செவ்வாய், 25 ஜனவரி, 2011

பழனி பாபா - நூல் வெளியீட்டு விழா

நம் சமுதாய மக்களுக்காக குரல் கொடுத்து, காவி தீவிரவாதிகளால் ஷஹிதாக்கப்பட்ட அதே நாளில் ( 28 ஜனவரி ) அல்ஹாஜ், அஹ்மத் அலி பழனி பாபா-வின் சமுதாய சிந்தனைகள், உயரிய எண்ணங்களின் கவிதை தொகுப்பு நூலாக கவிஞர் அனலேந்தி வெளியிடுகின்றார். இந்த நிகழ்ச்சி பழனி பாபா அவர்களின் சொந்த ஊரான புது ஆயக்குடி, பழனி ( திண்டுக்கல் மாவட்டம் ) ஐ.டி.ஒ மேல்நிலை பள்ளி எதிரில் இன்ஷா அல்லாஹ் நடைபெறுகிறது.

நூலின் பெயர் : உண்மையின் நிறம்.

நூலை வெளியிடுபவர் : M. முஹம்மது அலி ஜின்னா
( அகில இந்திய துணை தலைவர், பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா )

நூலை பெற்றுகொண்டு சிறப்புரை : சீமான்
( ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் இயக்கம் )

வெளியீடு : சூர்யா பப்ளிகேஷன்

சமூக ஆர்வலர்களே, சமூக நல்லிணக்கத்தை பேணுபவர்களே, சமுதாய சொந்தங்களே, அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர்

கருத்துகள் இல்லை: