வியாழன், 25 நவம்பர், 2010

தீண்டாமைச் சுவர் என்ற பெயரில் குடியிருப்பை இடித்ததைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தீண்டாமை சுவர் என்ற பெயரில் திருச்சி மாநகராட்சி 40வது வார்டு எடமலைபட்டி புதூர் பழைய சக்திவேல் காலனியில் உள்ள குடியிருப்பை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளதை பொருட்படுத்தாமல் அத்துமீறி சர்வாதிகாரமாக இடித்த மாவட்ட ஆட்சி தலைவர், மாநகராட்சி ஆணையர் மாநகர காவல்துறை ஆய்வாளர் ஆகியோரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 22.11.2010 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் (மமக) பைஸ் அஹமது மாவட்ட பொருளாளர் இப்ராஹிம்ஷா மாவட்டசெயலாளர்(தமுமுக) அப்துல் ரஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் கோவை.செய்யது அவர்களின் கண்டன உரை ஆற்றினார்.


ஆர்ப்பாட்த்தில் மாவட்ட துணை தலைவர் முஹம்மது ரபீக் மாவட்ட துணைச் செயலாளர்(மமக)பெரோஸ் கான் மாவட்ட துணைச்செயலாளர்கள்(தமுமுக) ஹபீபுல்லா, உபைதுல்லாஹ், சாதிக் மற்றும் மமக அணி நிர்வாகிகளான மாவட்ட இளைஞரணிச் செயலாளர் உதுமான் அலி, மாவட்ட வர்க்கறிஞர் அணிச்செயலாளர் கமருதீன், மனிதநேய வர்தக சங்க செயலாளர் ரைஹான், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் அப்துல் சமது, இளைஞரணி துணைச் செயலாளர் லியாகத் அலி, மனிதநேய வர்த்தக சங்க துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, தொண்டரணிச் செயலாளர் இப்ராஹிம், துணைச் செயலாளர் இசாக், மருத்துவ சேவை அணிச் செயலாளர் இம்தியாஸ் அஹமது மற்றும் சுற்றபறச்சூழல் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு அணிச் செயலாளர் தமும் அன்சாரி ஆகியோர்களும் மமக தமுமுக ஒன்றிய நகர வார்டு மற்றும் கிளை நர்வாகிகளும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை: