செவ்வாய், 3 ஜூன், 2014

இந்தியர்களின் நேரத்தை வீண்ணடித்த நரேந்திரமோடி







இந்தியர்களின் நேரத்தை வீண்ணடித்த நரேந்திரமோடி..!
நரேந்திரமோடி எப்படி இந்தியர்களின் நேரத்தை வீண்ணடித்தார் என கேட்கிறீர்களா?
தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பெரிய லிஸ்ட்யை தாயார் செய்து அதை சமூக வலை தளங்களிலும், தனது தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டார்.
அதாவது, இந்தியா பொருளாதரத்தில் முன்னேற வேண்டுமானால் நாம் அந்நிய நாட்டு பொருட்களை பயன்படுத்தாமல் இந்திய தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என கூறிவந்தார்.
அதற்காக ஒரு பெரிய லிஸ்ட்-யை தயார் செய்து சமூக வலைதளங்களில் பரவ செய்தார்.
ஆனால் தற்பொழுது நரேந்திர மோடி அவர் சொன்ன சொல்லை அவராலேயே பின்பற்ற முடியவில்லை. அதற்காக நேரத்தை ஒதுக்கி படித்த மக்கள் அனைவரின் நேரத்தை வீண்ணடித்து முட்டாள் ஆக்கியுள்ளார்.
தான் பிரதமர் ஆனா பின்பு ஏற்கனவே பயன்படுத்தி வந்த இந்திய தயாரிப்பான ஸ்கார்பியோ காரை விட்டு விட்டு அந்நிய தயாரிப்பான BMW காரை பயன்படுத்த துவங்கியுள்ளார்.
அதே தொழில்நுட்பத்தில் நாங்கள் காரை உருவாக்கி தருகிறோம் என மகேந்திரா நிறுவனம் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மோடி அதனை ஏற்க மறுத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?
அவர் தயாரித்து அனுப்பிய லிஸ்ட்-யை நீங்களே படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும். பதவி வந்த உடன் சொன்னைதை மறந்து விடுவார்கள் என்பது நரேந்திர மோடியின் விசயத்திலும் பொருந்தியுள்ளது.
I am Naredra Modi
PLEASE SHARE it with everyone and with all your groups ..
- अगर सभी भारतीय 90 दिन तक कोई भी विदेशी सामान नहीं ख़रीदे..
तो भारत दुनिया का दूसरा सबसे अमीर देश बन सकता है..
सिर्फ 90 दिन में ही भारत के
2 रुपये 1 डॉलर के बराबर हो जायेंगे..
हम सबको मिल कर
ये कोशिश आजमानी चाहिए
क्युकी ये देश हमारा है...!!!!
plz share & aap bhi sahyog kare
Plz frwd this msg to all groups and say
Is desh me rahena he to jag jao
In 1970 1$ = Rs. 4
Today 1$ = Rs. 68
Estimated 1$ by end of the year = Rs. 72
Dollar is not getting stronger, rupee is getting weaker!
&
nobody else is responsible for d fall, except us!
How can we change it!
1. A Cold Drink produced for 70-80 paisa sold at Rs. 9-10!
Stop drinking them,
Drink Lemon juice, Lassi, Fruit juice, butter milk etc. instead of coke, pepsi.
========================
2. Use Soaps such as Cinthol, Santoor,Medimix, Neem, Godrej brands
instead of :-
Lux,lifebuoy, rexona, liril, dove, pears, hamam,camay, palmolive!
========================
3. Toothpaste-
Use Neem, babool, vicco, dabur
Instead of :-
Colgate,close up,pepsodent, cibaca
========================
4. Toothbrush :-
Use prudent, ajanta,promise, instead of :-
colgate, close up, oral-b, pepsodent,forhans.
========================
5. Shaving cream:-
Use godrej, emami,
Instead of :-
Palmolive,old spice, gillete.
========================
6. Blade-
Use supermax, topaz, laser, ashoka
Instead of :-
Seven-o-clock, 365, gillete
========================
7. Talcum powder:-
Use santoor, gokul,cinthol, boroplus
Instead of :-
ponds, old spice, johnson,shower
to shower.
========================
8. Milk powder:-
Use indiana, amul,amulya
Instead of :-
anikspray,milkana, everyday milk, milkmaid.
=======================
9. Shampoo :-
Use Nirma, Velvette
Instead of :-
halo, all clear, sunsilk, head and shoulders, pantene.
========================
10. Mobile connections-
Use bsnl, airtel,reliance,idea,docomo
Insteaf of :-
Vodafone
========================
11. Food :-
Eat at jay bhavani, TGB, local restaurants
Instead of :-
mac-d, subway, pizza hut, kfc.
========================
12. Mobiles :-
Use micromax, karbonn, lava,croma
Instead of :-
samsung,apple, htc, sony.
13. Bikes :-
Use hero, bajaj
Instead of :-
Honda, yamaha.
========================
14. Footwear:-
Use paragon, chavda,lakhani
Instead of :-
Nike, reebok, adidas,converse.
========================
15. Jeans and shirts:-
Use spykar, k-lounge
Instead of :-
Lee, levi's,U.s. Polo, pepe, benetton.
========================
16. Watch :-
Use titan, sonata ,fasttrack
Instead of :-
tommy, Citizen, zodiac, tissot.
========================
Dont use products from hindustan lever,
Only name is hindustan it has been taken by foreign company
We blame politicians
Now go and check the things you use and ask yourself how much do you contribute to the decreased value of RUPEE
You use these foreign made products...
&
Government have to pay in dollars for d same...thus value of rupee Decreases...
Aren't u responsible for fall of rupee..
Samsung S4 at Rs 41k.. Same features Micromax Can4 comes at Rs 17k..means u waste Rs 24k..and these 24k go to south Korea in dollars..
None of the indian products are subordinate in quality, they might look a bit less fancy!!
Why is china so ahead, because the whole world uses made in china items.
We indians could atleast use made in india items!
Change comes from within! spread the change by broadcasting this msg to everyone on your contact list!
lets see by the end of this year does 1$ become Rs. 70 or it becomes Rs. 50..
JAAAAGO.
Some of these we follow....but we can make our possible to make a change.
Before deleting, HELP your frnds by passing it..!
Let it reach d 121 crores Indians.
It might help sum1. Fwd to as many as u can.
WhatsApp to free hai,, soo..frwrd it plz..
All the best.
Sent from My Blackberry® @ Tata Docomo
நன்றி
http://indru.todayindia.info/narendra-modii-ndian-elections-2014/

இர்ஷத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் ஆபீஸர் ஜி.எல்.சிங்காலுக்கு மீண்டும் பதவி

இர்ஷத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் ஆபீஸர் ஜி.எல்.சிங்கால் தற்போது பெயிலில் உள்ளார். சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையை 90 நாட்களில் கோர்ட்டில் சமர்ப்பிக்காததே இவரை பெயிலில் விட முக்கிய காரணமாக உள்ளது. முக்கியமான இந்த கேசில் சிபிஐ எவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டுள்ளது என்பதற்கு இந்த வழக்கே ஒரு சாட்சி. அதிகாரத்தில் இருப்போர் எந்த அளவு இனப் பற்றோடு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதற்கு அடுத்த படியாக ஜி.எல்.சிங்கால் குஜராத் அரசால் திரும்பவும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். போலி என்கவுண்டரில் ஒரு அப்பாவி இளம் பெண்ணின் உயிரை பறிக்க காரணமான ஒரு அதிகாரிக்கு மீண்டும் பதவி கொடுத்து கௌரவித்துள்ளது பிஜேபி அரசு. நரேந்திர மோடி பிரதமரானதால் அவரது இடத்துக்கு வந்துள்ள ஆனந்திபென் பட்டேல் பதவியேற்றவுடன் இந்த நிகழ்வு நடந்துள்ளது. கிரிமினல்களை முக்கிய பதவியில் அமர்த்துவதன் மூலம் தானும் ஒரு மற்றொரு மோடி என்பதை இந்த முதல்வரும் நிரூபிக்கிறார்.

'இது ஒரு மட்டரகமான சட்டத்தை மீறிய செயல். இங்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. பிஜேபி நீதியான ஆட்சியை கொடுப்போம் என்று மக்களுக்கு வாக்களித்தது என்ன ஆனது? ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு மீண்டும் அரசு பதவி தருவது முறைதானா?' என்று கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞர் வீரேந்திர குரோவர்.

மற்றொரு அநியாயமும் ராஜஸ்தானில் நடந்துள்ளது. சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவர் தினேஷ் என்ற போலீஸ் அதிகாரி. இவரும் தற்போது பெயிலில் உள்ளார். வசுந்தராவ் அரசு மீண்டும் அவருக்கு பதவியைக் கொடுத்து அழகு பார்த்துள்ளது. ஆட்கள் மாறினாலும் இந்துத்வாவின் நிறம் மட்டும் மாறுவதில்லை என்பது குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல்களை மீண்டும் பதவியில் அமர்த்தியன் மூலம் நிரூபணமாகியுள்ளது. இங்கும் பிஜேபி தான் யார் என்பதை நிரூபித்துள்ளது.

இது போன்ற கிரிமினல்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தபபடுவதால்தான் இஸ்லாமியர்களின் மேல் போலி குற்றச்சாட்டுக்களை தைரியமாக ஆள்வோர்களால் சுமத்த முடிகிறது.

நமது நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாக்கும் பொறுப்பை நமது இறைவனிடம் தான் கேட்க வேண்டும். காலம் இப்படியே சென்று விடாது. இறந்த அந்த அப்பாவிகளின் குடும்ப உறுப்பினர்களின் பிரார்தனை வீண் போகாது. இறைவனின் தண்டனையை அந்த கொடியவர்கள் நமது கண் முன்னாலேயே அனுபவிக்கும் காலமும் வரும். அதுவரை பொறுத்திருப்போம்.

http://www.ndtv.com/article/india/gl-singhal-accused-in-ishrat-jahan-case-reinstated-by-gujarat-government-532361
நன்றி: http://suvanappiriyan.blogspot.ae/2014/05/blog-post_29.html

திங்கள், 2 ஜூன், 2014

ஹைதராபாத் கலவரம்: முஸ்லிம்களை கருவறுக்க திட்டமிடபட்டு நடத்தப்பட்டது – உண்மை கண்டறியும் குழு அறிக்கை!

ஹைதராபாத் கலவரம்: முஸ்லிம்களை கருவறுக்க திட்டமிடபட்டு நடத்தப்பட்டது – உண்மை கண்டறியும் குழு அறிக்கை!

கடந்த மே 24-ஆம் தேதி ஹைதராபாத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சீக்கியர்கள் நடத்திய கலவரம் திட்டமிட்டு கூட்டாக நடத்தப்பட்டது என்று குடியுரிமை கண்காணிப்பு குழு சார்பாக நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் விசாரணையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

1. சீக்கிய கொடியை எரித்ததே கலவரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இது உண்மைக்கு புறம்பானது. கொடி ஏற்றப்பட்டிருந்த திறந்த பகுதி வக்ஃப் நிலமாகும். ஹிந்துத்துவா கொள்கையுடன் நெருக்கமான சீக்கிய குழு ஒன்று அங்கு குருத்துவாரா கட்ட திட்டமிட்டிருந்தது.

2. கலவரத்தில் போலீசின் பங்கும் சந்தேகத்திற்கிடமானது. போலீஸின் துப்பாக்கிச் சூட்டில் வாஜித் அலீ, முஹம்மது சுஜாவுத்தீன், முஹம்மது ஃபரீத் ஆகியோர் கொல்லப்பட்டனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் கூறுகிறது. ஆனால், முடிந்தவரை முஸ்லிம்களை கொலை செய்வதே போலீஸின் நோக்கமாகும். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்சில்தான் குண்டு பாய்ந்துள்ளது. உடலின் கீழ் பகுதிகளில் யாருக்கும் குண்டு பாயவில்லை.

3. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது போலீஸ் தடுத்தது. இதனால் நேரம் விரயமாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

4. காலையில் பெட்ரோல் நிரப்பிய கேன்களுடன் சீக்கியர்கள் முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். இது திட்டமிட்ட செயல் என்பதற்கான ஆதாரமாகும்.

5. துப்பாக்கிச் சூட்டிற்கான பொறுப்பை போலீஸ் ஏற்றுக்கொள்ள மறுப்பது கவலை அளிக்கிறது. துப்பாக்கிச் சூடு நடந்த இடம் தங்கள் எல்லைக்கு உட்பட்டது அல்ல என்று ஹைதராபாத் போலீசும், ஸைபராபாத் போலீசும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றனர்.

6. கலவரம் நடத்திய சீக்கியர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் முஸ்லிம்களின் உயிர்களுக்கும், சொத்துகளுக்கும் இழப்பு ஏற்பட்டிருக்காது.

7. முஸ்லிம்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கலவரம் நடந்தது உண்மைதான். 3 மணி நேரம் தாக்குதல் நடந்துள்ளது. போலீஸ் மற்றும் பி.எஸ்.எஃப் படையினரின் முன்னிலையிலேயே வன்முறையாளர்கள் வாள் மற்றும் கடாரியுடன் சுற்றி திரிந்துள்ளனர்.

8. ஹிந்துத்துவ சீக்கியர்கள் முற்றிலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் முன்னணி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிரசித்தி பெற்ற உள்ளூர் இந்துத்துவவாதி ராஜா சிங்கின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. வகுப்புவாத உணர்வுகளை தூண்டி ராஜா சிங் அண்மையில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வாறு உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்

பழைய கள் புதிய மொந்தை!
  • தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு
  • ரயில் கட்டணம் உயர்கிறது 
  • டீசலும் விலை ஏற்றம்
புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்
புதுடில்லி, ஜூன் 1- காங்கிரஸ் தலைமையி லான அய்க்கிய முற்போக் குக் கூட்டணியின் ஆட்சி மீது கூறப்பட்ட அத் தனைக் குற்றச்சாற்றுகளை யும், பிஜேபி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் தொடர்ந்து செய்யத் தொடங்கி விட் டது.
குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைச்பிடிப்பு; டீசல் விலையேற்றம், ரயில் கட்டண உயர்வு அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கி விட்டனவே!
25 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு!
தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்து அட்டூழியத்தை மீண்டும் காட்டியுள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை, பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதம ருக்கு அழைப்பு விடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது.
இதனால் நல்லெண்ண நடவடிக்கையாக 151 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதைப் பார்த்து இலங்கை அதிபர் ராஜபக் சேவும் தங்களது நாட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப் போம் என்று அறிவித்ததார். அதேபோல் இந்தியாவும் ஆந்திரா, ஒடிசா மாநில சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு அளித்த வாக் குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத் தியிருந்தார் என்றும் கூறப் பட்டது.
இந்த நிலையில் மீன் பிடித் தடைக் காலம் முடிந்த பின்னர் நேற்றுதான் மீனவர்கள் கடலுக்கு சென் றனர். பாக் ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற் படை திடீரென சுற்றி வளைத்து தாக்கியது. தமி ழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்து வீசி யது. மேலும் 25 மீனவர் களையும் கைது செய்து அவர்களது 6 விசைப் படகு களையும் சிறைப்பிடித்து சென்றுள்ளது ராஜபக்சே வின் கடற்படை.
ரயில் கட்டணம் உயர்வு
ரயிலில் அபாயச் சங்கிலி உண்டு - ஆபத்து காலத்தில் இழுத்து ரயிலை நிறுத்த லாம். ஆனால், ரயில் கட்டணத்தை  உயர்த்தும் அபாயம் அல்லவா ஏற் பட்டு விட்டது? எதைப் பிடித்து இழுப்பது?
பிஜேபியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா - ரயில் கட்டணம் உயரும் என்று அறிவிப்புக் கொடுத்துள் ளார். பழைய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்த தவறி விட்டதாம் - அத னால் இந்த ஆட்சியில் கட்டண உயர்வாம்! ரயில் கட்டணத்தை உயர்த்தாதது பழைய ஆட்சியின் தவறாம் - எப்படி இருக்கிறது?
டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு
டீசல் விலை லிட்ட ருக்கு 50 காசுகள் உயர்த் தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சனிக் கிழமை  முதல் அமலுக்கு வந்துள்ளது.
மாநிலங்கள் விதிக்கும் வரிகள் சேர்க்கப்படாததால் இந்த விலை உயர்வு, மாநில வாரியாக வேறுபடும். எண் ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டது.
டீசலுக்கு அளிக்கப் படும் மானியத்தால் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பை குறைப்பதற்காக கடந்த காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு மாதந் தோறும் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தும் திட்டத்தை 2013ஆம் ஆண்டு கொண்டு வந்தது.
அந்தத் திட்டத்தின் அடிப்படையில், மத்தியில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசும் இந்த விலை உயர்வை மேற் கொண்டுள்ளது. இதனால் மாதந்தோறும் டீசல் விலை உயர்வுத் திட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த ஆண்டு ஜன வரி மாதம் முதல் 15 முறை டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது. அதன் மூலம் லிட்டருக்கு இதுவரை ரூ. 9.55 காசுகள் உயர்ந்துள்ளது.

நன்றி :விடுதலை
http://viduthalai.in/headline/81389-2014-06-01-11-58-39.html

வியாழன், 29 மே, 2014

ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை செயல்படுத்தினால் பேரழிவுதான் : காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர் யாசின் மாலிக்

பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடியும் அவரது சித்தாந்த தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தங்களது 3 முக்கிய கொள்கைகளை செயல்படுத்துவதில் மும்முரம் காட்டுகின்றனர். முஸ்லிம் தனிநபர் சட்டத்தை ஒழித்துவிட்டு பொதுசிவில் சட்டத்தை உருவாக்குவது, ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மக்களின் விருப்பங்களுக்கு எதிராக முழுமையாக இந்தியாவுடன் இணைப்பது என்கிற திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டப்படுகிறது. இந்த அபாயகரமான செயல்திட்டங்களை மோடி செயல்படுத்த முனைந்தால் ஒட்டுமொத்த துணைக்கண்டமுமே மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். நிச்சயமாக இது பேரழிவுகளையே ஏற்படுத்தும். இவற்றில் இருந்து விடுபட்டு
அமைதியை உருவாக்க மோடி முனைய வேண்டும். மோடி அரசின் அண்மைய செயல்பாடுகள் அனைத்தும் அமைதியை முன்னெடுப்பதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இனவாத போக்கையே பின்பற்றுவதாக இருக்கிறது. காஷ்மீரத்து மக்களின் கருத்துகளைக் கேட்காமலேயே எப்படி
பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்திவிட முடியும்? பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
 நடத்துகிறார். மறுபுறமோ ஜம்மு காஷ்மீரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிற 370வது பிரிவை நீக்குவது குறித்து அவரது இணை அமைச்சர் பேசுகிறார். இதன் மூலம் எப்படி இந்த அரசின் மீது நம்பிக்கை வரும்? லட்சக்கணக்கான காஷ்மீரிகளை பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு
 இந்தியா- பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவுகளை அடைந்துவிட முடியுமா என்ன? ஜம்மு காஷ்மீரத்து மக்களைப் பொறுத்தவரையில் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் நட்புறவைத்தான் விரும்புகிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த இருநாட்டு தலைவர்களுமே ஜம்மு காஷ்மீரிகளை மனிதர்களாகக் கூட பார்ப்பதில்லை. தங்களது உதடுகளில் காஷ்மீர் என்ற சொல்லையே உச்சரிக்க மறுக்கிறார்களே.. இப்படி நீங்கள் மவுனமாக இருந்து கொண்டே எப்படி காஷ்மீரத்து பிரச்சனையை தீர்க்கப் போகிறீர்கள்? காஷ்மீரத்து பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட உறவுகள் மேம்பாடு அடையும் என்று கனவு கண்டால் அது நிறைவேறாத ஒன்றாகவே இருக்கும்.







மல்லிப்பட்டிணத்தில் முஸ்லிம்கள் மூவர் மீது அரிவாள் வெட்டு...இந்துத்வா தீவிரவாதிகளின்அட்டூழியம்



தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அனைத்து சமூக மக்களும் தாய் பிள்ளையாய் வாழ்ந்து வருவதை சீர்குலைக்கும் நோக்கில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அராஜகத்தில் ஈடுபட்ட பாஜக துணை பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் அவருடைய தீவிரவாத கும்பல்கள் முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்ட இந்துத்துவா காவி தீவிரவாதிகளை காவல்துறையினர் தடியடி நடத்தி 144 தடை உத்தரவு போட்டனர். இந்நிலையில்.... 

நேற்று இரவு 9 மணிக்கு  முஸ்லிம் இளைஞர்கள் தங்களுடைய பகுதியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் 4 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 காவி
தீவிரவாதிகள் அரிவாள், கத்தி, சைக்கிள் செயின் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களோடு வந்து முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூரமான முறையில் கொலைவெறி தாக்குதல் நடத்தி சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த கொலைவெறி தாக்குதலில் அப்பாவி 3 சகோதரர்களுக்கு கடுமையான முறையில் வெட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி உயிருக்கு போராடியவாறு பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மல்லிப்பட்டினம் முழுவதும் இரத்த வெள்ளத்தில் களேபரமாக காட்சியளிக்கிறது.

எந்த ஒரு  ஊடகமும்  இது வரையிலும் செய்தியை வெளியிடவில்லை

புதன், 28 மே, 2014

மீத்தேன் அரக்கன்!




முன்னால் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, ‘விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.
கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.
மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன?
மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்… ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல… அடுத்த 100ஆண்டுகளுக்கு!
பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம். இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.
காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.
”நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.
இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு ‘நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.
நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!
உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம். ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!” என்கிறார் இரணியன்.
வெளிநாடுகளில் என்ன நடக்கிறது?
மீத்தேன் வாயு எடுக்கப்படும் உலகின் ஏனையப் பகுதிகளில் நிலவரம் என்ன என்று தேடிப்பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது!
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா… உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர். ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர். ஆனால், காவிரி டெல்டாவில் ஊரும் வயல்வெளியும் இணைந்தே இருக்கின்றன. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது.
அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.
நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது.
குறிப்பாக, ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். இப்போதும் அது தொடர்கிறது. ஆனால் அரசாங்கமோ, மிகவும் கள்ளத்தனமாக ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்கிறது!

மீத்தேன் எதிர்ப்புத் திட்டக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமனிடன் பேசியபோது…
”நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பெட்ரோலியம் எடுப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பல இடங்களில் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கான குழாய் பதிப்பு வேலைகள், ஓ.என்.ஜி.சி-யின் பெயரில் நடைபெறுகின்றன. நரசிங்கம்பேட்டை, திருநகரி என்று பல இடங்களில் இப்படிச் செய்கிறார்கள். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஓ.என்.ஜி.சி-யும், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணை செயற்பாட்டாளர்கள் (co-operators). ஆகவே, அவர்களுக்காக இவர்கள் ஆரம்பகட்டப் பணிகளைச் செய்து தருகின்றனர். அதனால் ஓ.என்.ஜி.சி. பெயரில் நடந்தாலும் அது மீத்தேன் திட்டத்துக்குத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.
ஏற்கெனவே மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்றுவரும் நிலக்கரி மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளில் ஓ.என்.ஜி.சி-யுடன், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணைந்துதான் செயல்பட்டு வருகிறது. அங்கு, மொத்தப் பணிகளில் 25 சதவிகிதத்தை கிரேட் ஈஸ்டர்ன் செய்கிறது. ஆனால், டெல்டா பகுதியில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. செயல்பட்டு வருகிறது என்றபோதிலும், முழு திட்டமும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தை தற்போதைய நிலையில் ‘மன்னார்குடி பிளாக்’ என்று அழைக்கிறது.
காவிரிக்கும் மீத்தேனுக்கும் என்ன தொடர்பு?
இந்தத் திட்டத்தின் வேறொரு கோணத்தை விவரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு.
”35 ஆண்டுகளில், 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேன் வாயுவை எடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பகுதியில் விளையும் நெல், உளுந்து, எள், பாசிப்பயறு, கடலை, கரும்பு, வாழை, கம்பு, சோளம் போன்ற பயிர்களின் பண மதிப்பைக் கணக்கிட்டால், அது எங்கேயோ இருக்கும். விவசாயத்தை நம்பி நடைபெறும் இதரத் தொழில்களையும், கால்நடைகளின் மதிப்பையும் சேர்த்துக் கணக்கிட்டால்,  35 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 35 லட்சம் கோடி மதிப்புக்கு இங்கே விவசாயம் நடைபெறும். ஆகவே, லாபம் என்ற அடிப்படையில் பார்த்தாலும் இது மிகவும் முட்டாள்தனமான திட்டம்.
மேலும், இவர்கள் நிலத்தை சுமார் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அகழ்வு செய்ய அனுமதி பெற்றுள்ளனர். அதாவது பூமிக்கும் கீழே ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளை தோண்டி பாறைகளை உடைத்து, நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கப்போகின்றனர். அதன் பாதிப்பு யூகிக்க முடியாததாக இருக்கும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பாதிப்பு சேர்வராயன் மலை வரையிலும் இருப்பதாகச் சொல்கின்றனர். எனில், இவர்களின் அகழ்வுப் பணியால்          தஞ்சாவூர் பெரிய கோயிலும், கங்கைகொண்ட சோழபுரமும் சரிந்துவிழும் வாய்ப்பு இருப்பதை முற்றிலும் மறுக்க முடியாது” என்று அதிரவைக்கிறார்.
திருநாவுக்கரசு குறிப்பிடும் மற்றொரு கோணம் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களின் நதிநீர் சிக்கல்கள் சட்டபூர்வமாகவோ, பேச்சுவார்த்தைகள் மூலமோ, வளர்ச்சித் திட்டங்கள் மூலமோ தீர்த்துவைக்கப்படுகின்றன. ஆனால், கடந்த  40 ஆண்டுகளுக்கும்  மேலாக காவிரி நீர் பிரச்னை மட்டும் ஏன் தீராத சிக்கலாகப் ‘பராமரிக்கப்படுகிறது’? காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதற்கும், காவிரி நீர் கடைமடை வந்து சேராததற்கும் உள்ள இணைப்பு என்ன? ‘இனிமேலும் விவசாயம் செய்து பிழைக்க முடியாது’ என இன்று உருவாகியுள்ள மனநிலை இயல்பானதா? விவசாயிகள் தாங்களாகவே விவசாயத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் முடிவை எடுப்பதற்குப் பின்னால் அரசின் பாத்திரம் உண்டா, இல்லையா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை. இன்றைய சிக்கல்களை, ஒரு விரிந்த கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. இப்போதைய நிலையில்கூட, நல்ல விலை கொடுத்தால் நிலத்தை விற்றுவிட பலர் தயாராக இருப்பதுதான் அவர்களின் பலம்!
தேர்தலுக்குப் பிறகு என்னவாகும்?
இந்தத் திட்டத்துக்காக, மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2,000 இடங்களில் கிணறுகள் அமைத்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அதாவது, எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மட்டுமே நிறைந்திருக்கும். மீத்தேன் வாயுக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக வயல்வெளிகளில் பாய்ந்தோடும். இதற்காக ஒவ்வோர் இடத்திலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர் என்று இடத்துக்குத் தகுந்தாற்போல நிலங்களை வாங்கியுள்ளனர். திட்டத்தின் செயல்பாடு தற்போது சற்றே மெதுவாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மிதவேகம் தேர்தலுக்கானது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசின் அசுர பலத்துடன் திட்டம் செயல்படுத்தப்படும் வாய்ப்புகளே அதிகம்!

”அப்படித்தான் நாங்களும் யூகிக்கிறோம்” என்ற பேராசிரியர் ஜெயராமன் இதன் அரசியல் கோணத்தை விளக்கினார்.
”இந்த மீத்தேன் வாயுத் திட்டத்துக்காக 2010-ல் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 2011-ல் அப்போதைய மாநில தி.மு.க. அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ‘மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்பட அனைத்து அனுமதிகளையும் பெற்று நாங்களே திட்டம் செயல்படுத்துவதை உறுதி செய்வோம்’ என்றது அந்த ஒப்பந்தம். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். திட்டத்துக்கு எதிர்ப்பு இருப்பதைப் பார்த்ததும் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய்ந்து மூன்று மாதங்களில் அறிக்கை அளிப்பார்கள் என்று சொன்னார். அவர்கள் ஆராய்ந்தார்களா… இல்லையா? என்று தெரியாது. இன்னமும் அறிக்கை வரவில்லை. ஆனால், அந்த நிபுணர் குழுவில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையும் இருக்கிறது. அமெரிக்கா, நைட்ரஜன் குண்டு தயாரிக்க வைத்திருந்த வேதிப்பொருள்களை நைட்ரேட் உப்பாக்கி இங்கு கொண்டுவந்து பசுமைப் புரட்சி என்ற பெயரில் மண்ணை மலடாக்கியவர் சுவாமிநாதன். ஆகவே, அறிக்கையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது.
எங்களைப் பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்களுக்கு விரோதிகளாகத்தான் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள்கூட அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பது இல்லை. இப்போது நாங்கள் நம்பியிருப்பது மாபெரும் மக்கள் சக்தியை மட்டும்தான். குழாய் அமைக்கப்படும் ஒவ்வோர் ஊரிலும் 2,000 பேர் திரண்டு அதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே எங்கள் திட்டம். ஏனெனில், அரசாங்கமும் சட்டமும் அதிகாரபூர்வமாக எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கின்றன. அதைத் தட்டிக்கேட்பது எங்கள் கடமை!” என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் அவர்.
கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் அலுவலகம் எதுவும் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் அவர்கள் தரப்பின் விளக்கம் பெறுவதற்காக மின்னஞ்சல் வழியே தொடர்புகொண்டோம். ‘விரைவில் உங்களைத் தொடர்புகொள்கிறோம்’ என பதில் வந்த நிலையில், இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரையிலும் எந்தப் பதிலும் வரவில்லை.
கருணாநிதி, திருவாரூர்க்காரர். அ.தி.மு.க-வில் மன்னார்குடிக்காரர்களின் ஆதிக்கம்தான் இன்னும் இருக்கிறது. இருந்தாலும் என்ன… பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தங்கள் சொந்த ஊர்களைக்கூட திறந்துவிடுவதில் இவர்களுக்கு சிறு தயக்கமும் இல்லை. ஆனால், உழவர்களைப் பொறுத்தவரை இது ‘வாழ்வா, சாவா?’ போராட்டம். இதில் விட்டுக்கொடுத்தால் அநாதைகளாகப் பஞ்சம் பிழைக்க ஊர், ஊராகத் திரியவேண்டி இருக்கும். வண்டல் மண்ணின் வாசம் நிறைந்த மருத நிலத்தின் உழவர்கள், தங்களின் பல்லாயிரம்  ஆண்டு கால விவசாயப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைக்க நடத்தப்போகும் இறுதிப் போர் இது!

கூடங்குளம் தரும் படிப்பினை!
சமகாலத்தில் இதே மின்சாரத்தை முன்வைத்து நாம் எதிர்கொள்ளும் பெரும் போராட்டங்களில் ஒன்று கூடங்குளம். ஆனால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உண்ணாவிரதம் தொடர்ந்தாலும்கூட நோக்கத்தில் வெற்றி அடைய முடியவில்லை. மின் உற்பத்தியும் பகுதி அளவில் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் இருந்து மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினரும், டெல்டா பகுதி மக்களும் சில படிப்பினைகளைப் பெறவேண்டியது அவசியம்.
இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஜெயராமன், ”மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தவரை, பரவலாக ஆயிரக்கணக்கான இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியாக வேண்டும். அந்தந்தப் பகுதி மக்களின் எழுச்சி இல்லாமல் இதை முறியடிக்க முடியாது. அதனால் மக்களிடம் இதுகுறித்த விழிப்பு உணர்வையும், இதன் அரசியல் நியாயத்தையும் எடுத்துச் செல்கிறோம். மேலும், போராட்டத்தை லாபகரமாக மாற்றவும் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கவும் முயலும் என்.ஜி.ஓ. குழுக்களைத் தடுத்து நிறுத்துவதிலும் உறுதியாக இருக்கிறோம்!” என்றார்.
கிராம மக்கள் செய்ய வேண்டியது என்ன?
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல அமைப்புகள் சார்பில் டெல்டா பகுதிக் கிராமங்களில் தொடர்ச்சியான விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள்… கிராம மக்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர்.
கிராமத்தினர் உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் உள்ளூரின் நில விற்பனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  கனரக இயந்திரங்கள் குழாய் அமைக்க வரும்போது, ‘அவர்கள் யார்?’, ‘நோக்கம் என்ன?’ என்று விசாரிக்க வேண்டும். ஒருவேளை, சரியான தகவல் தெரிவிக்காமல் குழாய் அமைத்தால், மக்களைத் திரட்டி முடக்க வேண்டும்.
  கிராமசபா கூட்டத்தில், ‘எங்கள் கிராம எல்லைக்குள் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
  இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதை ஒரு வாக்குறுதியாகக் கொடுத்து, ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்!
 
நன்றி: http://bharathithambi.com/?p=365