திங்கள், 15 நவம்பர், 2010

விலை உயருகிறது வெங்காயம் - கிலோ 60ரூபாய்

உரிப்பவரைக் கண்ணீர் விடவைக்கும் வெங்காயம் இனி அதன் விலையைக் கேட்பவருக்கும் கண்ணில் நீர் சுரக்கவைக்கும் விதமாக மளமளவென்று விலையேறி வருகிறது.

இந்தியாவில் கர்நாடக மாநிலத்திலும்இ மராட்டியத்தின் நாசிக் பகுதியிலும் தான் வெங்காயம் அதிகம் விளைகிறது.

பெங்களூர்இ பகல்கோட்இ பிஜப்பூர்இ தால்வாட்இ கடாக்இ சித்ரதுர்காஇ தேவாங்கர்இ கடாக் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் கர்நாடகாவில் மட்டும் இந்த ஆண்டு 17 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்தது. ஆனால்இ அண்மையில் கர்நாடகாவில் பெய்துவரும் மழை காரணமாக
வெங்காயம் விலை ஏறிக்கொண்டே போகிறது. கடந்த மாதம் வரை கிலோ ரூ.பதினைந்து என்று விற்ற வெங்காயம் தற்போது ரூ.30 ஆகிஇ பின் ரூ. 40 என்று விற்றுவருகிறது.இன்னும் விலை அதிகரித்து ரூ.60 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக கர்நாடகா காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர்.
அண்மை மழையால் வெங்காயப் பயிர்களில் தண்ணீர் தேங்கி பெருமளவு பயிர்கள் நாசமாகிவிட்டன. விளைந்து இருந்த வெங்காயமும் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. கிட்டத்தட்ட 60 சதவீத பயிர்கள் நாசமாகிவிட்ட காரணத்தால் வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.60 வரை உயரலாம் என பெங்களூர் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
பெங்களூர் மார்க்கெட்டுக்கு தினமும் 5 ஆயிரம் டன் வெங்காயம் விற்பனைக்கு வரும் தற்போது இது 2500 டன்னாக குறைந்துவிட்டது. பிஜப்பூரில் இருந்து தினமும் 3 ஆயிரம் டன் விற்பனைக்கு வரும். தற்போது 1000 டன்னாக குறைந்துவிட்டது.
மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியிலும் அதிக அளவில் வெங்காயம் விளைகிறது. ஆனால்இ அங்கு உற்பத்தியாகும் வெங்காயம் ஜனவரி மாதம்தான் சந்தைக்கு வரும். எனவே ஜனவரி 15-ந்தேதிக்கு பிறகு வெங்காயம் விலை குறையலாம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை: