்கள் எல்லாம் நீந்திக் கரை சேர்ந்தபோது சுபைர் மட்டும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டன். அவனைக் காப்பாற்றப் படகுக்காரர்கள் சிலர் முயன்ற போதும் அவர்கள்மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டி அடித்தது இராணுவம். அதனால் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சுபைரின் சாவை சாதாரண விபத்து என்று குறிப்பிட்டு வழக்கை முடித்திவிட்டார்கள். நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை இதுதான் இந்திய அரசாங்கம் கஷ்மீரிகளுக்கு வழங்கும் பாதுகாப்பின் இலட்சனம். ஒரு சுகந்திர நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படவேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பும் மரியாதையும் கூட காஷ்மீர் மக்களுக்கு கிடைப்பதில்லை.
700 கோடி அரசாங்க இழப்பீடுகளை பற்றி ஊளையிடும் தினமலர் என்றைக்காவது ஜனநாயக வழியில் போராடி தங்களுடைய விலை மதிக்கமுடியாத108 உயிர்களை இழந்த காஷ்மீரிகளைப் பற்றி ஒரு தலைப்பு செய்தியாவது வெளியிட்டுருக்குமா?
ஜனநாயகத்தை நேசிக்கக்கூடிய நடுநிலையாளர்களும், முஸ்லிம்களும் தினமலரை போன்று பாசிச சிந்தனை கொண்ட பத்திரிகைக்கு எதிரான உண்மையை சொல்லும் மாற்று ஊடகத்தை கட்டமைப்பது அவசியம்.
இவையே நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய கடமைகள். ஒப்பாரி வைப்பதை நிறுத்திச் செயலில் இறங்குவோம்.
ஊடகத்தை ஊடகத்தால் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை: