வியாழன், 5 ஜனவரி, 2012

ஆர்.எஸ்.எஸ்-ன் இரட்டை முகம்



கர்நாடக மாநிலத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சி - காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டது ,

கர்நாடகத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தகி நகரத்தின் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் நாட்டினுடைய கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இதனை மர்ம நபர்கள் செய்துள்ளனர். இதனைக் கேள்விப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து பாகிஸ்தான் கொடியை கீழே இறக்கினர்.
கர்நாடகத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தகி நகரத்தின் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் நாட்டினுடைய கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இதனை மர்ம நபர்கள் செய்துள்ளனர்.

இதனைக் கேள்விப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து பாகிஸ்தான் கொடியை கீழே இறக்கினர். கொடியை பறக்க விட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இந்த சம்பவத்தை காரணமாக வைத்து வன்முறையில் ஈடுபட்ட ஹிந்துத்துவ பயங்கரவாத கும்பல் சிந்தகி நகரில் வாகனங்களைத் தாக்கினர்.
மேலும் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள முத்ஹல் என்ற இடத்திலுள்ள ஒரு பள்ளிவாசலும் தாக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கும் பதற்றம் நிலவியது. வன்முறையில் ஈடுபட்ட கும்பல் டயர்களை எரித்து சாலையில் வீசினர். இதனால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு பேருந்துகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் பாகிஸ்தான் கொடியை பறக்கவிட்ட சம்பவத்தில், ரோஹித் இஷ்வர் நவி (18), சுனில் மடிவலப்பா அகசர் (18), அருண் வக்மோரே (20), ராகேஷ் சித்தரமையாஹ் (19), மல்லன் கௌடா (19) , பரசுராம் அசோக் (20) ,ஆகிய தீவிரவாதிகளை போலிஸ் நேற்று கைது செய்தது,
கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டு மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்று கலவரத்தை உண்டாக்க முயற்சித்தது போல் மீண்டும் கலவர வெறியுடன் நாடகமாடிய இந்துத்துவ வெறியர்களின் நாடகம் அம்பலமானது ..
இவர்கள் நினைத்தது நடக்க வேண்டுமென்றால் இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்கவும் தயங்கப்போவதில்லை , மத்திய அரசு தலையிட்டு காவி தீவிரவாதத்தை இந்தியாவில் உடனடியாக தடை செய்ய வேண்டும்...

கருத்துகள் இல்லை: