வியாழன், 10 மே, 2012

சிறுபான்மை மக்களுக்கென தனியாக மருத்துவக்கல்லூரி தொடங்க சட்டசபையில் மமக ஆலோசனை

முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு சிறப்பான சாதனையை செய்வதற்கான ஒரு ஆலோசனையை இந்த அவையில் முன் வைக்க விரும்புகிறேன். வக்ப் வாரியத்தின் சார்பாக சிறுபான்மை மக்களுக்கென தனியாக ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இஸ்லாமிய சமுதாயத்திற்கு நீண்டகாலமாக இருந்துவரும் இந்த ஆசையை, தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
அதுபோல 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், நெல்லிக்குப்பம் மற்றும் கடலூர் Old town, பழைய நகரத்தில் வக்ப் வாரியத்திற்கு சொந்தமான இடங்களிலே புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அரசாங்கம் வீடு கட்டுவதற்கு முன்வந்தாலும் கூட கட்ட முடியவில்லை. ஏனென்றால் அந்த இடம் வக்ப் - க்கு கீழே இருக்கின்றது. எனவே, அரசாங்கம் வக்ப் வாரியத்திற்கு பணம் கொடுத்து வக்ப் வாரியத்தின் மூலமாக வீடு கட்டி அந்த மக்கள் பயனடைவதற்கு வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் திறப்பதற்கு அரசாங்கம் இணையான நிதியை அரசு தரும் என்ற ஒரு நிலையிலிருந்தது. அது கடந்த திமுக ஆட்சியிலே மாற்றப்பட்டு அதிகபட்சமாக matching grant, இணை நிதியாக 10 இலட்சம்தான் தருவோம் என்று சொன்னார்கள். என்னுடைய கோரிக்கை என்னவென்றால், அந்த மகளிர் சங்கங்கள் வலுவாக அமைவதற்கு இந்த அரசாங்கம் matching grant ஆக பார்க்காமல் 10 இலட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தினுடைய பணிகள் விரிவாக்கப்பட வேண்டும். Co-operative bank இல் ஒழுங்காக லோன் தருவதில்லை. அதனைச் சீர் செய்ய வேண்டும். நான் இந்த ஆட்சியைப் பற்றி சொல்லவில்லை. கடந்த காலங்களிலே Co-operative bank மட்டுமல்லாமல், Nationalized Bank களிலிருந்து அந்த லோன் பெறுவதற்கான வழிவகை செய்ய வேண்டும். TAMCO விற்கும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்திற்கும் விரைவிலே தலைவர்களும், உறுப்பினர்களும் நியமிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, நல்ல வாய்ப்பைதந்த மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து அமர்கிறேன்

கருத்துகள் இல்லை: