வியாழன், 12 ஜனவரி, 2012

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

தானே புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடவும் நிவாராண பணிகளை மேற்க்கொள்ள தமுமுக தலைவர் பேரா எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையிலான குழு 09.1.2011 அன்று விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்றது. இக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக துணைச் செயலாளர் எஸ்.எம். ஜின்னா, தோழமை இயக்கத்தின் இயக்குனர் தேவநேயன் ஆகியோர் இருந்தனர்.

சுனாமி தாக்குதலுக்கு பின் மிகப் பெரிய இழப்பை கடலோர கிராமங்கள் சந்திருந்தது என்பது அனைவராலும் உணர முடிந்தது. ஆழமான வேர்களுக்கு வாழ்ந்து வந்த மரங்கள் வீழ்ந்து கிடந்த காட்சிகள் தானேவின் தாடண்டவத்தை நகல் எடுத்து காட்டியது.

தமுமுகவின் சார்பில் வீட்டை இழந்து நிர்கதியான மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை விழுப்புரம் மாவட்ட தலைவர் கோட்டக்குப்பத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அரிசி, சமையல் பொருட்கள் வழ்ங்கப்பட்டது.

தமுமுக சார்பில் சுமார் 3 லட்சம் மதிப்பில் இடைக்கால நிவாரண உதவிகளை வழங்கப்பட்டது.

மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த பாண்டிசேரி பகுதியில் உள்ள விளியானூர் பகுதிகளை பார்வையிட்டு அங்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள நூர் முஹம்மது நகர், நியூ காலனி, ரயில் நிலைய பகுதி புயல்சேத பகுதிகளை பார்வையிட சென்ற போது அங்கு முற்றிலுமாக கூறைகள் இல்லாத நிலையில் வீடுகள், ஒடுகள் இல்லாத வெறும் சுற்றுச்சுவர் மட்டுமே இருந்த வீடுகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

கடலூர் ஓ.டி. திரௌபதி நகர், மதினா பள்ளி நகர் 45 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் புயலால் கடுமையாக பாதிக்கப் பட்ட இருந்த பகுதிகளில் முற்றிலுமாக பார்வையிட்டு அதிகமான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சுமார் 200 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கபட்டது.

இந்நிவாரண பணிகளை பார்வையிடும் போது விழுப்புரம் மாவட்ட தலைவர் எம்.ஒய். முஸ்தாக்தீன், மாவட்ட செயலாளர் முஹம்மது ரபி, கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ஏ. அபூபக்கர் சித்தீக் மாவட்ட வி.எம். ஷேக் தாவூத், மாவட்ட மமக செயலாளர் எம். மதார்ஷா, கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் எம்.எச். மெஹராஜ்தீன் மாவட்ட செயலாளர் அமானுல்லாஹ் ஆகியோர் உடனிருந்தனர்.

இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த பேரா. எம். எச். ஜவாஹிருல்லா.

சேதமடைந்த பகுதிகளில் உடனே நிவாரண பகுதி மத்திய மாநில அரசுகள் இணைந்து செய்ய வேண்டும் எனவும் "தானே" புயலில் வேரோடு வீழ்ந்த மா, பலா, தென்னை, கரும்பு மரங்களை மீண்டும் வளர்த்து, மகசூல் தரும் வரை அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், "தானே" புயலை பேரிடர் இழப்பாக மத்திய அரசு அறிவித்து, பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 15000 ஐ இடைக்கால நிவாரண தொகையாக அரசு வழங்க வேண்டுமென கூறினார்.

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்


"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்


கருத்துகள் இல்லை: