ஞாயிறு, 20 மே, 2012

கூத்தாநல்லூர் குலுங்கியது. புதிய சரித்திரத்தை தொடங்கியது மாணவர் இந்தியா!!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மே 17 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் முதல் மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது
மாலை 4 மணி முதலே மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கல்வி வழிகாட்டி கருத்தரங்கம், மருத்துவ பரிசோதனை அரங்கம், இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சி, கல்வி நிறுவனங்களின் அரங்குகள், புத்தக அரங்குகள் என பன்முக தன்மையோடு மாநாடு களைகட்டியது. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களும், மாணவ மாணவிகளும் அரங்குகளை நிறைத்தனர். 6 மணி நெருங்கியதும் அந்த மாநாட்டு விதி மக்கள் நெருக்கடியால் திணறியது. மக்ரிப் தொழுகைக்குப்பிறகு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து எழுச்சி மிகு முழக்கங்களோடு வாகனங்களில் அமர்ந்தபடியே மாணவர் பட்டாளம் கூத்தாநல்லூரை முற்றுகையிட்டது.
7 மணிக்கெல்லாம் மாநாட்டின் 2 ஆம் நிகழ்வு தொடங்கியது. மாநாட்டிற்கு மமக மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாணவர் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சர்வத் கான் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமுமுக-மமக தலைவர் மௌலவி J.S. ரிபாயி, மமக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி, இணை பொதுச்செயலாளர் S.S. ஹாரூன் ரஷீது, வழக்கறிகர் சரவண பாண்டியன், பேரா. J. ஹாஜா கனி, மதுக்கூர் ராவுத்தர், தர்மபுரி சாதிக், நாசிகுலம் தாஜுதீன், வழக்கறிஞர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.
பெண்கள் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோரோடு வருகை தந்து கல்வி குறித்த தங்கள் ஐயங்களை கேட்டறிந்ததோடு மாநாட்டு நிகழ்ச்சிகளிலும் அமர்ந்து தங்கள் பங்களிப்பை உறுதிபடுத்தினர். மேலும் மாணவர் இந்தியாவின் சார்பில் மாணவிகளுக்கென தனியாக கல்வி வழிகாட்டி கருத்தரங்குகளை இனிவரும் காலங்களில் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்கள் மருத்துவ ஆய்வரங்கிற்கு சென்று இரத்த தானம் செய்தனர். ஒரு கட்டத்தில் இரத்தத்தை சேமிக்க வசதி இல்லை என்று கூறி டாக்டர்கள் மறுத்ததால் ஏராளமான மாணவர்கள் இரத்தம் கொடுக்காமலேயே திரும்பினர்.
கல்வி நிறுவனங்களின் அரங்குகளில் +2 மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து பரபரப்பாக இருந்தனர். புத்தக அரங்குகளில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தன. இது அங்கு வருகை தந்திருந்த பொது அறிவு தாகத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
இரவு 11.30 அளவில் மாநாடு நிறைவு பெற்றது. சரியான மாணவர் இயக்கம் தங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியில் மாணவ மாணவிகளும்,பெற்றோர்களும் உற்சாக வெள்ளத்தில் திரும்பினர்.
மாநாட்டு மேடைக்கு ஷஹீது கூத்தாநல்லூர் நூர்முஹம்மது அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. கொடிகள், தோரணங்கள், ஊரங்கு மின் விளக்குகள், திப்பு சுல்தான், வி.பி.சிங், அம்பேத்கர், மாவீரன் ஹேமந்த் கர்கரே ஆகியோரின் பெயரால் வரவேற்பு வளைவுகள் என மாணவர் இந்தியாவின் முதல் அத்தியாயம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
இனி மாவட்டம்தோறும் மாநாடுகள், கல்லூரிகள் தோறும் அமைப்புகள் என புயல்போல புறப்பட இருக்கிறது மாணவர் இந்தியா..

































கருத்துகள் இல்லை: