செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

பன்றிகாய்ச்சல்:ஹெல்ஃப்லைன் நம்பர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கடும் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் பன்றி காய்ச்சல் நோய் குறித்து தகவல்கள் அறிய, 044 - 2432 1569 என்ற ( சென்னை நம்பர் ) டெலிபோன் நம்பருக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அந்தமானில் கடும் நிலநடுக்கம் - சென்னை உள்பட தமிழகத்திலும் பூகம்பம் - மக்கள் பீதி

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நாகை, கடலூர் மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

நேற்று நள்ளிரவுக்கு மேல் 1.26 மணியளவில் போர்ட் பிளேருக்கு வடக்கே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவாகியிருந்தது.

இதனால் அந்தமான் முழுவதும் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். வீடுகளில் உள்ள பொருட்கள் கீழே விழுந்து உடைந்தன. கட்டடங்களும் ஆடியதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். இருப்பினும் அந்தமான் நிர்வாகம் சுனாமி எச்சரிக்கை எதையும் பிறப்பிக்கவில்லை. விடிய விடிய மக்கள் தெருக்களிலேயே குழுமியிருந்தனர். சேத விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று தெரிகிறது.

தமிழக கடலோர மாவட்டங்களில்...

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டனம், கடலூர், காஞ்சிபுரம், சென்னை உள்பட அனைத்துப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

சென்னை நகரில் மயிலாப்பூர், அண்ணா நகர், பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், தி.நகர், மடிப்பாக்கம், திருவான்மியூர், கொட்டிவாக்கம், திரு.வி.க.நகர், திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

வீடுகள் மற்றும் பொருட்கள் ஆடின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். பீதி காரணமாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசித்து வருவோர் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

ஆனால் வெளியில் வந்தால் கன மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் வெளியிலும் இருக்க முடியாமல், வீட்டுக்குள்ளும் இருக்க பயமாக இருந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

நாகையில் சுனாமி எச்சரிக்கை...

நாகை மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கடலில் அலைகள் கடுமையாக வீசியதால் மாவட்ட நிர்வாகம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. இதேபோல கடலூரிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

இருப்பினும் சிறிது நேரத்தில் இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும் கடல் மோசமான சூழ்நிலையில் இருப்பதால் கடலோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுளளனர். மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஹைதராபாத்திலும்...

நிலநடுக்கத்தின் பாதிப்பை ஹைதராபாத், விசாகப்பட்டனம், புவனேஸ்வர் மக்களும் உணர்ந்துள்ளனர். இருப்பினும் இங்கு மிகச் சிறிய அளவிலான நிலநடுக்கமே ஏற்பட்டதால் பாதிப்பு ஏதும் இல்லை.


சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் 60 பேர் படுகாயம்..

இதேபோல ஜப்பானிலும் சுகுரு என்ற தீவுக்கு அருகே பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.6 ஆக இருந்தது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. பொருட்கள் கீழே விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தில் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். கட்டங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதேபோல இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அந்தமானில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தக் கூடிய வல்லமையுடன் கூடியதாக இருப்பதால் ஜப்பான், இந்தோனேசியா, மியான்மர், தாய்லாந்து, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

பீடி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் த.மு.மு.க. பொதுக்குழு வற்புறுத்தல்

நெல்லை, ஆக.10-

பீடிசுற்றும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கவேண்டும் என்று நெல்லையில் நடந்த த.மு.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெல்லை விஜயாகார்டனில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் ஹைதர்அலி தலைமை தாங்கி பேசினார். மாநில துணை செயலாளர் மைதீன்சேட்கான் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தனி நல வாரியம்

பீடி சுற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க அவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கவேண்டும்.

நெல்லை மாநகராட்சியின் வளர்ச்சி பணியில் தேக்கம் இல்லாமல் செயல்பட ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கவேண்டும்.

மேம்பாலத்தின் கீழ் பகுதியில் முன்பு போல கடைகளை அமைக்கவேண்டும். முதியோர் ஓய்வூதியம் பெற தகுதியான அனைவருக்கும் வழங்கவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

யார்-யார்?

கூட்டத்தில் மாவட்ட தலைவர் மைதீன்பாரூக், துணை தலைவர் ரசூல்மைதீன், செயலாளர் உஸ்மான்கான், துணை செயலாளர்கள் சுல்தான், சர்தார் அலிகான், பொருளாளர் மிஸ்பாகி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாளை.ரபீக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினத்தந்தி

கண்ணீர் விட்ட தம்பி காவேரி தண்ணீர் தர சம்மதிப்பாரா?

பெங்களூர்: எனக்கு வயது 86, எதியூரப்பாவுக்கு 67. நான் அவரை தம்பி என்றும் அழைக்கலாம் என்று முதல்வர் கருணாநிதி கூறியதைக் கேட்டு, கர்நாடக முதல்வர் எதியூரப்பா கண் கலங்கினார்.

பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறப்பு தமிழக, கர்நாடக மாநில உறவுகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக வாழ் தமிழர்கள் பெரும் எழுச்சியுடன் கலந்து கொண்டனர்.

அனைவரும் மிகுந்த நெகிழ்ச்சியுடனும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் காணப்பட்டனர். இது விழா மேடைக்கும் பரவியது.

முதல்வர் கருணாநிதி சிறப்புரை நிகழ்த்துகையில், எதியூரப்பாவை தனது தம்பி என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்தார்.

கருணாநிதி பேசுகையில், எனக்கு வயது 86. இவருக்கு (எதியூரப்பா) 67. நான் இவரைத் தம்பி என்றும் அழைக்கலாம்.

எனவே, மூத்த சகோதரரும், இந்த இளைய சகோதரரும் சேர்ந்து திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து புதிய முன்னோடியை ஏற்படுத்தியுள்ளோம். வரலாறு படைத்துள்ளோம்.

இதில் எந்த அரசியலும் இல்லை. அற இயல்தான் உள்ளது. இதை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள முன்வர வேண்டும் என்றார் கருணாநிதி.

கருணாநிதியின் பேச்சை வாய் விட்டு சிரித்து மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த எதியூரப்பா, தன்னைத் தம்பி என்று கருணாநிதி அழைத்ததைக் கேட்டதும் கண் கலங்கினார்.
விவசாயின் கண்ணீர் துடைக்க காவேரி தண்ணீர் தந்தால் நெஞ்சில் ஈரமிருப்பதாக ஒத்துக்கொள்ளலாம் காவிகள் வடிப்பதெல்லாமே நீலிக்கண்ணீர் அல்லவா?

செக்ஸ் நேர்முக‌ம்:லெப‌னான் தொலைக்காட்சி நிறுவ‌ன‌த்தை மூட‌ ச‌வூதி உத்த‌ர‌வு

செக்ஸ் நேர்முக‌ம் ந‌ட‌த்திய‌தாக‌ லெப‌னான் நாட்டை த‌லைமையிட‌மாக‌ கொண்டு செய‌ல்ப‌டும் தொலைக்காட்சி நிறுவ‌ன‌ம் ஒன்றை கால‌வ‌ரைய‌ன்றி மூட‌ ச‌வூதி அர‌சு உத்த‌ர‌விட்டுள்ள‌து.
ச‌வூதி அரேபியா உள்ளிட்ட‌ சில‌ முஸ்லிம் நாடுக‌ள் ஒழுக்க‌விய‌லை தீவிர‌மாக‌ க‌டைபிடித்து வ‌ருகின்ற‌ன.அதுவும் சவூதி அரேபியா தொலைக்காட்சி ஒளிப‌ர‌ப்பிலும் கூட‌ ஆபாச‌ம் க‌ல‌ந்து விடாம‌ல் க‌ண்ணும் க‌ருத்துமாக‌ இருந்துவ‌ருகின்ற‌து.
இந்நிலையில் லெப‌னானை த‌லைமையிட‌மாக‌க்கொண்டு சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் செய‌ல்ப‌டும் எல்.பி.சி என்றழைக்க‌ப்ப‌டும் தொலைக்காட்சி சான‌ல் ஒன்று சவூதி அரேபியாவைச்சார்ந்த‌ குடிம‌க‌ன் ஒருவ‌ரிட‌ம் அவ‌ரின் பாலிய‌ல் அனுப‌வ‌த்தையும் அதில் அவ‌ர் எதிர்க்கொண்ட‌ பிர‌ச்ச‌னைக‌ளையும் பேட்டி எடுத்து ஒளிப‌ர‌ப்பிய‌து. இந்நிக‌ழ்ச்சியின் பெய‌ர் "அஹ்மார் பில்காத் அல் அரீத்" அல்ல‌து Bold Red Lines Programme என்று பெய‌ர். இதில் பாலிய‌லைத்தூண்டும் வித‌மான‌ பொம்மைக‌ளும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ன‌. இதில் க‌ல‌ந்துக்கொண்ட‌வ‌ர் அப்துல் ஜவாத் என்ற நான்கு வயது குழந்தைகளின் தந்தையான‌ சவூதி குடிம‌க‌ன். இதில் அவ‌ர் விகாரமானமுறையில் பாலிய‌ல் அனுப‌வ‌ங்க‌ளை ப‌கிர்ந்துக்கொண்ட‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து. இந்நிக‌ழ்ச்சி ச‌வூதியில் பெரும் அதிர்ச்சி அலைக‌ளை கிள‌ப்பிய‌து. இத‌னைத்தொட‌ர்ந்து உட‌ன‌டியாக‌ அப்துல்ஜவாத் கைதுச்செய்ய‌ப்ப‌ட்டார். தொலைக்காட்சி நிறுவ‌ன‌மும் காலவ‌ரைய‌ன்றி மூட‌ப்ப‌ட்ட‌தாக‌ அர‌சுத‌ர‌ப்பு செய்தியாள‌ர் குறிப்பிட்டார். அப்துல் ஜ‌வாதை ம‌ன்னித்து விடுமாறு ச‌வூதி ச‌மூக‌ம் கோரியுள்ள‌து. அப்துல் ஜ‌வாதின் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் கூறுகையில் த‌ன‌து க‌ட்சிக்கார‌ர் எதிர்பாராத‌ வித‌த்தில் இந்நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌தாக‌வும், இத‌னைத்தூண்டிய‌து தொலைக்காட்சி நிறுவ‌ன‌ம்தான் என்றும் தெரிவித்தார். அப்துல் ஜ‌வாத் மீது வெளிப்ப‌டையான‌ முறையில் ஒழுக்க‌க்கேட்டை க‌ற்பித்த‌தாக குற்ற‌ம்சும‌த்த‌ப்ப‌ட்டுள்ள‌து.
இதுப‌ற்றி லெப‌னான் தொலைக்காட்சி நிறுவ‌ன‌மான‌ LBC ஒப்புக்கொள்ள‌வோ ம‌றுப்போ தெரிவிக்க‌வில்லை.

செய்தி:அல் ஜ‌ஸீரா

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

முஸ்லீம் இடஒதுக்கீட்டை நிறைவேற முடியாத சூழலை காங்கிரஸ் அரசு ஏற்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டு


புதுச்சேரி, ஆக். 7: முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை நிறைவேற முடியாத சூழலை காங்கிரஸ் அரசு ஏற்படுத்தி விட்டது என மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முஸ்லீம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து பட்ஜெட்டில் அறிவித்ததில் பல்வேறு குளறுபடிகள் செய்திருப்பதன் மூலம் முஸ்லீம் இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த முடியாத சூழலை ஏற்படுத்தி, அம்மக்களை ஏமாற்றும் புதுச்சேரி காங்கிரஸ் அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

முதல்வர் வைத்திலிங்கம் பட்ஜெட்டில் முஸ்லீம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் 1 சதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் 1.5 சதமும் எடுத்து அளிக்கப் போவதாக தெரிகிறது.

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளித்ததை ரத்து செய்து ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, அம்மாநில அரசு பிற்படுத்தப்பட்டோரில் உள்ள மூஸ்லீம்களை கண்டறிந்து அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 4 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது.

தமிழக அரசும் நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, அதன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோரில் உள்ள முஸ்லீம்களை தனியாக பிரித்து அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 3.5 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது.

புதுச்சேரி அரசு இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மாதிரி முஸ்லீம் இடஒதுக்கீட்டில் குளறுபடிகளை செய்து அம்மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. முஸ்லீம் மக்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள போது அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 1.5 சதவீதம் எடுத்து இடஒதுக்கீடு அளிப்பது சட்டவிரோதமானது. சமூக நீதிக் கொள்கைக்கே வேட்டு வைக்கும் செயலாகும்.

கடந்த ஆண்டு முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், முஸ்லீகளுக்கு சட்டரீதியாக முறைப்படி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து எடுத்துக் கூறினோம். ஆனால், அவர் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு செயல்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரைப்படி அரசு இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. தற்போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் உறுப்பினராக உள்ளவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் இடஒதுக்கீடு பற்றி எந்தவித அடிப்படையும் அறியாதவர்கள். காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டிகளை திருப்திபடுத்த வேண்டும் என்று கோஷ்டிக்கு ஒருவர் என உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களாக சமூக நீதியில் அக்கறையுள்ள, தெளிவு உள்ளவர்களை நியமிக்க வேண்டும்.

முஸ்லீம் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம். ஆனால், அதனை சட்ட ரீதியாகவும், சமூக நீதி அடிப்படையிலும் செய்ய வேண்டியது அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். புதுச்சேரி அரசு இது குறித்து உடனடியாக அனைத்து கட்சி மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டத்தை கூட்டி முடிவு செய்ய வேண்டும்.

பிந்தங்கியுள்ள முஸ்லீம் மக்களுக்கு நீதியரசர் சச்சார் குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும், பிரதமர் அறிவித்துள்ள 15 அம்ச திட்டங்களையும் நிறைவேற்ற புதுச்சேரி அரசு ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த ஆட்சேபனை ஆணையத்துக்கு அனுப்பப்படும்: முதல்வர் வைத்திலிங்கம்

புதுச்சேரி, ஆக. 7: முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த ஆட்சேபனை ஆணையத்துக்கு அனுப்பப்படும் என முதல்வர் வைத்திலிங்கம் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

புதுச்சேரி சட்டசபையில் பா.ம.க. உறுப்பினர் அனந்தராமன் பேசியதாவது:-

கடந்த 2004-ம் ஆண்டு தங்கமணி கமிஷனின் பரிந்துரையின் பேரில் தான் மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் ஏதேனும் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமானால் 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் செய்ய முடியும். மேலும் முஸ்லிம்கள் பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் தான் அடங்குவார்கள். எனவே அவர்களுக்கு பிற் படுத்தப்பட்டோர் பிரிவிலேயே உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து முதல்வர் வைத்திலிங்கம் பேசியதாவது:-

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரிலேயே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளோம். இதில் உங்களின் ஆட்சேபனையை ஆணையத்துக்கு அனுப்ப உள்ளோம். இதன் பிறகு ஆணையம் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். காங்கிரஸ் அரசு தான் முதல் முறையாக இடஒதுக்கீட்டையே அமுல்படுத்தியது.

இவ்வாறு அவர் கூறினார்.