திங்கள், 5 செப்டம்பர், 2011

காவல் துறையினரின் அராஜகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தஃவா சென்டரில் சட்டத்திற்குட்பட்டு இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்று இஸ்லாமிய அடிப்படைக் கல்வியை கற்றுக் கொண்டிருந்த சகோதரி ஆயிஷா சித்திக்கா என்ற மாணவியை கடந்த 27-ந் தேதி (சனிக்கிழமை) ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் திரு. பார்த்திபன் அவர்கள் தலைமையில் வந்த காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக இரவு நேரத்தில் தஃவா சென்டருக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்தது மட்டுமல்லாமல் தஃவா சென்டர் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியும் அவர்கள் மீது அநியாயமாக F.I.R போட்டு விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார்,

மேலும் கண்ணியமாக ஃபர்தா அணிந்த அந்த மாணவியை பெண் போலீசார் நீ இதற்கு முன்னர் பர்தா போட்டிருந்தாயா? என்று ஆரம்பித்து தரக்குறைவாக நடத்தியுள்ளார். தற்போது அழைத்துச் சென்ற மாணவி ஆயிஷா சித்தீக்கா எங்கு உள்ளார்? அவர் என்ன ஆனார்? காவல்துறை அவரை எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்று விபரங்கள் இன்றுவரை வெளியிடவில்லை.

எனவே காவல்துறையின் இதுபோன்ற அத்துமீறல்களை தடுத்து நிறுத்தி காயல்பட்டின பொதுமக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த கோர சம்பவத்தால் கொந்தளித்துப் போயுள்ள நமதூர் மக்களின் நியாயமான உணர்வுகளை பிரதிபலிப்பதற்காகவும் இன்ஷா அல்லாஹ் (05/09/2011) திங்கள் கிழமை 4.30 மணியளவில் நமதூர் தபால் நிலையம் முன் காவல்துறையினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஆயிஷா சித்திக்கா மகளிர் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினரின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டள்ளது.

எனவே இந்திய அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகள் நிலைநாட்டப்பட தாங்கள் உறுப்பினர்கள், ஜமாத்தார்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அவசியம் கலந்து கொண்டு தங்களின் நியாயமான உணர்வுகளை பிரதிபலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

தஃவா சென்டர் நிர்வாகிகள்
(சமூக நல்லிணக்க மையம்)
காயல்பட்டினம்.