புதன், 9 மே, 2012

காஷ்மீர் மாநிலத்திலிருந்து முஸ்லிம் பெண் ஐஏஎஸ்!

காஷ்மீர் மாநிலத்தின் ஈஸ் அஸ்கர் என்ற 25 வயது இள மங்கை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு

'அகில இந்திய அளவில் நடக்கும் ஒரு தேர்வில் வெற்றி பெறுவது என்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்கு தெரியும். அதுவும் கடந்த 20 வருடங்களாக முழு காஷ்மீரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பெண் என்ற வகையில் பாதுகாப்பும் முக்கியததுவம் பெறுகிறது. எனது பெற்றோரும் எனது உறவினர்களும் நான் இந்த நிலையை அடைய மிகுந்த உறு துணையாக இருந்துள்ளனர்.” என்றார்.

கேள்வி: காஷ்மீரைப் பொறுத்தவரை மேல் படிப்புக்கு செல்வது என்பது மிகுந்த சிரமமான ஒன்று என்று சொல்லப்ட்டு வருகையில் உங்களின் இந்த முன்னேற்றம் எதைக் காட்டுகிறது?

பதில்: “நான் மட்டும் அல்ல. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் காஷ்மீருக்கும் இந்திய நாட்டுக்கும் திறம்பட பணியாற்றவே விரும்புகின்றனர். லடாக், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஸ்ரீநகர் என்று அனைத்து பிரதேச மக்களும் தற்போது படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கொடுத்தால் கண்டிப்பாக தங்களின் திறமையினால் முன்னுக்கு வருவார்கள்.”

கருத்துகள் இல்லை: