செவ்வாய், 20 மே, 2014

இஸ்லாத்தை ஏற்ற இளம்பெண் 'அபரூபா' எம்.பி'யானார்!

மேற்கு வங்கத்தை சேர்ந்த 'அபரூபா பொட்டார்' என்ற 28 வயது இளம்பெண், சமீபத்தில் தனது பெயரை 'ஆப்ரீன் அலி' என மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தழுவிய நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

BSC LLB பட்டதாரிப் பெண்ணான ஆப்ரீன் அலி'யின், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் பழைய (APARUPA PODDAAR) பெயரே இருந்தபடியால், அதே பெயரில் தேர்தலை சந்தித்தார்.

திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹூக்ளி மாவட்டத்தில் அரம்பாக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆப்ரீன் அலி என்ற தனது இஸ்லாமிய பெயரை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டு தேர்தலை சந்தித்தார்.

ஆரம்பாக் தொகுதியில், 7,48,764 வாக்குகளைப் பெற்ற ஆப்ரீன் அலி, சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக வேட்பாளர்களை தோற்கடித்தார்.

திங்கள், 19 மே, 2014

ஒவைஸியை கொல்ல முயற்சி : ஆர்எஸ்எஸ் தீவிரவாதி சுட்டு கொலை....!!

ஒவைஸியை கொல்ல முயற்சி : ஆர்எஸ்எஸ் தீவிரவாதி சுட்டு கொலை....!!

கர்நாடகா மாநிலம் இந்துப்பூர் அருகே  MIM கட்சியின் தலைவர்களில் ஒருவரான அக்பருதீன் ஒவைஸி அவர்களை கொலை செய்ய காவி தீவிரவாதிகள் முயற்சி செய்துள்ளனர்.

இந்துத்துவ ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகளுக்கும் காவல்துறைக்கும் நடந்த மோதலில் ஆர்எஸ்எஸ் தீவிரவாதி கோவிந்த் என்பவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.

மேலும் இரண்டு ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓவைஸியை கொலை செய்ய வந்த இந்த சம்பவத்தால் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் பரபரப்பு காணப்படுகிறது.

தற்போது இறை அருளால் ஒவைஸி நலமுடன் உள்ளார்.

பா

தென்காசி செங்கோட்டை அருகில் உள்ள வள்ளம் என்கிற ஊரில் மதரஸத்நூர் பள்ளியில் பாசிசவெறியாட்டம்


நெல்லை மாவட்டம் தென்காசி செங்கோட்டை அருகில் உள்ள வள்ளம் என்கிற ஊரில் மதரஸத்நூர் பள்ளி வாசலில் இன்று 18-05-2014 மக்ரிஃப் தொழுகையின் போது பாங்கு சொல்லி தொழுதுக்கொண்டு இருக்கும் போது சுமார் 6 பேர் கொண்ட பாசிச கும்பல் பள்ளி வாசளுக்கு அருகில் நின்றுக்கொண்டு 2 பேர் மட்டும் பள்ளிவாசல் உள்ளே வந்து மைக் உட்பட அங்கு இருந்த பள்ளிவாசல் சாதனங்களை அடித்து நொறுக்கி முஸ்லீம்களை அசிங்கமாக தகாத வார்த்தைகளில் பேசிகொண்டு இருக்கும் போதே தொழுகை முடிந்தவுடன் தொழுகையாளிகள் என்னடா என கேட்ட போது வெளியில் காத்து இருந்த 4 பேரும் வந்து இந்த இரண்டு பேரை அழைத்துக்கொண்டு ஓடி விட்டனர் .

இந்த தகவல் கிடைத்து ஊரில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் ஒன்று இணைந்து வள்ளம் காவல்துறையிடம் முறையிட்டனர் உடனே குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என சொன்னவுடன் காவல்துறை இதுவரை முதல்தகவல் அறிக்கை கூட கொடுக்கவில்லை எனவும்

சுமார் 500 பேருக்கு மேல் காவல்நிலையத்தில் இருக்கின்றனர் ஆனால் ஊடகம் (செய்தியாளர்கள்) இதுவரை அங்கு வரவில்லை என்றும் . ஊடகத்தை அழைத்தால் A.S.P.அரவிந்தன் அவர்கள் ஊடகத்திற்க்கு உத்திரவு போட்டுள்ளாராம் இந்த செய்தி சேகரிக்க
யாரும் வரகூடாது என்று .

இந்த செய்தி அறிந்து சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அதிகாரிகளிடம் கேட்ட போது உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர்

எப்படியோ மோடி ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் முதல் பாசிசவெறியாட்டம் நடத்த முன்னோட்டம் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது …

சமுதாயமே விழிப்போடு இருந்தால் இன்ஷாஅல்லாஹ் விஷமிகளின் சதியை முரியடிக்கலாம் .
ஒன்று படுவோம் ! வென்று காட்டுவோம் !!

குறிப்பு :- 2 இரண்டு பேரை கைது செய்துள்ளதாக கடைசியாக வந்த தகவல்..

ஞாயிறு, 18 மே, 2014

மங்களூர்: வெற்றி ஊர்வலத்தில் மஸ்ஜிதை தாக்கிய பாஜகவினர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நேற்றைய தினம் (மே 16, வெள்ளிக் கிழமை ) மத்தியில் பாஜகவின் வெற்றியையும் தக்ஷன கன்னட நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது தடவையாக மீண்டும் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டத்தில் பாஜகவினரால் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வெற்றி ஊர்வலங்களில் இரண்டு மஸ்ஜித்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பந்த்வல் தாலுக்காவில் இருக்கும் கம்பலப்பட்டு என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு மஸ்ஜிதுக்கு அருகில் பாஜக வினர் "ஹரஹர மோடி" என்ற வெறிக் கூச்சல்களுடன்,கற்களை மஸ்ஜிதுக்குள் வீசியும்,வெடிகளை வெடித்தும் அராஜகம் செய்திருக்கின்றனர்.
மேலும் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப் பட்டிருக்கிறது.அந்த பள்ளி வளாகத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்காக கட்டப்பட்டு வரும் மேடையும் தாக்கி சேதப்படுத்தப் பட்டிருக்கிறது.
பகல் 12:55 மணியளவில் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஒரு குழுவாக புறப்பட்டு வந்த பாஜகவினர் பள்ளிவால் வளாகத்துக்குள் தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு கற்களை வீசத் தொடங்கியதாக நேரில் கண்டவர்கள் கூறுகிறார்கள்.
இந்த கிராமத்தில் இரண்டு மஸ்ஜித்கள் இருக்கின்றன. முஹியத்தீன் ஜும்மா மஸ்ஜித் எனும் பெயர் கொண்ட இந்த பள்ளியை தான் காவிகள் தாக்கி இருக்கிறார்கள்.
இந்த வாரம் ஜும்மா தொழுகையை இங்கே இருக்கும் இப்ராஹீம் கலீல் மஸ்ஜிதில் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற அந்த கிராமத்து முஸ்லிம்கள் தீர்மானித்து அணைவரும் அந்த பள்ளியில் குழுமத் தொடங்கி இருந்த வேளையில் இந்த முஹியதீன் பள்ளி தாக்கப் பட்டிருக்கிறது.
இந்த பள்ளியின் கதீபாக இருக்கும் ஆலிம் ஜும்மா தொழுகையை நிறைவேற்ற இப்ராஹீம் கலீல் பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அவரை தாக்க பாஜகவினர் முற்பட்டிருக்கிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக அவர்களது தாக்குதலில் இருந்து அவர் தப்பித்திருக்கிறார்.
சம்பவம் நடைபெற்ற இடங்களை போலிஸ் துணை சூப்பிரண்டு நேரில் வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்.இந்த தாக்குதல் தொடர்பாக 9 பேர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.
மேலும் இதே மாவட்டத்தில் கிக்கம்பா அருகே இருக்கும்
சுரல்பாடி என்ற கிராமத்தில் இருக்கு ஒரு மஸ்ஜிதை பாஜகவினர் தாக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகிறது.
தகவல் : Zafar Rahmani


http://www.coastaldigest.com/index.php/ls-polls-2014/64664-bjp-activists-resort-to-vandalism-attack-masjids-amidst-celebrations?fb_action_ids=777811275576487&fb_action_types=og.likes
 

வியாழன், 17 ஏப்ரல், 2014

1952-லிருந்து ராஜஸ்தானில் ஒரே ஒரு முஸ்லிம் எம்.பி.

சுதந்திர இந்தியாவில் முதன்முறை யாக கடந்த 1952-ல் நடந்த மக்களவை பொதுத் தேர்தலிலிருந்தே ராஜஸ் தானில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக அல்லது இல்லவே இல்லாமல் இருந்து வந்திருக்கிறது.
கடந்த 15 மக்களவை பொதுத் தேர்தல்களில் 317 பேர் ராஜஸ்தானிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒரேயொரு முஸ்லிம் மட்டுமே 1984 மற்றும் 1991-ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் புகாரியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் சந்தித்து ஆதரவு கோரியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராஜஸ்தானில் முஸ்லிம் மக்கள் தொகை சுமார் 11.4%. ஆனால் நாடாளுமன்றத்தில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவமே கிடையாது. கேப்டன் அயூப் கான் என்பவர் ஜுன்ஜுனு தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் 1984, 1991-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஒரேயொரு முஸ்லிமை வேட்பாளராக நிறுத்தும். வேறு எந்தக் கட்சியும் முஸ்லிம்களை நிறுத்துவதில்லை. ராஜஸ்தானில் 18 மக்களவைத் தொகுதிகள் இருக் கின்றன.
1980-கள் வரை மேற்கு ராஜஸ் தானில் உள்ள மார்வார் பகுதியில் சூரு, ஜுன்ஜுனு, பரத்பூர், ஜலாவர், ஆஜ்மீர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு தந்தது. முஸ்லிம்கள் கணிசமாக வாழும் தொகுதிகளில்கூட அவர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் பிற கட்சி வேட்பாளர்களிடம் தோற்றனர்.
"காங்கிரஸ் கட்சி தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகளில்தான் அவர் களை நிறுத்தியது" என்று அஷ்ஃபக் காயாம்கானி என்ற அரசியல் ஆய்வாளர் குற்றம்சாட்டுகிறார்.
2014 மக்களவை பொதுத் தேர்தலில் டோங்-சவாய்மாதோபூர் தொகுதியில் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனைக் களம் இறக்கியிருக்கிறது காங்கிரஸ்.
ஹைதராபாதைச் சேர்ந்த அசாருதீன் கடந்த முறை உத்தரப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரை இப்போது டோங்-சவாய்மாதோபூர் தொகுதியில் நிறுத்துவதை ராஜஸ்தான் மாநில முஸ்லிம்களே கடுமையாக எதிர்த்தனர்.
வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைக் கொண்டுவந்து நிறுத்துவானேன், ராஜஸ்தானில் தகுதி வாய்ந்த முஸ் லிம்கள் இல்லையா என்று கேட்டனர். ஆனால் காங்கிரஸ் தலைமை அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இப்போது அசாருதீனின் வெற்றியும் கேள்விக்குறிதான் என்கின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.
ராஜஸ்தானில் 11 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக வாழ்கின்றனர். பார்மர் தொகுதியில் மட்டும் 17.2% முஸ்லிம் வாக்குகள் உள்ளன. ஆனால் எந்த அரசியல் கட்சியும் பார்மரில் முஸ்லிமை களம் இறக்குவதே இல்லை.
இந்த முறை ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜக வாய்ப்பு தராத தால் அவர் சுயேச்சையாகக் களமிறங்கி யிருக்கிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த கர்னல் சோனாராம் சௌத்ரி பாஜக வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கிறார்.
ராஜஸ்தானில் மொத்தமாக 8 முஸ்லிம்களை 12 முறை மக்களவைத் தேர்தலில் களம் இறக்கியிருக்கிறது காங்கிரஸ். பாஜக இதுவரை ஒரு முறைகூட முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியதில்லை. முஸ்லிம் வேட் பாளர்கள் தோல்வியடைவதே முக்கிய காரணம். முஸ்லிம்களிடையே நல்ல தலைமை உருவாகாததும் இதற்கு முக்கிய காரணம்.

thanks to :http://tamil.thehindu.com/india/1952%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article5921347.ece?homepage=true

எங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் -தமிமுன் அன்சாரி ம.ம.க பொதுச் செயலாளர்

இன்றைய நக்கீரனில் நமது பொதுச்செயலாளர்

நாட்டை வழி நடத்தவும், மக்களுக்கு சேவை யாற்றவும், அரசியல் களம் இன்றியமையாததாக இருக்கிறது. இன்றைய அரசியல் என்பது வணிகம், சுயநலம், சாதியம், மதவாதம் போன்ற அழுக்குகளால் சூழப்பட்டுள்ள நிலையில்; சேவை சார்ந்த அரசியலை முன்னெடுத்து, தத்துவங்களை மையப்படுத்தி 2009 பிப்ரவரி 7 அன்று மனித நேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.

சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்ற கொள்கைகளை முன்னிறுத்தி, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்களின் ஜனநாயக உரிமைகளை முழங்கியும், அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை வழிநடத்தியும் எமது மனிதநேய அரசியலை செயல்படுத்தி வருகிறோம்.

கொள்கை சார்ந்த நெறிமுறைகளின் வழியாக எமது தொண்டர்களை மிகச்சிறந்த ஜனநாயகவாதிகளாக வார்த் தெடுக்கிறோம். "மக்களைத் திரட்டு -அரசியலை மாற்று'’’என முழங்குகிறோம்.

அரசியல் வழிகாட்டி முகாம்கள், பண்பு பயிற்சி முகாம்கள், பேச்சாளர் பயிற்சி முகாம்கள் நடத்தி ஒவ்வொரு தொண்டரையும் ஒரு தலைவரைப் போலவும்; ஒவ்வொரு தலைவரையும் ஒரு தொண்டரைப் போலவும் பக்குவப்படுத்தி அவர்களை களமாட அனுப்புகிறோம்.

நாங்கள் தலைவர்களை முன்னிலைப்படுத்துவதில்லை. மாறாக, தத்துவங்களை முன்னிலைப் படுத்துகின்றோம். தனிநபர் துதி பாடலைத் தவிர்த்து, கூட்டுத் தலைமையை முன்மொழிகிறோம். எமது மனிதநேய அரசியல் என்பது குரலற்ற மக்களின் குரலாகவும்; தலைமைத்துவம் இல்லாத சமூகங்களின் தலைமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதன் விளைவாகவே, வஞ்சிக்கப்படும் முஸ்லிம் சமூகத்தின் இதயத் துடிப்பாகவும், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைக் குரலாகவும், நசுக்கப்படும் தொழிலாளர்களின் போர்க் குரலாகவும், ஒடுக்கப்படும் மக்களின் இடிமுழக்கமாகவும் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கைகள் இருக்கின்றன.

முல்லைப்பெரியாறு அணை உரிமைப் போராட்டம், காவிரி பாசன விவசாயிகளின் வாழ்வுரிமைக் களம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் எழுச்சி, டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்புக்கு எதிரான கலகங்கள், கல்பாக்கம் அணு மின்நிலைய எதிர்ப்பு யுத்தம், நாகை மாவட்டத்தில் அனல் மின் நிலையங்களுக்கு எதிரான கிளர்ச்சி, ஆற்று மணல் கொள்ளைகளுக்கு எதிரான அறப்போர் -என தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களில் தீவிரமாய் களமாடிவரும் வரலாறு எமக்கு இருக்கிறது. அதுமட்டு மல்லாமல், ஈழத்தமிழர் விவகாரத்தில் கட்சி தொடங்கிய நாள் முதல் ஒரேநிலைப்பாட்டில் சமரசமின்றி அம்மக்களுக்காக மனிதநேய மக்கள் கட்சி போராடி வருவதில் எங்களுக்கு மன திருப்தி உண்டு.

2009 நாடாளுமன்றத் தேர் தலின்போது, ‘இலங்கையில் ஈழத் தமிழர்களை கொத்துக் கொத்தாய் கொன்றொழித்த சர்வாதிகாரி ராஜபக்சேவை, சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும்’என முதல் குரலை மனிதநேய மக்கள் கட்சிதான் எதிரொலித்தது. ஆம்! மற்றவர்கள் தாமதமாய் சிந்திக்கும் யாவற்றையும், முன்கூட்டியே பிரகடனம் செய்வதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் தனித்துவ அரசியலாகும்.

புலிப்படை தலைவர் பிரபா கரன் அவர்களின் மகன் பாலச் சந்திரன், சிங்கள பேரினவாத ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட துக்க செய்தி உறுதியானபோது; உலகத் தமிழர்கள் விம்மி அழுதபோது; உலக அளவில் முதலில் களமிறங்கி, சென்னையில் இருக்கும் இலங்கை துணைத் தூத ரகத்தை முற்றுகையிட்டு; எதிர்ப்பை பற்றவைத்த துணிச்சல் பலரும் வியந்த ஒன்றாகும்.

ஃபாஸிஸம், சாதியவெறி, மதவெறி, வன்முறை, தீவிரவாதம் உள்ளிட்ட மக்கள் விரோத செயல் பாடுகளுக்கு எதிராக மக்களை தட்டியெழுப்பும் விழிப்புணர்வு அரசியலை பொறி பறக்க பரப்புரை செய்வதில் நாங்கள் எப்போதும் முன்னிலை வகிக்கிறோம். தோழமை யை உயிராக மதிப்பதும்; பகைமை யைக் கூட பக்குவமாக எதிர் கொள்வதும் நாங்கள் பின்பற்றும் பொதுவாழ்வின் இலக்கணமாகும்.

இந்தியாவின் ராஜபக்சே வாகத் திகழும் நரேந்திர மோடியை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி; இலங்கையின் நரேந்திரமோடியாகத் திகழும் ராஜபக்சேவை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி; நீதியின் நெறிபிறழாமல் எதிர்ப்பதே எம் கொள்கையாகும்.

உலகமெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் எமது சொந்தங்களாகும். அந்த வழியிலேயே இந்தியாவில் வாழும் சிறுபான்மை யினரில் பெரும்பான்மையினராக வாழும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைக் களங்களில் முதல் நிலை வீரர்களாய் அணிவகுக்கின்றோம். அதேபோல் கிறித்தவர்கள் உள்ளிட்ட இதர சிறுபான்மையினரின் நலன்களுக்காகவும் போராடுகிறோம்.

இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான கட்சி அல்ல. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட, பெரும் பான்மை சமூகங்களையும் அங்கத்தினர்களாகக் கொண்ட ஒரு ஜனநாயகப் பேரியக்கமாகும்.

மதச் சார்பின்மைக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விளக்கங்கள் உண்டு. மதம் சார்ந்த நிலைகளிலிருந்து முற்றிலு மாக விலகியிருக்கும் கொள்கைதான் மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் மதச் சார்பின்மையாகும். ஆனால் நாம் முன்வைக்கும் மதச்சார்பின்மை என்பதற்கான அர்த்தம், அனைத்து மதத்தினருக்கும் மத்தியில் பொது ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதும், அதன்வழியே சிறுபான்மையினரின் வாழ்வுரிமைகளைக் காப்பது என்பதுமாகும். அதன் ஊடாகவே எமது அரசியல் பயணம் தொடர்கிறது.

மாற்று அரசியலுக்காகக் குரல் கொடுக்கும் நாங்கள், களங்களில் சமூக நீதிக்காகவும்; சமூக நல்லிணக்கத்திற்காகவும்; சில சமயங்களில், சில சமரசங்களை செய்து கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. இந்திய ஜனநாயக சூழலில் அரசியலையும், கொள்கைகளையும் கவனமாக ஒன்றுக்கொன்று உரசிக் கொள்ளாதவாறு கையாள வேண்டியிருக்கிறது.

நாங்கள் பாதைகளை மாற்றுவதில்லை; ஆனால் குதிரைகளை மாற்றுவதுண்டு. எமது அரசியல் பயணத்தில் நாங்கள் விமர்சனங்களுடன் கூடிய, தோழமைகளைப் பேணுகிறோம். அது ஆரோக்கியமான அரசியலுக்கும், தூய்மையான நட்புக்கும் வழிகாட்டுகிறது.

திராவிட இயக்க சிந்தனைகள், தமிழ் தேசிய சிந்தனைகள், இடதுசாரி - முற் போக்கு சிந்தனைகள் ஆகியவற்றோடு எப்போதுமே நட்பு பாராட்டும் அரசியலை முன்னெடுக்கிறோம். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பன்னாட்டு பெருநிறு வனங்களின் சுரண்டல், கட்டுப்பாடற்ற கலாச்சார சீரழிவுகள், இயற்கை -சுற்றுச் சூழலுக்கு எதிரான பன்னாட்டு சூழ்ச்சிகள் என உலக அரசியலையும் பேசுகிறோம். வணிக அரசியல், தேர்தல் சீர்திருத்தம், சிறுபான்மையினருக்கு எதிரான சதிகள், தலித்துகள் -பழங்குடிகளுக்கு எதிரான அடக்குமுறைகள், அரச வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் என உள்நாட்டு அரசியலையும் பேசுகிறோம்.

ஊழலின் நிழலைக்கூட நெருங்கக்கூடாது என்கிற உன்னத லட்சியத்தோடு, அரசியலை மாபெரும் சேவைக்கான களமாக கருதும் எண்ணங்களோடு எமது களப்பணிகள் 5 ஆண்டுகள் நிறைவு பெற்று ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆலை முதலாளிகளும் பண்ணை ஜமீன்களும் பன்னாட்டு பண முதலைகளும் இந்திய அரசியலை ஆக்கிரமித்து வரும் சூழலில் மனசாட்சியுள்ள குடிமக்களை நம்பியே எங்களின் அரசியல் இருக்கிறது.

தூய்மையான எண்ணங்களோடும் நேர்மையான அணுகுமுறைகளோடும் உயர்வான கொள்கைகளுடனும் கண்ணியமாக அரசியல் பணியாற்ற துடிக்கும் மனிதநேய மக்கள் கட்சியை வலிமையாக்க எங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகிறோம்.

ஆற்றலும் அறிவும் நேர்மையும் கொண்ட அடித்தட்டு மக்கள் யாவரும் கட்சியின் உயர் பொறுப்புக்கு வரலாம் என்கிற சுதந்திர விதிகளைக் கொண்ட மனிதநேய மக்கள் கட்சி அரசியல் அதிகாரத்தில் வலிமை பெற வர விரும்புகிறது. ஜனநாயகத்தை அனைவருக்கும் பொதுமைப்படுத்தவும் அரசியல் அதிகாரத்தை எளியவர்களுக்கும் விரிவுபடுத்தவும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தோள்கொடுங்கள் என உரிமையோடும் உணர்வோடும் கேட்கிறோம்.

தற்போது இரண்டு சட்டமன்ற உறுப்பினர் களுடனும், நூற்றுக்கணக்கான உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடனும் ஊழலற்ற; நேர்மையான மக்கள் பணியை செய்துவரும் நாங்கள், இப்போது நாடாளுமன்றத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் முதுபெரும் தலைவர் டாக்டர் கலைஞர் தலைமையிலான தி.மு.க., முஸ்லிம்லீக், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் அங்கம் வகிக்கும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியினர், போர்வீரர்களாக களத்தில் நிற்கின்றனர்.

எமக்கு மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு இறைவன் அருளால் நாங்கள் பெறக்கூடிய வெற்றி எமது அரசியலில் திருப்புமுனைகளையும், புதிய நம்பிக்கையையும் தரும் என எதிர்பார்க்கிறோம்.

ஐயா பெரியார், பேரறிஞர் அண்ணா, கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத், பெருந்தலைவர் காமராஜ், ஐயா முத்துராமலிங்கத்தேவர், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார், தோழர் ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் பக்குவப்படுத்திய தமிழ்மண்ணில் ‘வட இந்திய அரசியல் கலாச்சாரம்’ ஃபாசிச வடிவில் வேர்விடத் துடிப்பதை எதிர்க்கிறோம்.

இன்று தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம்லீக், புதிய தமிழகம் உள்ளிட்ட சமூக நீதிக் கட்சிகளின் அணியில் மனிதநேய மக்கள் கட்சி முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது கூட்டணியை புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்யும் உத்திகளோடு புறப்பட்டிருக்கிறோம். எமது கொள்கை அரசியலை ஏற்று நாடே எங்கள் பின்னால் அணிவகுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், இன்று விதைகளைத் தூவுகிறோம்; நாளை வரும் தலைமுறைகள் அதை அறுவடை செய்யும் என நம்புகிறோம்.

நாங்கள்தான் அடுத்த ஆட்சியைக் கைப்பற்று வோம் என்று கூறவில்லை. ஆனால், நாங்கள் இல்லாமல் எந்த ஆட்சியும் இல்லை என்பதை அழுத்திச் சொல்கிறோம்.

எளிய மக்கள் அரசியல் அதிகாரத்தில் வலிமை பெறவேண்டிய கொள்கைப் பிடிப்புடனும், லட்சிய வேட்கையுடனும் தேர்தல் களத்தில் நிற்கும் மனிதநேய மக்கள் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை

சனி, 5 ஏப்ரல், 2014

பாபர் மசூதி இடிப்பு இந்துத்துவாவின் திட்டமிட்ட சதி: வீடியோ வெளியிட்டது 'கோப்ரா போஸ்ட்'



அயோத்தி பாபர் மசூதி இடிப்பு திட்டமிடப்பட்ட சதிச்செயல் என்று 'கோப்ரா போஸ்ட்' புலனாய்வு இணையதளம் தெரிவித்துள்ளது. அதற்கு ஆதாரமாக இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட ரகசிய விசாரணைகளின் வீடியோ தொகுப்பு நேற்று வெளியிடப் பட்டது.

சுமார் மூன்றரை மணி நேரம் ஓடும் ரகசிய வீடியோ பதிவை டெல்லி பத்திரிகையாளர் மன்றத் தில் கோப்ராபோஸ்டின் ஆசிரியர் அனிரோத் பெஹல் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: 

ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ம் தேதி இடிக்கப்பட்டது. இதில் பெரும் சதி உள்ளது. 

இந்த வழக்கை பல ஆண்டுக ளாக விசாரித்தும் சிபிஐயால் உண்மையை நிரூபிக்க முடிய வில்லை. ‘ஆப்ரேஷன் ஜென்மபூமி’ என்ற பெயரில் நடத்தப் பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை இப்போது நாங்கள் வெளியிட்டுள்ளோம். 

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாகக் கூறி கோப்ராபோஸ்டின் இணை ஆசிரியரான கே.ஆஷிஷ் , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்தார். அவர்கள் சதியை உருவாக்கியவர்கள் அல்லது சதியாளர்களாக செயல்பட்டிருப் பதை வீடியோ பதிவுகள் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. 

இந்த ரகசிய வீடியோ பதிவில் வினய் கட்டியார், உமா பாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சி தானந்த் சாக்‌ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி. சாத்வி ரித்தம்பரா, மஹந்த் அவைத்யநாத் மற்றும் சுவாமி நிருத்ய கோபால்தாஸ் உட்பட பா.ஜ.க., சிவசேனை, வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தளம் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித் துள்ளது. இதில் விடுபட்டிருந்த வர்களான பி.எல்.சர்மா, மஹந்த் அவைத்யநாத், நிருத்ய கோபால்தாஸ் மற்றும் ராம்விலாஸ் வேதாந்தி ஆகியோரிடம் கோப்ரா போஸ்ட் நடத்திய ரகசிய விசாரணை இப்போது வீடியா பதிவுகளாக வெளியிடப்பட்டுள்ளது என்று அனிரோத் பெஹல் தெரிவித்தார். 

முக்கிய சாராம்சங்கள்
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 40 பேரில் 32 பேர் மீது சதியை செயல்படுத்தியதாக 92/197 பிரிவிலும், எட்டு பேர் மீது சதியை திட்டமிட்டதாக 92/198 பிரிவிலும் வழக்குகள் நடந்து வருகின்றன.
கோப்ராபோஸ்ட் சார்பில் 23 பேரிடம் எடுக்கப்பட்ட பேட்டியின் முக்கிய சாரம்சங்கள் வருமாறு: 

பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனையால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல். இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங் களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்தனர். ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் சார்பில் ‘பலிதானி ஜாதா’ எனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்பட்டன. 

வி,ஹெச்.பி.யின் இளைஞர் அமைப்பான பஜ்ரங் தளத்துக்கு குஜராத்தின் சுர்கேஜிலும் சிவசேனைத் தொண்டர்களுக்கு மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மற்றும் மொரேனாவிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. 

நிலத்தை விரைந்து தோண்டுவது, சுவர் உட்பட உயரமான கோபுரங்களில் எளிதாக ஏறுவது, கோடாரி, கடப்பாரை, மண்வெட்டியை பயன்படுத்தும் விதம் ஆகியவை குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

பாபர் மசூதியை இடிக்கத் தொடங்கியவுடன், ராம்விலாஸ் வேதாந்தி தலைமையில் கரசேவகர்கள் எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், முரளிமனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், ஆச்சார் யார் தர்மேந்தர் உட்பட பலரது முன் னிலையில் உறுதிமொழி ஏற்றனர். 

மசூதியை இடிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அயோத்தியின் இதுதாமில் வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ரகசியக் கூட்டத்தில், அசோக் சிங்கால், வினய் கட்டியார், வி.ஹெச்.டால்மியா, மற்றும் மஹந்த் அவைத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமன் பாக்கில் நடந்த ரகசிய கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஹெச்.வி.சேஷாத்ரி மற்றும் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
டைனமைட் குண்டுகளை வைத்து மசூதியை இடிக்க திட்ட மிட்ட சிவசேனையின் முயற்சி தோல்வி யுற்றது. இதற்காக பயன்படுத்தப் பட்ட பாரம்பரிய கருவிகளுடன் பெட்ரோல் குண்டுகளை பிஹார் பிரிவினர் பயன் படுத்தினர். இதற்கு அயோத்தியின் நிர்வாகம் உதவி செய்தது.
இடிக்கப்பட்ட மசூதியில் பல புராதன பொருட்கள் கிடைத்ததா கவும் அதில் 1528-ல் மீர்பாகி அமைத்த இரு கல்வெட்டுக்கள் பவண் பாண்டேவிடம் இருந்தன என்பன உள்ளிட்ட தகவல்கள் கோப்ராபோஸ்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
 
புதியவை அல்ல: அயோத்தி முஸ்லிம்கள் கருத்து
கோப்ரா போஸ்ட் இணையதளம் வெளியிட்ட ரகசிய பதிவில் வெளியான விஷயங்கள் புதியவை அல்ல என்று அயோத்தி முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் உறுப்பினர் காலீக் அகமது கான்: ‘கோப்ரா போஸ்டில் வெளியான விஷயங்கள் அனைத்தும் ஏற்கனவே லிபரான் கமிஷ னால் தெரிவிக்கப்பட்டவையே தவிர புதிய விஷயங்கள் அல்ல. இதற்காக சதி செய் ததாக பதிவான வழக்கில் இருந்து சிபிஐ, எல்.கே.அத்வானியை விடுவித்தபோதே எங்களுக்கு புரிந்த விஷயத்தை கோப்ரா போஸ்ட் இப்போது உறுதி செய்துள்ளது.
ராமர் கோயில்- பாபர் மசூதி வழக் கின் முக்கிய மனுதாரர் ஹாசீம் அன்சாரி (85) ‘மசூதி இடிக்கப்பட்டு இருபது வருடங்களுக்கு பின் முதல்கட்ட தேர்தல் தொடங்க இரண்டு நாள்கள் இருக்கும்போது இந்த ரகசிய பதிவுகள் வெளியிட அரசியல் காரணங்கள் உள்ளன. இதே அரசியல் காரணத்துக்காக காங்கிரஸுடன் இணைந்துதான் பாஜக பாபர் மசூதியை இடித்தது. இந்த விஷயத்தை கையில் எடுத்து அரசியல் லாபம் பார்ப்பதில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுக்குமே சமபங்கு உள்ளது. இதனால்தான் ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயங்களில் பாபர் மசூதி- ராமர் கோயில் விவகாரம் வெளியாகி விடுகிறது’ எனக் கூறுகிறார்.
கோப்ரா போஸ்டின் ரகசிய பதிவை
ஆதாரமாக வைத்து ரே பரேலி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சார்பில் புதிதாக மனு தாக்கல் செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

tamil.thehindu.com