சனி, 12 மே, 2012

மதுரையில் காவல்துறையை கண்டித்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

பாரதீய ஜனதா கட்சியின் மாநாட்டிற்காக, அத்வானி மதுரை வருகையை முன்னிட்டு, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை, மிரட்டி, துன்புறுத்தும் மதுரை மாநகர காவல் துறையை கண்டித்து, தமுமுக சார்பில் நெல்பேட்டை அருகில் ஆர்ப்பாட்டம் 9.5.2012 இல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்து தடை விதித்தால், தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் M.H. சிக்கந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் V.M. அப்துல் ரஃபி, மாநகர தலைவர் S. ஷேக் இப்ராஹீம், மாநகர செயலாளர் PM ஷேக் அஹமத் அப்துல்லாஹ், மாநகர பொருளாளர் A. முஹம்மது ஸாலிஹ், மாவட்ட துணை செயலாளர் K. அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 120 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.



கருத்துகள் இல்லை: