ஞாயிறு, 22 நவம்பர், 2009

பாசிச ஹிந்து தீவிரவாதிகள் கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் கலவரம் பள்ளிவாசல் மீது கல்வீச்சு.


கோழிக்கோடு: லவ் ஜிஹாத் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தர்பியத்துல் இஸ்லாம் சபை என்ற நிறுவனத்தை நோக்கி ஹிந்து ஐக்கியவேதி மற்றும் விசுவ ஹிந்த் பரிசத் ஆகிய தீவிரவாத சங்க்பரிவார பாசிஸ்டுகள் நடத்தவிருந்த பேரணிக்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்ததைத்தொடர்ந்து கோழிக்கோடு பாளையம் ரோட்டில் நடுவே பொதுக்கூட்டம் நடத்தியது சங்க்பரிவாரம். பின்னர் கூட்டம் முடிந்து பிரிந்து செல்லும்போது தீவிரவாதிகள் அருகிலிலுள்ள பட்டாளம் பள்ளிவாசலில் கல்வீச்சில் ஈடுபட்டனர். கல்வீச்சில் இரண்டு மாடிக்கொண்ட பள்ளிவாசலின் கண்ணாடிகளும் மின்சார விளக்குகளும் உடைந்தன. நடுரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்கெதிராக மிகவும் மோசமான வார்த்தைகளை உபயோகித்து கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் உரையாற்றினர். காவல்துறை கண்ணீர்குண்டுகள், கிரேனேட்டுகள், ஆயுதம்தாங்கிய போலீசார் என கடுமையான பாதுகாப்பையும் மீறி பள்ளிவாசல் மீது கல்லெறியப்பட்டது. போலீசார் இதனை கண்டு பேசாமல் இருந்துள்ளனர். மேலும் கூட்ட்த்தில் உரையாற்றியவர்கள் மிக மோசமான வார்த்தைகளால் முஸ்லிம் சமூகத்தை திட்டி தீர்த்தையும் போலிசார் கண்டு கொள்ளவில்லை . பள்ளிவாசல் மீது கல்லெறிந்தவர்கள் மீது சாதாரண பிரிவிலிலுள்ள வழக்குகளே பதிவுச்செய்யப்பட்டன.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: