மாணவர் இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணவர் இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 மே, 2012

கூத்தாநல்லூர் குலுங்கியது. புதிய சரித்திரத்தை தொடங்கியது மாணவர் இந்தியா!!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மே 17 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் முதல் மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது
மாலை 4 மணி முதலே மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கல்வி வழிகாட்டி கருத்தரங்கம், மருத்துவ பரிசோதனை அரங்கம், இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சி, கல்வி நிறுவனங்களின் அரங்குகள், புத்தக அரங்குகள் என பன்முக தன்மையோடு மாநாடு களைகட்டியது. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களும், மாணவ மாணவிகளும் அரங்குகளை நிறைத்தனர். 6 மணி நெருங்கியதும் அந்த மாநாட்டு விதி மக்கள் நெருக்கடியால் திணறியது. மக்ரிப் தொழுகைக்குப்பிறகு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து எழுச்சி மிகு முழக்கங்களோடு வாகனங்களில் அமர்ந்தபடியே மாணவர் பட்டாளம் கூத்தாநல்லூரை முற்றுகையிட்டது.
7 மணிக்கெல்லாம் மாநாட்டின் 2 ஆம் நிகழ்வு தொடங்கியது. மாநாட்டிற்கு மமக மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாணவர் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சர்வத் கான் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமுமுக-மமக தலைவர் மௌலவி J.S. ரிபாயி, மமக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி, இணை பொதுச்செயலாளர் S.S. ஹாரூன் ரஷீது, வழக்கறிகர் சரவண பாண்டியன், பேரா. J. ஹாஜா கனி, மதுக்கூர் ராவுத்தர், தர்மபுரி சாதிக், நாசிகுலம் தாஜுதீன், வழக்கறிஞர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.
பெண்கள் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோரோடு வருகை தந்து கல்வி குறித்த தங்கள் ஐயங்களை கேட்டறிந்ததோடு மாநாட்டு நிகழ்ச்சிகளிலும் அமர்ந்து தங்கள் பங்களிப்பை உறுதிபடுத்தினர். மேலும் மாணவர் இந்தியாவின் சார்பில் மாணவிகளுக்கென தனியாக கல்வி வழிகாட்டி கருத்தரங்குகளை இனிவரும் காலங்களில் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்கள் மருத்துவ ஆய்வரங்கிற்கு சென்று இரத்த தானம் செய்தனர். ஒரு கட்டத்தில் இரத்தத்தை சேமிக்க வசதி இல்லை என்று கூறி டாக்டர்கள் மறுத்ததால் ஏராளமான மாணவர்கள் இரத்தம் கொடுக்காமலேயே திரும்பினர்.
கல்வி நிறுவனங்களின் அரங்குகளில் +2 மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து பரபரப்பாக இருந்தனர். புத்தக அரங்குகளில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தன. இது அங்கு வருகை தந்திருந்த பொது அறிவு தாகத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
இரவு 11.30 அளவில் மாநாடு நிறைவு பெற்றது. சரியான மாணவர் இயக்கம் தங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியில் மாணவ மாணவிகளும்,பெற்றோர்களும் உற்சாக வெள்ளத்தில் திரும்பினர்.
மாநாட்டு மேடைக்கு ஷஹீது கூத்தாநல்லூர் நூர்முஹம்மது அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. கொடிகள், தோரணங்கள், ஊரங்கு மின் விளக்குகள், திப்பு சுல்தான், வி.பி.சிங், அம்பேத்கர், மாவீரன் ஹேமந்த் கர்கரே ஆகியோரின் பெயரால் வரவேற்பு வளைவுகள் என மாணவர் இந்தியாவின் முதல் அத்தியாயம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
இனி மாவட்டம்தோறும் மாநாடுகள், கல்லூரிகள் தோறும் அமைப்புகள் என புயல்போல புறப்பட இருக்கிறது மாணவர் இந்தியா..

































சனி, 19 மே, 2012

மாணவர் இந்தியா – முதல் மாவட்ட மாநாடு

இறைவனின் திருப்பெயரால்..



கூத்தாநல்லூர் – நகராட்சி அலுவலகம் முன்பாக 17.5.12 மாலை 4 மணியளவில், மாணவர் இந்தியா அமைப்பின் முதல் மாவட்ட மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடத்திய வன்முறை, பற்றியெறியும் பாலஸ்தீன விடுதலை களம், ஈராக்கில் அமெரிக்காவின் அட்டூழியம், காஷ்மீர் கண்ணீர் காட்சிகள், குஜராத் கலவரம் ஆகியவற்றின் புகைப்பட கண்காட்சியும், மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் மருத்துவ முகாம், கல்வி நிறுவனங்களின் அரங்கம், சட்ட ஆலோசனை அரங்கம் போன்றவைகளும் இடம் பெற்று இருந்தன.
மாவட்ட தலைவர் K.H. நூர்தீன் அவர்கள் தலைமையெற்க, நீதிபோதனை உரையினை S.P யூசுப் அவர்கள் நிகழ்த்த, நிகழ்ச்சி தொகுப்பு உரையினை டாக்டர். முஹம்மது சர்வத்கான் M.B.B.S அவர்களும், சிறப்புரையினை R. பிரபு தாஸ் – மாவட்ட வக்கீல்கள் அணி செயலாளர் அவர்கள் நிகழ்த்தினார்கள். இம்மாநாட்டில், மாநில பொறுப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் S. முஹம்மது மாலிக், செயற்குழு உறுப்பினர் A. நாச்சிக்குளம் தாஜ்தீன் மற்றும் தமுமுக மமக நகர, கிளை நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.
பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி அவர்களின் உரையின் சில பகுதிகள்..
”தமுமுகவின் வளர்ச்சிப்பாதையினை மாணவர் இந்தியா நன்றாக கவனிக்க வேண்டும். மாணவர் இந்தியாவின் அமைப்பு 2000 ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது தான். சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அன்று செயல் படுத்த முடியவில்லை. ஆனால் இன்று மாணவர் இந்தியா அமைப்பு நன்றாக செயல்படும் அமைப்பாக உள்ளது.”
மமக மாநில பொது செயலாளர் M. தமீமுன் அன்சாரி உரையின் சாராம்சம்..
”இழந்த உரிமைகளை மீட்க பிறந்தது தான் தமுமுக, அதனை பின்தொடர்ந்து வந்தது மமக. 18 ஆண்டுகள் கடும் உழைப்பு, பல போராட்டங்கள், கடந்த காலத்தில் நாம் ஆற்றிய தியாகங்கள் அடுத்த தலைமுறையினருக்கு நாம் மனதில் பதிவு செய்ய வேண்டும். வரலாற்று சுவடுகளை எடுத்து பார்த்தால் மாணவர்களும், இளைஞர்களும் தான் மாற்றத்தினை ஏற்படுத்தி உள்ளார்கள்”.
தமுமுக மமக மாநில தலைவர் J.S. ரிபாயி அவர்களின் உரையின் சாராம்சம்..
”செல்போன் கலாச்சாரம் நம் சமுதாயத்தை சீரழித்து விட்டது. நம் சமுதாயத்தில் செல்போனால் வேலி தாண்டிய வெள்ளாடாக பல இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மாறி விட்டார்கள்.”
தமுமுகவின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமாகிய M.H ஜவாஹிருல்லா M.B.A. M.Phil., Ph.D., அவர்களின் உரையிலிருந்து சில பகுதிகள்..
”இருண்ட காலத்தில் இருந்த சமூகத்தில் அனைத்து துறைகளிலும் தனித்தன்மையினை உருவாக்கியவர் நபி (ஸல்) அவர்கள் என்றால் மிகையாகாது. இஸ்லாம் வரலாற்றில் இளம் வயதில் தன்னுயிரினை தந்தவர் அன்னை சுமைய்யா. ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டதில் பலர் இளைஞர்கள் என்பதும் வரலாற்று குறிப்பு தான். இளைய சமுதாயம் நினைத்தால் பலவற்றை சாதிக்கலாம்.
மதுவினால் பல இளைஞர்கள் சீரழிந்து போய் கொண்டு இருக்கிறார்கள். ஓராண்டு கால சாதனையை சிறப்பிக்கும் அதிமுக அரசு வளமான தமிழகமாக மாறுவதற்கு பூரண மதுவிலக்கு அவசியம் என்பதினை பற்றி சட்டமன்றத்தில் 16.5.12 அன்று பேசி இருக்கிறேன்.
இம்மாநாட்டில் முத்துப்பேட்டையை தனித்தாலுக்காகவும், கூத்தாநல்லூரை தனித்தாலுக்காக மாற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3000 த்துக்கும் மேற்பட்ட கலந்துக்கொண்ட இம்மாநாடு இரவு 11.30 மணிக்கு முடிவடைந்தது.

செவ்வாய், 15 மே, 2012

கூத்தாநல்லூரில் மாணவர் இந்தியா மாநாடு


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் சார்பில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் முதல் மாவட்ட மாநாடு மே 17 அன்று நடைபெற உள்ளது. ம.ம.க. மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும், மாணவர் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சர்வத் கான் தலைமையில் மாணவர் படையும் மாவட்டமெங்கும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.

இந்த மாநாட்டையொட்டி மதியம் 4 மணி முதல் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் புகழ்பெற்ற கல்வியாளர்கள், கல்வி குறித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். மற்றொரு அரங்கில் இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் சட்ட ஆலோசனை அரங்கம், மருத்துவ பரிசோதனை ஆய்வு அரங்கம், புத்தக கடைகளின் கண்காட்சி ஆகியவற்றுடன் பல்வேறு கல்வி நிறுவனங்களின் அரங்குகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சி மதியம் 4 மணி முதல் mmklive.com மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

கோடை விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் அணி, அணியாக திரண்டு வரும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டுப் பணிகள் குறித்து மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக மாநிலச் செயலாளர் ஜெ. ஹாஜாகனி, மமக மாநில அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளுடன் அவ்வப்போது கலந்தாலோசித்து வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலமெங்கும் மாணவர் இந்தியாவை கட்டியமைக்கும் பணிகளில் ஒரு பகுதியாக இம்மாணவர் மாநாடு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.