சனி, 28 மார்ச், 2009

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஓர் ஆய்வு

அபூசாலிஹ்

நாடாளுமன்ற அவை விவாதங்களைப் பொறுத்த அளவில் இல்யாஸ் ஆஸ்மி 79 தடவையும் ஜே.எம்.ஹாரூன் மற்றும் ஹன்னான் மொல்லாஹ் தலா 66 தடவையும் விவாதங்களில் பங்கெடுத்தனர். 6 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த விவாதங்களிலும் பங்கெடுக்க வில்லை. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கெடுப்பின் சதவீதம் 20.84.


தனிநபர் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தியவர்கள் இக்பால் அஹ்மத் சராத்கி எட்டு தடவையும் அப்துல்லாஹ் குட்டி ஆறு தடவையும் ஷாநவாஸ் ஹுஸைன் ஒரு தடவையும் தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசி உள்ளனர். இதர முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் தனிநபர் மசோதா தாக்கல் செய்யவில்லை


முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவை செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் பக்கத்தில் உள்ள அட்டவணையாக உள்ளது.


முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐந்து வருட அவை செயல்பாடுகள் ஆகும்.


ஈ.அஹ்மத் (முஸ்லிம் லீக்), முஹம்மது அலி அஷ்ரஃப் பாத்திமி (ராஷ்ட்ரிய ஜனதாதளம்), தஸ்லீமுதீன் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) இவர்கள் அமைச்சர்களாக இருந்ததால் கேள்விகள் எழுப்புவதிலும் விவாதங்களில் பங்கேற்பதிலும் இடம் பெறாமல் தவிர்த்து விட்டார்கள். காபினெட் அமைச்சராக இருந்த போதிலும் ஒரு விவாதத்தில் பங்கெடுத்ததோடு ஏழு வினாக்களை தொடுத்தவர் அப்துல் ரஹ்மான் அந்துலே.



thanks to : tmmk.in

வியாழன், 26 மார்ச், 2009

பாஸிஸ காவல்துறையும் இரட்டைவேட ஊடகங்களும்!


பொதுவாகவே இந்தியக் காவல்துறையும் உளவுத்துறையும் காவிமயமாக்கப்பட்டுள்ளது என்றதொரு குற்றச்சாட்டு நீண்டகாலமாக உண்டு. முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதார, அரசியல் நிலைகளைக் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சச்சார் கமிட்டியின் அறிக்கையும் கிட்டத்தட்ட இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் மும்பை காவல்துறையின் செயல்பாடுகளை எடுத்துக் கூறமுடியும். அந்த அளவிற்கு மும்பை காவல்துறையின் பாஸிஸ, காவி முகம் 1992 பாபரி மஸூதி குண்டுவெடிப்பின் பொழுது மும்பையில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரத்தில் வெளிப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு தருணங்களில் மும்பை காவல்துறையின் முஸ்லிம் விரோதச் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருந்தாலும் அவை ஊடகத்துறையில் ஊடுருவியுள்ள பாஸிஸக் கூட்டாளிகளின் கைங்கர்யத்தால் மக்களிடையே வெளிப்படாமலேயே மறைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அதிலும் குண்டுவெடிப்பாக இருந்து விட்டால் உடனடியாக சில முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து, முஸ்லிம் சமுதாயத்தைக் கூண்டில் நிறுத்துவது இப்பாஸிஸக் காவல்துறையின் வாடிக்கையான செயல். அவ்வேளைகளில் காவல்துறைக்குப் போட்டியாக ஊடகங்களும் நான் முந்தி நீ முந்தி என இல்லாத "இஸ்லாமியத் தீவிரவாதத்தை" முஸ்லிம் பெயர்களில் சந்தைப் படுத்துவது வழக்கம்.

மாறிவரும் வேக உலக நடப்புகளில் மாய்ந்து போகும் குண்டுவெடிப்புகளின் வடுக்களோடு, அதில் தொடர்புடையவர்களாகக் கைது செய்யப்பட்டு "தீவிரவாதிகளாக்கப்பட்ட" முஸ்லிம் இளைஞர்களின் கதையையும் மக்கள் மறந்து விடுகின்றனர். மறந்து விட்ட மக்களுக்கு எதற்காக வீணாக நினைவுபடுத்த வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ, பல வழக்குகளிலும் 'அவசரமாக'க் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக நிரபராதிகள் என தெளிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் பொழுது, ஆரம்பத்தில் "முஸ்லிம் தீவிரவாதிகள்" எனவும் புதியப் புதிய பெயர்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லாத தீவிரவாத இயக்கங்களையும் காவிக் கூட்டணி அமைத்துள்ள பாஸிஸ ஊடகங்களும் மறைத்து விடுகின்றன.

இதற்குச் சரியான எடுத்துக்காட்டு, மும்பை தாக்குதலின் பொழுது ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட சிமியின் புதிய தென்னகப் பதிப்பு என்று சொல்லப் பட்ட, "டெக்கான் முஜாஹிதீன்!". ஒவ்வொரு குண்டுவெடிப்புகளின் பின்னணியிலும் செயல்பட்ட/படும் உண்மையான தீவிரவாதிகளால் உருவாக்கப்படும் இந்தப் புதுப்புது தீவிரவாத இயக்கங்களின் பெயர்கள், பிந்தைய காலங்களில் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடுவதற்கு வசதியாக உளவுத்துறையின் தலைமையகங்களில் பதியப்பட்டு விடுவது வழக்கம்.

ஆனால், டெக்கான் முஜாஹிதீன் விவகாரத்தில் மட்டும் "மும்பை தாக்குதலை நடத்தியவர்கள் நாங்கள் தான் என ரஷ்ய/கனடாவிலிருந்து டெக்கான் முஜாஹிதீன் பெயரில் மின்னஞ்சல் அனுப்பிய ஆசான்களுக்குப் பிழைத்தது". ஆரம்பத்தில் "டெக்கான் முஜாஹிதீன்" பெயரில் ரஷ்யாவிலிருந்து வந்த மின்னஞ்சலை மையப்படுத்தி விழா கொண்டாடிய பெரு ஊடகப் பணமுதலைகள், இப்பொழுது அதனைக் குறித்து வாயைத் திறப்பதே இல்லை.

அதனைப் போன்ற மற்றொரு பெயர்தான், மும்பை தாக்குதலுக்கு முன்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின்போது அறிமுகப்படுத்தப்பட்ட சிமியின் இல்லாத "இந்தியன் முஜாஹிதீனும்".அத்தகையதொரு இல்லாத நிழல் இயக்கம் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அந்தக் குண்டுவெடிப்புகளின்போது குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலரை, அவ்வியக்கங்களின் நிறுவனர்களாகவும் துணை நிறுவனர்களாகவும் காவல்துறையும் ஊடகங்களும் அறிமுகப்படுத்தின.

அதில் ஒருவர்தான் சாதிக் ஷேக். இரயில் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இவரை, "இந்தியன் முஜாஹித்தீன் (IM) அமைப்பின் துணை நிறுவனராக" மும்பை காவல்துறை அறிமுகம் செய்தது. அப்பொழுது இவரைக் குறித்துப் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிடாத ஊடகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இறுதியாக, இந்தச் சாதிக் ஷேக் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் அவர்தான் இந்தியன் முஜாஹிதீனின் துணை நிறுவனர் என அவர் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் இத்தகைய செயலுக்கு அவர் வருந்துவதாக அவர் வாக்குமூலம் அளித்ததாகவும் பாஸிஸ ஊடகங்கள் பொய்களைக் கடைபரப்பின.

தற்பொழுது அதே சாதிக் ஷேக் நிரபராதி எனவும் அவருக்கும் இரயில் குண்டுவெடிப்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை எனவும் அப்பாவியான அவரை மும்பை காவல்துறை பொய்க் குற்றம் சுமத்தி குற்றவாளியாக்கியதாகவும் கூறி, மும்பை தீவிரவாதத் தடுப்புத் துறை (ATS) அவரை விடுதலை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அவரின் விஷயத்தில் மும்பை காவல்துறை செய்த அநியாயத்தைக் குறித்து தீவிரவாதத் தடுப்புத் துறை கூறும் தகவல் இதோ:

கடந்த 2006 ஆம் வருடம் ஜூலை 11ந் தேதி நிகழ்ந்த இரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என சந்தேகிப்பட்டு மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் சாதிக் ஷேக். அதன் பின் தொடர்ச்சியாக நடந்த விசாரணைக்குப் பிறகு தற்போது "குண்டு வெடிப்பிற்கும் இவருக்கும் தொடர்புள்ள எந்த ஓர் ஆதாரமும் கிடைக்காத காரணத்தினால் குற்றமற்றவர்" என்று நிருபணமாகியுள்ளதாக ATS அறிவித்துள்ளது.

ATS விசாரணையின் ஒரு பகுதி!

"குற்றத்தை சாதிக் ஒப்புக் கொண்டார்!" என மும்பை குற்றப்பிரிவு இதுநாள்வரை கூறிவந்த தகவல் பொய்யானது என்பது வேறு வகையில் நிரூபணம் ஆகியுள்ளது.

மும்பையின் forensic science laboratory ஏ.டி.எஸ் இடம் சமர்ப்பித்துள்ள ஆய்வுகளான மூளையில் பதிவாகும் விஷயங்களைக் கண்டறியும் (brain mapping) மற்றும் பாலிகிராஃப் (polygraph) ஆகிய சோதனைகளின் மூலம் சாதிக், குற்றமற்றவர் என்று நிருபணம் ஆகியிருப்பதோடு, குற்றத்தினை ஒப்புக் கொள்ள வற்புறுத்தப் பட்டுள்ளார் என்பதையும் காட்டிக் கொடுத்திருக்கிறது.

இந்தத் திடுக்கிடும் தகவல், இவ்வழக்கில் பெரும் திருப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அப்பாவி சாதிக்கைக் குண்டு வெடிப்பில் தொடர்பு படுத்திய மும்பை குற்றப்பிரிவு, அஹமதாபாத் காவல்துறையினர் மற்றும் டெல்லி காவல்துறையினர் ஆகியோரின் கூற்று ஒட்டுமொத்தமான பொய் மூட்டைகள் என்று நிருபணம் ஆகியுள்ளது.

ATS இன் இந்த அறிவிப்பு மும்பையின் குற்றப்பிரிவுக் காவல்துறையினைப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008 செப்டம்பர் மற்றும் அக்டோபரில் மும்பை குற்றப்பிரிவு (Mumbai crime branch) காவல்துறையினர், 21 பேரைக் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியன் முஜாஹித்தீன் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என்றும், விசாரணையின்போது சாதிக் குண்டு வெடிப்பிற்கும் தனக்கும் தொடர்பிருப்பதாகவும் மும்பை குற்றப்பிரிவு தகவலை வெளியிட்டது.

மும்பை குற்றப்பிரிவு வெளியிட்ட அந்தத் தகவல் ATS க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில் ATS இதே சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தனது விசாரணையின் கீழ் பதிமூன்று பேரைக் கைது செய்திருந்தது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் சிமி உறுப்பினர்கள் என்ற சந்தேகக் கண்ணோடு பதினோரு ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை ATS தயாரித்திருந்தது.


இச்சூழலில், மும்பைக் குற்றப்பிரிவின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமது விசாரணையை சாதிக் பக்கம் திருப்பிய ATS, இரண்டு வாரங்கள் கடும் விசாரணையை அவரிடம் மேற்கொண்டது. விசாரணையின் இறுதியில், மும்பை குற்றப்பிரிவின் அறிவிப்பு தமக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ATS அறிவித்துள்ளது.

"முப்பத்தி ஓரு வயதான சாதிக்கைக் கடந்த பிப்ரவரி 28ம் தேதி கைது செய்து நாங்கள் விசாரணையைத் துவக்கினோம். இரு வார தொடர் விசாரணையில் ரெயில் குண்டுவெடிப்பிற்கும் சாதிக்கிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவானது. மேலும் தொடர்புடைய ஆதாரங்கள் ஏதும் கிடைக்க வில்லை!" என்றார் ATS அதிகாரி ஒருவர்.

ATS தற்போது செய்வதறியாமல், நீதிமன்றத்தில் தனது தரப்பிலான புகாரைச் சமர்ப்பிக்க உள்ளது. இதன் மூலம் சாதிக் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப் படுவார் என்று ATS அறிவித்துள்ளது.

அதே சமயத்தில், தான் தவறு இழைத்துவிட்டதாகவும் அதற்காக வருந்துவதாகவும் சாதிக் கூறியதாக ஒரு செய்தி ஊடகம் திரித்து வெளிட்ட சிடி வெளியீட்டினை ATS கடுமையாக கண்டித்துள்ளது.

குண்டுவெடிப்புகளும் அசம்பாவிதங்களும் நிகழும் வேளைகளில் காவிமயமாக்கப்பட்டுள்ள காவல்துறையும் ஊடகங்களும் போட்டியிட்டுக் கொண்டு முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதிகள் எனக்கூறி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் அதே வேளையில், தொடர் விசாரணைகளின் போது அதிர்ஷ்டவசமாக யாரையாவது நிரபராதி என கண்டறியப்பட்டால், அவர் தொடர்பாக அவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதக் கட்டுக்கதைகளைக் குறித்தோ அவரது வாழ்க்கை சீரழிந்துள்ளதைக் குறித்தோ எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி, அச்செய்திகளைக் கண்டுகொள்வதையே இந்த ஊடகங்கள் தவிர்த்து விடுகின்றன. ஊடகத்துறையின் நம்பகத்தன்மைக்கு வேட்டு வைக்கும் விதத்தில் காவித்துவம் ஆணிவேராக ஆகி விட்ட ஊடகங்களிடமிருந்து நியாயங்களை எதிர்பார்ப்பதில் இனியும் எவ்வித அர்த்தமுமிருப்பதாகத் தெரியவில்லை.

நீதிக்காவும் நியாயத்திற்காகவும் புதைக்கப்படும் உண்மைகளுக்காகவும் காவிமயமாகி விட்ட ஊடகத்துறையைச் சீர் செய்வதற்காகவும் இறைமார்க்கத்தினர் எழுதுகோல் ஏந்த வேண்டிய காலம் எப்போது?

கார் : 'பயங்கர' மலிவு !


சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனியர் அம்பானி மண்டையைப் போட்ட பிறகு பந்தாவாக அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் விளம்பரத்திற்கு எல்லா மொழி தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரம், "ஒரு தபால் கார்டுக்கு ஆகும் செலவைவிட இந்தியாவில் செல்பேசிக் கட்டணம் குறைவாக இருக்க வேண்டும்" என்ற திருபாய் அம்பானியின் கனவை நிறைவேற்றுகிறோம் என்று பீற்றினார்கள். உண்மையில் ரிலையன்சு செல்பேசி மலிவு விலையில் கூறுகட்டி விற்கப்படும் காய்கறிபோல அள்ளி இறைத்தார்கள். மக்களுக்கும் அப்படி அம்பானியின் கனவை ஜூனியர் அம்பானிகள் நிறைவேற்றி விட்டார்களோ என ஒரு மயக்கம் இருந்தது.

அப்புறம்தான் அம்பானி சகோதரர்களின் பிக்பாக்கட் இரகசியம் வெளிப்பட்டது. தொலைபேசித் துறையில் அவர்கள் செய்த ஊழல், வெளிநாடு அழைப்புக்களை உள்ளுர் அழைப்புக்களாக மாற்றி பொய் எண் கொடுத்து பல நூறு கோடி ரூபாயை ஏப்பம் விட்டது, அரசியல் செல்வாக்கினால் அந்தத் திருட்டுத்தனத்திற்கு ஜூஜூபி அபராதம் கட்டி ஆட்டையைப் போட்டது எல்லாம் வெளிவந்த பிறகு திருபாய் அம்பானியல்ல, செத்த பின்னும் திருடும் "திருட்டுபாய் அம்பானி" என்பது சந்திக்கு வந்தது. அம்பானியின் ஆதாரப்பூர்வமான வம்பு-தும்புகளையெல்லாம் கிழக்குப் பதிப்பகம் போட்டிருக்கும் அம்பானி பற்றிய பக்திப் பரவசமான வரலாற்று இலக்கியத்தில் இருக்காது என்பதை முன்னரே சொல்லிக் கொள்கிறோம். பின்னர் "இதெல்லாம் கிழக்கு பதிப்பகத்தில் இல்லையே" என்று அசடு போல அதிர்ச்சியடையக்கூடாது.

திருபாய் அம்பானியின் கனவைப் போல ரத்தன் டாடாவும் ஒரு கனவு கண்டார். மும்பையின் மழைக்கால நாள் ஒன்றில் காரில் பயணம் செய்த ரத்தன் டாடா, ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் மழையில் நனைந்து கொண்டு ஸ்கூட்டரில் செல்வதைப் பார்த்து பரிதவித்துப் போனாராம். உடனே ஸ்கூட்டர் விலையில் அல்லது சற்று அதிகமாக ஒரு இலட்சத்தில் கார் தயாரித்து நடுத்தர வர்க்கத்தைக் கடைத்தேற்றுவது என்று முடிவு செய்தாராம். இதைக் கேள்விப்பட்ட மக்களும், அவர்களுக்கு முன்னரே டாடாவின் அருளுள்ளத்தை ஊதிவிட்ட ஊடகங்களும் இந்த ஒரு இலட்ச ரூபாய் மதிப்புள்ள கார் சாத்தியம்தானா என்று கொஞ்சம் சந்தேகத்துடனும், நிறைய சந்தோஷத்துடனும் காத்திருந்தார்கள்.

டாடாவின் கனவை நனவாக்குவதற்கு மேற்கு வங்கத்தின் "டாடா கம்யூனிஸ்டுகள்" ஓடோடி வந்தார்கள். சிங்கூரில் இருபோகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் சுமார் 950 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து வம்படியாகப் பிடுங்கி, பேருக்கு நிவாரணத்தொகை கொடுத்துவிட்டு மலிவு விலைக்கு டாடாவுக்கு விற்றார்கள். இதுபோக டாடாவுக்கு சில ஆயிரம் கோடி கடன், மற்ற சலுகைகள் என தீபாராதனை திவ்யமாக நடந்தது. என்ன-ஏது எனத் தெரியாமல் தமது நிலங்களை மார்க்சிஸ்டு அரசு பிடுங்கியதைக் கண்ட விவசாயிகள் அதை எதிர்த்துப் போர்க்குணத்துடன் போராடினார்கள். அதையைம் மீறி டாடா, தமது பங்காளி புத்ததேவுடன் இணைந்து ஆலையை நிறுவினார். இடையில் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அடாவடியாக நிறுவிய மேற்கு வங்க அரசைக் கண்டித்து விவசாயிகள் போர்க்குணத்துடன் போராட, மார்க்சிஸ்டு அரசு போலீசு மூலம் பலரைச்சுட்டுக் கொன்றது. இதன் மூலம் சிங்கூருக்கும் இதுதான் பாடமென்று எச்சரிக்கையும் விடுத்தது.

ஆனால் சிங்கூர் விவசாயிகள், எதிர்க்கட்சிகள் உதவியுடன் எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி, தொழிற்சாலையை முற்றுகையிட்டுப் போராடினார்கள். பலநாள் நீடித்த இந்தப் போராட்டத்தைப் பார்த்து டாடாவுக்கு பெருங்கோபம் வந்தது. உடனே தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதாகவும் "அறிவிக்கப்பட்ட தேதியில் நானோ கார் வெளிவரும்" எனவும் சபதம் செய்தார். அதுவரை உத்தரகண்டில் இருக்கும் டாடா மோட்டார் தொழிற்சாலையில் தற்காலிகமாக நானோ கார் தயாரிக்கப்படும் எனவும் அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலிக் கம்யூனிஸ்டு அரசு, ரத்தன் டாடாவிடம் மண்டியிட்டு, "போகாதே, போகாதே என் கணவா" என்று சென்டிமெண்டாகவும் புலம்பிப் பார்த்தது. விவசாயிகளை நந்திகிராம் போல அடக்குவதற்குத் துப்பில்லையென முறைத்துக் கொண்ட டாடா 'டூ' விட்டுவிட்டு நடையைக் கட்டினார். அப்போதும் டாடாயிஸ்டு கம்யூனிஸ்டுகள் மேல் எந்தத் தவறுமில்லையென பாராட்டுப் பத்திரம் அளித்துவிட்டுத்தான் சென்றார்.

ரத்தன் டாடவுக்கும், புத்ததேவ் பட்டாசார்யாவுக்கும் எந்த அளவு தோழமை உறவு இருந்ததோ அதற்குக் கடுகளவும் குறையாமல் டாடாவுக்கு மோடியுடனும் நட்பிருந்தது. மேற்கு வங்கம் கைவிட்டால் என்ன குஜராத் காத்திருக்கிறது என்று மோடி கம்பளம் விரித்தார். இமைப்பொழுதில் டாடா என்ற முதலாளிக்கும், மோடி எனும் பாசிஸ்டுக்கும் பேச்சுவார்த்தை நடந்து சடுதியில் ஒப்பந்தம் போடப்பட்டது.

இனிமேல்தான் இலட்ச ரூபாய்க்கு விற்கப்படும் நானோ கார் மக்களுக்கு பட்டை நாமம் போட்ட கதை வருகிறது. நானோ காரின் மலிவு விலைக்கும், அதை சாத்தியமாக்கிய டாடாவின் அளப்பரிய ‘சமூக’ சேவைக்கும் மயங்கிப்போன நடுத்தர வர்க்கம் தங்களிடமிருந்து பிடுங்கப்பட்ட பணம் டாடாவின் மலிவு விலை காருக்கு எப்படி போய்ச் சேருகிறது என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

10.8.2008 அன்று குஜராத் அரசுக்கும் டாடா நிறுவனத்திற்கும் போடப்பட்ட இந்த இரகசிய ஒப்பந்தம், யார், யாருக்குச் சேவை செய்கிறார்கள் என்பதைப் போட்டுடைக்கிறது.

குஜராத்தின் சதானந்த் இடத்தில் அமைய இருக்கும் டாடாவின் நானோ தொழிற்சாலைக்கு 1100 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விவசாய நிலங்களை விவசாயமற்ற நடவடிக்கைகளுக்கு விற்கக்கூடாது என்ற விதி மீறப்பட்டு அதுவும் மலிவான விலையில் 400 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணமும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு எட்டு தவணைகளில் டாடா நிறுவனம் கட்டினால் போதும். விவசாய நிலங்களை இப்படி தொழிற்சாலைக்கு கொடுக்கும் பட்சத்தில் அதற்கென தனியாக பணம் கட்ட வேண்டுமென்ற விதியும் டாடவுக்காக ரத்து செய்யப் பட்டது.

2000 முசூலீம் மக்களை கொன்ற கும்பலுக்கு தலைமை தாங்கியிருக்கும் மோடிக்கு அப்பாவி விவசாயிகளை மிரட்டத் தெரியாதா என்ன? மேலும் மேற்கு வங்கம் போல அரசியல் ரீதியாக அணி திரள இயலாத அந்த அப்பாவிகள் தமது நிலத்தை கொடுத்துவிட்டு இன்றும் புழுங்குகின்றனர். அடுத்து இந்த நில விற்பனைக்கான பத்திரப்பதிவுக்கான 20 கோடி ரூபாயை மாநில அரசு ரத்து செய்து இலவசமாகப் பதிவு செய்து கொடுத்திருக்கிறது.

டாடா நிறுவனம் தொழிற்சாலையை அமைப்பதற்கு 9570 கோடி ரூபாயை குஜராத் அரசு 0.1% வட்டிக்குக் கொடுத்திருக்கிறது. இதில் சிங்கூரிலிருந்து, சதானந்த் பகுதிக்கு தொழிற்சாலையை மாற்றுவதற்கான செலவுப் பணம் 2330 கோடிரூபாயும் அடக்கம். இந்த 9570 கோடிப் பணம் இருபது வருடங்களுக்குப் பிறகு டாடா நிறுவனம் அதுவும் பல தவணைகளில் திருப்புமாம். தொழிற்சாலை அமைய இருக்கும் இடத்தில் தரமான சாலை, 14,000 கனமீட்டர் நீர், மின்வசதி இன்னபிற அடிப்படைக் கட்டுமான வசதிகளை 700 கோடி ரூபாயில் குஜராத் அரசே செய்து கொடுக்கும். மின் தீர்வை கட்டுவதற்கும் டாடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு குஜராத் அரசு செலவு செய்யப்போகும் அல்லது இழக்கப்போகும் பணத்தின் மதிப்பு 30,000 கோடி ரூபாய்.

ஆக ஊரைக் கொள்ளையடித்து ஆடம்பரத் திருமணத்தில் கிடா வெட்டி மக்களுக்கு இலவச விருந்து அளிக்கும் கதைதான் இங்கும் நடந்திருக்கிறது. இவ்வளவு சலுகைகள், கடன் தொகை, இலவசமான அடிப்படை வசதிகள் எல்லாம் இருந்தால் நானோ காரை ஒரு இலட்சத்திற்குப்பதில் இலவசமாகவே அளிக்கலாமே? ஆம்! நானோ காருக்கு நாம் கொடுக்கும் ஒரு இலட்சத்திற்கும் பின்னால் நமது பணம் இரண்டு இலட்சம் ஏற்கனவே பிடுங்கப்பட்டிருக்கிறது.

இன்னும் எட்டு மாதங்களில் உற்பத்தியை ஆரம்பிக்கப் போகும் தொழிற்சாலையில் முதலில் ஆண்டுக்கு 2.50 இலட்சம் கார்களும், பின்னர் அது 5 இலட்சமாக உயர்த்தி உற்பத்தி செய்யப்படுமாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டமும் உண்டு.

விவசாயிகளுக்கும், சிறு தொழில் செய்யும் முதலாளிகளுக்கும், கல்விக்காக மாணவர்களும் கடனுக்காக வங்கி சென்றால் ஆயிரம் கேள்விகளையும், அலைக்கழிப்புக்களையும் சந்திக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் ஒரு முதலாளிக்கு மின்னல் வேகத்தில் எவ்வளவு பெரிய சலுகைகள், கடன்கள்?

மற்றபடி டாடாவுக்கும், குஜராத் அரசுக்கும் போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் இரகசியமாகும். இதை எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசு தனது அரசியலுக்காக வெளிக் கொணர்ந்திருக்கிறது. இப்படி அரசு இரகசியம் எப்படி வெளியே போனது என மோடியின் அரசு விசாரிக்கிறதாம். இந்த விவரங்கள் அனைத்தும் 12.11.2008 தேதியிட்ட இந்து பேப்பரில் வந்திருக்கிறது.

நானோவின் பின்னே இப்படி அப்பட்டமான கொள்ளையும், சுரண்டலும் இருப்பதுதான் அதன் மலிவு விலைக்குக் காரணம். பொதுத் துறைகளை தனியார் முதலாளிகளுக்காக நசிய விட்டு, பின்னர் தவிட்டு ரேட்டில் விற்பனை செய்யும் நாட்டில் ஒரு முதலாளிக்கு முப்பதாயிரம் கோடி இனாமென்றால் இந்த நாட்டை ஆள்வது யார்? தரகு முதலாளிகளா, இல்லை ‘மக்களால்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா?

தனது விளம்பரத்தில் பல வசதிகள் இருப்பதாக புனைந்துரைக்கும் டாடாவின் நானோ கார் crash test எனப்படும் விபத்துச் சோதனையை மட்டும் செய்து சான்றிதழ் வாங்கவில்லையாம். இதன் பல உறுப்புக்கள், இணைப்புக் கருவிகள் மலிவான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருப்பதால் டாடா இந்த சோதனைக்கு தயாராக இல்லை. அதாவது இந்தக் காரை ஒரு டூ வீலர் கூட மோதி பொடிப்படியாக நொறுக்கி விடலாம். நடுத்தர வர்க்கம் சுலபமான வழியில் பரலோகம் செல்லும் வசதியை நானோ ஏற்படுத்தித் தருகிறது.

உலகமெங்கும் பொருளாதார வீழ்ச்சிக்காக ஆட்டோமொபைல் தொழில் நசிந்து வரும் வேளையில் டாடாவின் நானோ கார் அறிமுகம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். மேலும் இந்தக் காரை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் டாடாவிற்கு இருக்கிறதாம்.

வெள்ளைக்காரனது உயிருக்கு மட்டும் அவ்வளவு எச்சரிக்கைகள்! அதைப் பரிசோதிப்பற்கு இந்தியனின் உயிர்!

2011 ஆம் ஆண்டு விபத்து சோதனை உட்பட எல்லா சோதனைகளிலும் வென்று ஐரோப்பாவின் மலிவான கார் என நானோ விற்கப்பட இருக்கிறதாம். வெள்ளைக்காரனது உயிருக்கு மட்டும் அவ்வளவு எச்சரிக்கைகள்! அதைப் பரிசோதிப்பற்கு இந்தியனின் உயிர்! பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களது சோதனைகளுக்கு இந்திய மக்களை எலிகளைப் போலப் பயன்படுத்துவது போல டாடாவும் செய்கிறது.

இந்தியாவின் பொதுப்போக்குவரத்திற்கு பயன்படும் வாகனங்கள் மொத்த வாகனங்களில் ஐந்து சதவீதமென்றால் இதைப் பயன்படுத்தும் மக்களின் சதவீதம் 70. ஆனால் மொத்த வாகனங்களில் 70 சதவீதத்தைப் பிடித்திருக்கும் தனியார் வாகனங்கள் அல்லது கார்கள் மக்களில் 5 சதவீதம் பேருக்குத்தான் பயன்படுகிறது. எனில் நானோவால் ஏமாறப்போவது பெரும்பான்மை மக்கள்தான்.

அமெரிக்காவின் போர்டு முதலாளிக்காக அங்கே பொதுப் போக்குவரத்து திட்டமிட்டே ஒழிக்கப்பட்டு கார் என்பது அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டது. அப்போதும் திவால் நிலைக்கு வந்திருக்கும் போர்டு கம்பெனிக்கு அமெரிக்க அரசு நிவாரணத் தொகை வழங்கி காப்பாற்றுகிறது. இந்தியாவில் தொழிலை ஆரம்பிப்பதற்கே அரசு போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வழங்குகிறது. இரண்டிற்கும் பெரிய வேறுபாடில்லை.

இறுதியாக நானோ கார் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட 24.3.08 திங்கட்கிழமை மேற்கு வங்கத்திற்கு ஒரு சோகமான நாளென்று சி.பி.எம்.டாடாயிஸ்டு அரசின் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் நிருபம்சென் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார். மேற்கு வங்கம் சிங்கூரில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய நானோ கார் மோடியின் மண்ணிற்கு சென்றது குறித்துத்தான் இந்த வருத்தம். குஜராத் அரசு செலவிடப்போகும் முப்பதாயிரம் கோடி ரூபாயை டாடா என்ற முதலாளிக்காக மேற்கு வங்கம் செலவிட முடியவில்லையே என பாட்டாளிகளின் தோழன் - இல்லையில்லை - டாட்டாக்களின் தோழன் வருத்தப்படுகிறார். ஆனால் டாட்டாக்களை கைவிடாமல் இந்துக்களின் தோழன் உதவியிருப்பதால், டாட்டாக்களின் தோழன் அடுத்த தேர்தலில் இந்துக்களின் தோழனோடு கூட்டணி வைத்துக்கொண்டால் யாரும் வருத்தப்படத் தேவையில்லை.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் நானோ காரின் மலிவும், அரசியலும், திரைமறைவுச்சதிகளும், ஒன்றை வெளிப்படையாக தெரிவிக்கின்றன. அது இந்திய மக்களை அவர்களுக்கே தெரியாமல் சுரண்டுவதில் வலதும் இடதும் சேர்ந்து தரும் ஆதரவில் முதலாளிகளின் ஆட்சிதான் இங்கு நடக்கிறதென உணர்த்துகின்றது.

ஒரு இலட்ச ரூபாய்க்கு காரா என வாய் பிளப்பவர்களின் மூளைக்கு இந்த விளம்பரத்தையும் கட்டுரையையும் கொண்டு செல்லுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

டாடாவின் நானோ காருக்கு வினவின் இலவச ‘விளம்பரம்’!

நன்றி: வினவு

அரசியல் சுழற்சிகளை எதிர்கொள்வோம்... ம.ம.க அறிவிப்பு.

அரசியல் சுழற்சிகளை எதிர்கொள்வோம்...


கடந்த மார்ச் 20 அன்று சவூதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் தாயகத்திலிருந்தபடியே ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி தொலைபேசியில் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து...


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடை யோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன். பாசத்திற்குரிய மனிதநேய சொந்தங்களே... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)


தேசத்தின் எல்லைக் கோடுகள் பிரிந்தாலும், உணர்வுகளால் தாய் மண்ணோடு ஒன்றி வாழும் உங்களிடம் அலைபேசியில் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் உதவியில் பேசுவதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


இன்று வெள்ளிக்கிழமை. அரபு நாடுகள் எங்கும் விடுமுறை தினம். வாரம் முழுக்க உழைத்துவிட்டு இந்த ஒருநாள்தான் ஓய்வையும், மகிழ்ச்சியையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. உங்களில் பலர், பலர் என்று சொல்வதை விட அனைவருமே இந்தியாவில் உள்ள உங்கள் பெற்றோரோடு, மனைவியோடு பிள்ளைகளோடு, உடன் பிறப்புகளோடு தொலைபேசியில் பேசி மகிழ்ந்திருப்பீர்கள். அவர்களது கரங்களைத் தொட்டுப் பிடித்து நெஞ்சார கட்டி மகிழ முடியாத வருத்தம் இருந்தாலும், குரலையாவது கேட்டு மகிழ முடிகிறதே என்ற ஒரு சிறு மகிழ்ச்சியில் இன்று திளைப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும், நன்றாகவே புரியும்.


காரணம் எனது குடும்பத்திலும் பெரும்பாலான ஆண்கள் வெளிநாடுகளில் வாழ்வதால் அதன் வலியை என்னால் உணர முடியும். இன்று ஜும்ஆ தொழுகையில் நீங்கள் உங்கள் உறவினர்களை சந்தித்திருப்பீர்கள். ஊர் செய்திகளை பரிமாறிக் கொண்டிருப்பீர்கள். நன்றாக மதியம் உறங்குவீர்கள். இப்படி வெள்ளிக்கிழமை விடுமுறையை நீங்கள் அனுபவிக்கும் இத்தருணத்தில், சமுதாய உணர்வோடு தாய்நாட்டின் மீதான நேசத்தோடு ஓரிடத்தில் எமது உரையை கேட்பதற்காக கூடியிருக்கிறீர்கள் என்றால், அதுதான் நமது கொள்கை உணர்வு. உணர்வு மட்டுமல்லாமல் நம்மை இணைக்கும் உறவும் அதுதான் என்றால் அது மிகையாகாது.


அன்பார்ந்த சொந்தங்களே... நமது தாய்க்கழகம் தமுமுக கடந்த 14 ஆண்டு காலமாக நம்மை பக்குவப் படுத்தி, அரசியல் எனும் பெருநதியில் நீச்சலடிக்க அனுப்பி வைத்திருக்கிறது. அது சாதாரண நீச்சல் அல்ல... எதிர்நீச் சல்.... அந்த எதிர்நீச்சலில் எப்படி நீந்தப் போகிறோம், எதையெல்லாம் எதிர்கொள்ளப் போகிறோம். அரசியல் சுழற்சிகளையும், சூழ்ச்சிகளையும் எப்படி தாக்குப்பிடிக் கப் போகிறோம் என்பதை நீங்களெல்லாம் கடல்தாண்டி கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்.


குப்பைகள் நிறைந்து, முடை நாற்றமடிக்கும் அரசிய­ல் இறையருளால், ஈமானிய உறுதியோடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் களமிறங்கி யுள்ளோம். இன்று மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் மாபெரும் சக்தியாக உரு வெடுத்துள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்...)


கூட்டணியில் நாம் இடம்பெற்றால் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் 25 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கூடுதல் வாக்குகளைப் பெற்று யாரும் வெற்றிபெற முடியும். சில தொகுதிகளில் 25 ஆயிரம், சில தொகுதி களில் 50 ஆயிரம், சில தொகுதிகளில் 75 ஆயிரம், சில தொகுதிகளில் 1 லட்சம் என நமது வாக்குகள் பரவிக் கிடக்கிறது. எட்டு தொகுதிகளில் இரண்டு லட்சம் தொடங்கி மூன்று லட்சம் வாக்குகள் வரை கொட்டிக் கிடக்கிறது.


இந்த வாக்கு வங்கியை முஸ்லிம்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் மற்ற கட்சிகள் ஆசை வார்த்தைகளை வீசியே அறுவடை செய்து கொண்டார்கள். நமது தோளில் ஏறி ஆட்சியைப் பிடித்தார்கள். அமைச்சர் பதவிகளை அடைந்தார்கள்.


நாமோ வாக்களித்தவுடன், வழக்கம் போல் நமது வேலையைப் பார்க்க போய்விட்டோம். இனி அது நடக்காது. பிறருக்காக தேர்தல் வேலைகளைப் பார்த்தோம். சொந்த காசை செலவழித்தோம். சுவர்களில் விளம்பரங் களை செய்வதற்காக சண்டை போட்டோம். வீட்டு வேலைகளை போட்டு விட்டு வெயி­ல் திரிந்தோம். வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தோம். தேர்தல் நாளன்று அடிதடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டோம்.


ஆனால், அதிகாரத்தை மட்டும் அடையாமல், அமைதியாக ஓரங்கட்டப்பட்டோம். அந்த பைத்தியக்காரத்தனத்திலிருந்து இப்போது விடுபட்டிருக்கிறோம்.


எங்களுக்கும் அரசியல் மரியாதை தேவை என எழுந்துவிட்டோம். எட்டு தொகுதிகளில் ஆறு தொகுதி களை அடையாளம் காட்டி, குறைந்தது மூன்று அல்லது இரண்டு தொகுதிகளாவது தாருங்கள் என கேட்கிறோம், அடம்பிடிக்கிறோம்.


இதை நமது கட்சியினரும், சமுதாய மக்களும், பிற இன மக்களும் வரவேற்கிறார்கள், பாராட்டுகிறார்கள். உறுதியாக நில்லுங்கள் என ஆதரவு தருகிறார்கள். நாம் நிலைகுலைய மாட்டோம். வஞ்சக சதிக்கு ப­யாக மாட்டோம்.


நாம் உறங்கும்போது மட்டுமே, நமது நெற்றியில் துப்பாக்கிகளை நீட்ட முடியும். அரசியலில் தூங்கும் போது கூட கால்களை ஆட்டிக் கொண்டே தூங்கினால் தான், பாதுகாப்பாகத் தூங்க முடியும். இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று கூறி அடக்கம் செய்து விடுவார் கள். அவ்வளவு மோசமானது அரசியல். அதுவும் தமிழக அரசியல் மிக மோசமானது.


எனவே நாம் ஒரு தொகுதியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்த­ல் ஏற்பதாக இல்லை. இன்னும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளோம். பொறுமை இழக்க மாட்டோம். வேறு வழியில்லை எனில், எதிர் வீட்டுக்காரரோடு பேசுவோம். அதுவும் திருப்தியில்லையெனில், தனித்துப் போட்டியிடுவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் நமது முழு ஒத்துழைப்பையும் காட்டும் வகையில் போட்டியிடுவோம்.


இதனால் நமக்கு இழப்பு வரும். ஆனால், நமது பலத்தை உணராமல் நம்மை மதிக்காதவர்களுக்குத்தான் 15 தொகுதிகளிலாவது பேரிழப்பு ஏற்படும் என்பதை எதிர்காலம் உணர்த்தப் போகிறது.


நாம் இப்போது வெற்றி பெறாவிட்டாலும், வாக்குகளை பிரிப்போம். அது எதிர்காலத்திற்கு உதவும். நமது பேரம் பேசும் வ­மை கூடும். காரணம் நமது கட்சி பொதுவானது. முஸ்லிம்களின் பின்புலத்தில் இயங்கினாலும், அது அனைத்து மத,இனி சாதி மக்களின் ஆதரவைப் பெற்றது. அனைவருக்கும் தொண்டாற்றக் கூடியது.


நமது தாய்க்கழகத்தின் சேவைகளால் ஈர்க்கப்பட்ட அனைத்து மத மக்களும் நமக்கு வாக்களிப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. எனவே அன்பார்ந்த சொந்தங்களே... நம்பிக்கைதான் வாழ்க்கை. அந்த நம்பிக் கையோடு எங்களுக்காக பிரார்த்தியுங்கள். தாயகத்தில் உள்ள உங்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த நம்பிக்கையை, செய்தியை தெரிவியுங்கள்.


அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கும், அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கும் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் நமது உறுதியை செய்தியைச் சொல்லுங்கள். அவர்களோடும் நட்பு பாராட்டுங்கள் என்று கூறி, நாடு விட்டு நாடு வாழும் நமக்கிடையே இந்த உரையாற்றும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறேன். நன்றி

புதன், 25 மார்ச், 2009

நாடு NRI க்களுக்கு என்ன செய்தது?

நம்நாட்டு அன்னியச் செலாவணி இருப்பை கணிசமான அளவில் உயர்த்தியதில் NRI க்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது.

எந்த ஒரு நாட்டிற்கும் சர்வதேச வர்த்தகத்தில் அன்னியச் செலாவணிக் கையிருப்பு முக்கியப் பங்காற்றுகிறது. போக்ரான் அணுகுண்டு சோதனையால் கடுப்படைந்த அமெரிக்கா நம்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்த போதும் நமது பொருளாதாரம் சீர்குழையாமல் காத்ததும் NRI க்களே!

அரசியல்வாதிகளின் நாற்காலிச் சண்டைகள், கட்சித்தாவல், ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடமையே கண்ணென பணியாற்றி குருவி சேர்ப்பது போல் சிறுகச்சிறுக பணம் சேர்த்தாலும், NRI க்களின் சேமிப்புக்களுக்கு இருந்த மவுசு வங்கிகளிடம் வெகுவாகக் குறைந்து விட்டது.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் NRI க்கள் வங்கிகள் மூலம் அனுப்பும் பணத்தை வங்கிக்கணக்கிலிருந்து எடுப்பதற்கும் வரி விதித்து மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளானார். நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் NRI க்களில் ஓரிருவரை ஆண்டுக்கு ஒருமுறை டெல்லியில் விழா நடத்தி ஜனாதிபதி கையால் விருது வழங்குவதோடு சரி.

கோடிக்கணக்கான NRI க்களின் அவலங்களைக் கண்டு கொள்வதே இல்லை. வெளிநாட்டு இந்திய தூதரகங்களில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் மரியாதையே தனி.

துபாய் போன்ற பெருநகரங்களில் தூதரகச் சேவைகளுக்காக வெயிலில் காத்திருப்பவர்களைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கும். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நம்நாட்டுப் பணமதிப்பு உயரும்போதும் நிச்சயமாக NRI க்கள் சந்தோசப்படமாட்டார்கள். பணமதிப்பு உயர்ந்தாலும் விலைவாசியும் சேர்ந்து உயர்வதால் அனுப்பும் பணத்தின் மதிப்பு NRI க்களைப் பொருத்த மட்டில் யாருக்கோ செல்கிறது.

இந்தியப் பணம் ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டுமென்றால் 80 UAE திர்ஹம் கொடுத்தால் போதும்! ஆனால் தற்போது 95 திர்ஹம் வரை கொடுக்க வேண்டும். ஆயிரத்திற்கு ஐந்து திர்ஹம் என்றால் இருபதாயிரம் அனுப்பும் ஒருவர் மாதத்திற்கு நூறு திர்ஹம் (சுமார் ஆயிரத்து 1200 ரூபாய்) இழப்பு!மட்டுமின்றி, UAE ஐப் பொருத்தவரை ரூம் வாடகை, பேச்சிலருக்கான கெடுபிடிகள் ஆகியக் காரணங்களால் ஏற்கனவே சாமான்ய NRI க்கள் மனஉளைச்சலில் நொந்து போயுள்ளார்கள்.

இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கு ஏற்றுமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25% விலை உயர்வு எதிர்பார்க்கப் படுகிறது.

வெளிநாட்டில்தான் கஷ்டப்படுகிறோம். ஓராண்டுக்கு அல்லது ஈராண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் விடுமுறையில் ஊர் சென்று வரலாம் என்று கிளம்பினால் ஏர்போர்ட்டிலிருந்து சுங்கத் துறையினரின் கெடுபிடி, உபரி லக்கேஜ் கட்டணம் முதல் டாக்சி டிரைவர்கள் வரை எல்லோரையும் சமாளித்து ஊர்வந்து சேர்ந்தால் குடும்பப் பிரச்சினைகளும் இருந்தால் அவற்றையும் சமாளித்து விடுமுறை முடித்து மீண்டும் பணிக்குத் திரும்புவதை நினைக்கும் போது NRI களின் நிலை ராணுவ வீரர்களின் நிலையை விடக் கொடுமையானது!

இப்படியாக உள்நாட்டு பணமதிப்பு உயர்வு, விலைவாசி உயர்வு, ஏர்போர்ட் கெடுபிடிகள் எனப் பல்வேறு சுமைகளோடு, குடும்பச் சுமையையும் சுமந்து கொண்டிருக்கும் பெரும்பாலான வெளிநாட்டு இந்தியர்களை நினைவுகூற சர்வதேச NRI க்கள் தினம் ஒன்றை அறிவித்து அவர்களுடன் குடும்பத்தினர் ஒருநாள் மட்டும் இலவசமாக தொலைதொடர்பு கொள்ள இந்தியப் பேரரசு உதவலாமே! நாட்டிற்கு NRI க்கள் செய்ததைச் சொல்லிவிட்டேன்! இப்பொழுது சொல்லுங்கள் நாடு NRI களுக்கு என்ன செய்ததென்று?

எழுதியவர்: அதிரைக்காரன்

ஒரு தொகுதியை ஏற்க மாட்டோம்...! மனிதநேய மக்கள் கட்சி உறுதி!

தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் வலுவான வாக்கு பின்னணியைக் கொண்ட மனிதநேய மக்கள் கட்சி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது.


இதனிடையே பரபரப்பை மட்டுமே கொண்டு இயங்கும் சில மீடியாக்கள், மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடும் என்பதுபோல செய்திகளை வெளியிட்டு வருகின்றன. திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்பது போலும் செய்திகளை வெளியிடுகின்றன.


இதில் எதுவும் உண்மையில்லை. எந்தக் கூட்டணியாக இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில்தான் போட்டி என ம.ம.க. உறுதியாக இருக்கிறது. ஈரோட்டில் மார்ச் 22 அன்று கடைசியாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ம.ம.க. தலைமை நிர்வாகிகள் அதை உறுதி செய்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.


அரசியல் வட்டாரத்திலிருந்து ஒரு செய்தி கசிந்தது. பா.ம.க. அ.தி.மு.க. அணிக்கு செல்வது உறுதியாகிவிட்டதாகவும், தே.மு.தி.க. தனித்து நிற்பது உறுதியாகிவிட்டதாகவும் தகவல் பரவியது. அப்படியென்றால் கடந்த தேர்தலில் பா.ம.க. போட்டியிட்ட 6 இடங்கள், ம.தி.மு.க. போட்டியிட்ட 4 இடங்கள், இரண்டு கம்யூனிஸ்ட்களும் போட்டியிட்ட 4 இடங்கள் ஆக மொத்தம் 14 இடங்கள் தி.மு.க. கூட்டணியில் காலியாக இருக்கிறது.


எனவே ம.ம.க.வின் கோரிக்கையை ஏற்று கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் ஆயிரம் மடங்கு நியாயம் இருக்கிறது.

சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு இஸ்லாமிய வங்கி முறையே தீர்வு! வாடிகன் கூறுகிறது!!

மேற்குலக வங்கிகள் இஸ்லாமிய நிதி அமைப்புகளின் விதிகளை அமுல்படுத்தி இன்றைய பொருளாதார சிக்கல்களில் திணறும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என உலக கத்தோலிக்க தலைமைப் பீடமான வாடிகன் கருத்துத் தெரிவித்துள்ளது.


இஸ்லாமிய நிதி அமைப்புகளின் ஆதாரமாகத் திகழும் உயரிய சமய கோட்பாடுகள் வங்கிகளை அதனுடைய வாடிக்கையாளர்களுடன் நெருக்கி வைப்பதுடன் உண்மை யான நன்னம்பிக்கையை ஒவ்வொரு பொருளாதார சேவையிலும் வெளிப் படுத்தும் என வாடிகனின் அதிகாரப்பூர்வ இதழான 'அஸர்வேட்டோர் ரொமானோ' வெளியிட்ட கட்டுரை ஒன்றில் குறிப் பிட்டுள்ளது.


மேற்குலக வங்கிகள் 'சுகூக்' என்றழைக்கப் படும் இஸ்லாமிய பத்திரங் கள் போன்றவற்றை பரஸ்பர உறவைப் பேண உபயோகிக்க வேண்டும் எனவும் அக்கட்டுரை வாதிடுகிறது. வாகன உற்பத்தி மற்றும் லண்டனில் நடைபெற உள்ள அடுத்த ஒலிம்பிக் போட்டிகளின் போது சுகூக் அடிப்படையில் நிதி வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அக்கட்டுரை மேலும் தெரிவிக்கிறது.
சுகூக் மூலம் பெறப்படும் இலாப பங்கீட்டு முறை வட்டிக்கு மாற்றாக பங்குதாரர்களை வளப்படுத்தும். எனவே வாகன உற்பத்தி மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு இம்முதலீடு பயனுள்ளதாக அமையும்.


இஸ்லாமிய சுகூக் திட்டத்தின்படி முதலீட்டாளர்களின் பணம் உறுதியான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் பெறப்படும் இலாபம் வாடிக்கையாளர்களுக்கு பங்கீடு செய்யப்படும்.


அஸர்வேட்டோர் பத்திரிக்கையின் ஆசிரியர் 'கியாவானி மாரியா வியன்' பொருளாதாரத்தில் மனிதாபிமான மாண்புகளை சிறந்த மார்க்கம் கவனத்தில் கொண்டுள்ளது என கூறியதாக அப்பத்திரிக்கையின் நிருபர் கோரிரே டெல்லா சீரா தெரிவித்துள்ளார்.