திங்கள், 14 மே, 2012

யா அல்லாஹ் இந்த தாயின் நிலை உலகில் யாருக்கும் வராமல் இருக்க உன்னிடம் துவா செய்கிறேன்







அஸ்ஸலாமு அலைக்கும் ,

எனது பெயர் ஜீனத் வயது 60 / 2008 , எனது கணவர் பெயர் ஜான் பாட்சா , எனது மூத்த மகனும் , மகளும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டனர் , எங்களின் கடைக்குட்டி இளைய மகன் ஆஜம் தனது 19 ஆவது வயதில் 1998 ஆம் ஆண்டில் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து இன்று வரை விடுதலை கிடைத்திடாமல் சிறையில் இருந்து வருகிறான் .
அவனது நீண்டகால சிறைவாசத்தால் மனம் நொந்து போன எனது கணவர் ஜான் பாட்சா 2004 ஆம் ஆண்டில் இறந்து போனார் (இன்னா லில்லாஹி ) எனது துன்பகளுக்கு துணையாய் அறுதல் அளித்து வந்த கணவரும் இறந்து விட்டதால் , சிறையில் உள்ள எனது மகனின் பிரிவு என்னை அதிகம் வாட்ட தொடங்கியது அதனால் சிறைக்கு சென்று அடிக்கடி மகனை தூரத்தில் நின்றாவது பார்த்து வருவேன் , இது எனக்கும் எனது மகனுக்கும் சற்று ஆறுதலை தந்தது , அதுவும் சில காலம் தான் எனது பார்வை குறைபாடலும் உடல் நோய்களாலும் படுத்த படுக்கை ஆனேன் உடல் நிலைமை மிகவும் மோசமாகி 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோவை அரசு மருத்தவ கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன் , இந்த படுக்கை தான் இவ்வுலகில் இறுதி படுக்கையாகிறது என்பதை உணர தொடங்கினேன் மன்னரை செல்லும் முன் சிறையில் உள்ள மகனை ஒரு முறையாவது காண்பேனோ என்று தவித்து கொண்டிருந்தேன் என் மகனோடு சில மணி நேரம் கூட இவ்வுலகில் வாழ முடியாமல் எனக்குரிய மரணத்தின் நேரம் என்னை பற்றி கொண்டது (இன்னா லில்லாஹி ) ...........
14 வருடங்களை அடிமை சிறையில் வாழும் எனது மகன் தந்தையையும் , தாயையும் இழந்து அநாதையாய் சிறையில் எப்படி தவிப்பானோ !?

யா அல்லாஹ் ! எனது மகனோடு நாளை மறுமையில் சுவனத்தில் ஒன்று சேர்பாயாக , இந்த நிலை தமிழக சிறையில் உள்ள எவருக்கும் ஏற்படாமல் காப்பாயாக!

மேல் உள்ள படத்தில் உள்ளவர் தான் ஜீனத்(ஜனாஸாவாக ) அருகில் உள்ளவர் தான் சிறைவாசி ஆஜம் ........

 சகோதரா ! சகோதிரிகளே ! நீங்களும் இவர்களுக்கு வேண்டி துஆ செய்வீர்களாக ....


source & thanks to :  Thamilagamuslim Siraivasigal

கருத்துகள் இல்லை: