செவ்வாய், 1 மே, 2012

இஸ்லாமிய சிறை வாசிகளை விடுதலை செய்ய கோரி கோவையில் கவன ஈர்ப்பு மாநாடு



இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கினைக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தொடர் பொதுக்கூட்டம் ஏப்ரல் 29 கோவையில் நடைபெற்றது.
இதில் சட்ட போராளி ப.பா.மோகன் அவர்கள் தலைமை தாங்கினார். இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் விடுதலை உரையாற்றினார். அவரை தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் அவர்களும், மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்களும், SDPI-ன் மாநில பொது செயலாளர் ரபீக் அஹமத் அவர்களும் விடுதலை உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும், சிறைவாசிகளின் குடும்பத்தினர்களும், இஸ்லாமிய இயக்க சகோதரர்களும் கலந்துகொண்டனர்.





தீர்மானங்கள்

1.10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய இக்கூட்டம் வலியுருத்துகிறது.

2. மத பேதம் பாராமல் இசுலாமிய ஆயுள் சிறைவாசிகளை எதிர்வரும் செப்டம்பர்15 அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய கோருகிறோம்.

3. இசுலாமிய சிறைவாசிகள்10 ஆண்டுகள் கழித்து விடுதலைக்கு தகுதியிருந்தும் கடந்த ஆட்சியின் பாரபட்ச போக்கால் விடுதலை செய்யப்படவில்லை கடந்த ஆட்சியின் தவறுகளை கழைந்து இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய இக்கூட்டம் கோருகிறது.

4.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் மட்டும் பாரபட்சம் ஏன் தமிழக சிறைகளில் உள்ள இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய இக் கூட்டம் கோருகிறது.

5. மற்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் முடிவில்லா சிறைவாசம் இல்லாமல் 7.10, ஆண்டுகளில் விடுதலை செய்வதைப்போல் தமிழகத்திலும் வாழும் உரிமையை ஆயுள் சிறைவாசிகளுக்கு அளிக்கவேண்டும் என இக்கூட்டம் கோரிக்கைவைக்கிறது.

6.அனைது சிறைவாசிகளுக்கும் இருப்பது போல் வழிகாவல் இல்லாமல் இசுலாமிய சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு அளிக்கவேண்டும் என இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

7.இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தடையாக முந்தைய ஆட்சியாளர்கள் பாரபட்சத்தோடு பிரப்பித்த அனைத்து அரசானைகளையும் ரத்து செய்ய இக்கூட்டம் தமிழக அரசை வழியுருத்துகிறது.

8.சிறையில் இனம்புரிய சிறைநோயில் தினம் செத்துக்கொண்டிருக்கும் அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்து அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்ய இக்கூட்டம் வளியுருத்துகிறது.

9. சாதிய வண் கொடுமைக்கு எதிராக போராடி சிறைபட்டிருக்கும் தோழர் துரைபாண்டி,ஜோதி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சிறையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட,தமிழ்தேசிய விடுதலைப் போராளிகளை விடுதலை செய்ய இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது

10.சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழீழ அகதிகளை சிறையைவிடகொடுமையான முகாம்களை அடைத்துவைத்துளதை கைவிட்டு, உடனடியாக விடுதலை செய்ய இக்கூட்டம் வலியுருத்துகிறது. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்துவரும் ஈழ தமிழர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து அவர்களை அவர்களின் குடும்பத்துடன் சேர்ந்து சுதந்திரமாக வாழ அவர்களை அனுமதிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுருத்துகிறது.

11.சிறைமாற்றம் என்ற பெயரில் இசுலாமிய சிறைவாசிகளை தங்களது சொந்த ஊரில் சிறையில் இருந்து பிடிங்கி அவர்களுக்கும், குடும்பங்களுக்கும் துன்பம் விளைவிப்பதை கைவிட இக்கூட்டம்தமிழக அரசை கேட்டுகொள்கிறது. சிறைமாற்றம் செய்யப்பட்ட இசுலாமிய சிறைவாசிகளை உடனடியாக கோவை சிறைக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசை வேண்டுகிறோம்.

மேற்கண்ட தீர்மாணங்கள் மக்களின் எழுச்சி முழக்கத்துடன் நிறைவேற்றப்பட்டது.

எமது சிறைவாசிகளை மீட்கும் போராட்டம் தொடரும்.

சிறைவாசிகளின் மீட்பு பணியில்
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.
தமிழ்நாடு

கருத்துகள் இல்லை: