புதன், 14 செப்டம்பர், 2011

மாலேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்கள் அப்பாவிகள்! என்.ஐ.ஏ

thumbnail[

மும்பை: கடந்த 2006 ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டு சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 9 முஸ்லிம்கள் குண்டு வெடிப்பில் தொடர்பில்லாத அப்பாவிகள் என என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட இயக்கமான சிமியுடன் தொடர்புடைய இவர்கள் இந்த இரட்டை குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இக்குண்டு வெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டனர் 312 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் இவர்களின் பிணை மனுக்கு இந்த தடவை எதிர்ப்பு தெரிவிக்காது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2009 ல் சிபிஐ 9 முஸ்லிம்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது 2010ல் சுவாமி அசிமானந்தா மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்வு இந்துத்துவா சக்திகளின் மூலம் நிகழ்த்தப்பட்டது என இந்துத்துவாக்களுக்கு எதிராக கொடுத்த வாக்கு மூலத்தால் சிபிஐயின் விசாரணையின் போக்கை மாற்றியது. தற்போது தலைகீழ் மாற்றமாக சி.பி.ஐ என்.ஐ.ஏவுக்கு அளித்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்துத்துவா நபர்களை மட்டும் விசாரித்தால் போதுமானது என்று குறிப்பிட்டுள்ளது.

சிபிஐ செய்த இந்த தவறுகளின் விளைவாக இந்த 9 அப்பாவி முஸ்லிம்கள் கடந்த 5 வருடமாக சிறையில் வாடி வருகின்றனர் அதேசமயம் அதில் சம்மந்தப்பட்ட இந்துத்துவா கூட்டத்தின் ஒருவர் பெயர் கூட இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை . இப்போது தான் முதன்முறையாக புலனாய்வுத்துறை மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முஸ்லீம்களுக்கு எப்பங்குமில்லை என்ற அறிவித்துள்ளதோடு அவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: