திங்கள், 15 நவம்பர், 2010

ஒலிவ மரங்களைக் கொளுத்திவரும் யூத ஆக்கிரமிப்பாளர்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.11.2010) நப்லஸ் பிரதேசத்தில் உள்ள ஸாலிம் கிராமத்தில் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான ஏராளமான ஒலிவ மரங்களை சட்டவிரோதக் குடியேற்றத்தில் வசிக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்கள் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.

உள்ளூர்வாசிகள் சாட்சியமளிக்கையில், கிராமத்தை அடுத்து நிறுவப்பட்டுள்ள சட்டவிரோத இஸ்ரேலியக் குடியிருப்பில் வசித்துவரும் ஆயுததாரிகளான யூத ஆக்கிரமிப்பாளர் குழுவொன்று திடீரென்று தமது ஊருக்குள் நுழைந்து சுமார் 15 தூனம் (1 தூனம் - 1000 சதுர அடிகள்) பரப்புள்ள ஒலிவ் தோட்டங்களைத் தீவைத்துக் கொளுத்தினர் என்றும், அப்பகுதியெங்கும் தீ பரவியதில் நூற்றுக்கணக்கான ஒலிவ மரங்கள் கருகிப் போயின என்றும் தெரிவித்துள்ளனர். யூத ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடித்தனத்தால் தமது விளைநிலத்தில் ஏற்பட்ட இப் பாரிய சேதத்தின் விளைவாகப் பலஸ்தீன் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரும் என உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள சட்டவிரோதக் குடியிருப்புக்களில் வசிக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்கள் பலஸ்தீன் விவசாய நிலங்களில் இது போன்ற அழிப்பு வேலைகளைச் செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: