
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
செவ்வாய், 22 நவம்பர், 2011
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
மதுரையில் சாகடித்த ஆடு மாடுகளை அறுக்கும் முயற்சி முறியடிப்பு- தமுமுக போராட்ட அறிவிப்பு வெற்றி
மதுரையில் புதிதாக மின்சார முறையில் ஆடு மாடுகளை அறுக்கும் நவீன ஆடு அறுக்கும் தொட்டி சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த நவீன ஆடு தொட்டியில் ஆடுகளுக்கு மின் அதிர்ச்சி அளித்து அவை பாதி உயிரை இழந்த நிலையில் அறுக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. இது மதுரை வாழ் முஸ்லிம்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நவீன ஆடு அறுக்கும் தொட்டி மதுரை அனுப்பானடியில் திறக்கப்பட்டது. இந்த ஆடு தொட்டியில் எவ்வாறு பிராணிகள் அறுக்கப்படுகின்றன என்பதை காண்பதற்காக மதுரை ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், 50 உலமாக்கள் நேரடியாக சென்று மாநகராட்சியின் அனுமதி பெற்று நேரில் பார்வையிட்டனர். அப்போது மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்ட ஆடு வாயில் நுரை தள்ளி மயங்கியது. அதை அறுத்தபோது அதிலிருந்த இரத்தம் வெளிவரவில்லை. இச்செய்தி மதுரையில் முஸ்லிம்களிடையே பரவி பெரும் கொந்தளிப்பபை ஏற்படுத்தியது.
மதுரை நவீன ஆடு தொட்டியில் பிராணிகளை அறுக்கும் முறை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணானது என்பது வெளிப்படையாக தெரிய வந்தது. பிராணியை அறுக்கும் போது அதன் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற வேண்டும். ஆனால் மின் அதிர்ச்சி கொடுத்து பிராணி மயங்கிய நிலையில் அறுக்கும் போது ரத்தம் வெளியேறத நிலையில் அதனை ஹலால் முறை அறுப்பு என்று சொல்ல இயலாது. இச்சூழலில் மதுரை நவீன ஆடு தொட்டியில் ஹலால் முறையில் தான் ஆடு அறுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆகஸ்ட் 27 ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மதுரை மாநகராட்சி மேயர் வீட்டை முற்றுகையிடுவது என்று அறிவிக்கப்பட்டது.
முற்றுகைப் போராட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்த வேளையில் மதுரை மாநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை காலை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். தமுமுக மதுரை மாவட்ட தலைவர் கே. முஹம்மது கவுஸ் தலைமையில் தமுமுகவினர் பேச்சு வார்த்தையில் பங்குக் கொண்டனர்.இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் மதுரை மைதீன், பொருளாளர் எம்.ஹெச். சிக்கந்தர், தமுமுக மாவட்ட குழு உறுப்பினர்கள் அஜ்மீர், அப்பாஸ் உள்ளிட்டோரும் பங்குக் கொண்டனர். தமுமுகவின் கோரிக்கையை ஏற்பதாகவும் போராட்டத்தை கைவிடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் இது குறித்த அரசு உத்தரவை எழுத்துப்பூர்வமாக தராத வரையில் போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்று தமுமுக நிர்வாகிகள் உறுதியாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மதுரை அனுப்பனடி நவீன ஆடு தொட்டியில் ஹலால் முறையில் ஆடுகள் அறுக்கப்படும் என்ற உத்தரவை சுற்றறிக்கையாக வெளியிட்டு அதன் பிரதியை தமுமுக நிர்வாகிகளிடம் அளித்தனர்;.
மதுரை மாநகராட்சி மேயர் வீட்டை முற்றுகையிட மதுரை காஜிமார் தெரு பள்ளிவாசலில் இருந்து ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஊர்வலமாக புறப்பட பெரும் மக்கள் திரள் கூடிவிட்டது. போராட்டம் தொடங்குவதற்கு முன்பு மாநகராட்சி ஹலால் முறையிpல் இனி ஆடுகளை ஆறுப்போம் என்று உத்தரவு பிறப்பித்த சுற்றறிக்கை அளிக்கப்பட்டதால் திரண்டிருந்த மக்களிடையே மதுரை மாநகர அரசு காஜியார் காஜா முயினுத்தீன் மற்றும் மதுரை மாவட்ட தமுமுக தலைவர் கே. முஹம்மது கவுஸ் ஆகியோர் விபரங்களை எடுத்துக் கூறினர். கோரிக்கை வெற்றிப் பெற்றதால் போராட்டம் கைவிடப்பட்டது.
ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
தாம்பரம்: மதவெறியைத் தூண்டும் திமுக எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ.வின் அராஜகத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டி...
ஜாதி மதங்கள் கடந்து சமத்துவத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரத்தில் ஆளும் திமுகவின் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவின் முஸ்லிம் விரோதப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.
கடந்த 09.08.2010 அன்று இரவு 7.30 மணிக்கு மக்கள் கூட்டம் நிறைந்த சண்முகம் சாலை அதனருகில் உள்ள அப்துல் ரசாக் சாலையில் தாம்பரம் ரெங்கனாதபுரத்தை சார்ந்த அசனார் (வயது 25) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வருகிறார். எதிர்புறம் பத்மநாபன் என்பவர் ஆட்டோவில் வருகிறார். தாம்பரம் பெரிய மசூதிக்கு சொந்தமான வணிக வளாகம் முன்னால் இரு வாகனமும் மோதி கொள்கின்றனர். இரு வாகன ஓட்டிகளும் வாய்த் தகராறில் துவங்கி கை கலப்பு வரை செல்கிறது. இதனிடையே பீட்டர் இங்லேண்ட் துணிக்கடை ஊழியர் வினோத் என்பவரும் உரிமையாளர் கே.பி. ஜெகதீசன் என்பவரும் பத்மநாபனுக்கு ஆதர வாக அசனாரை சரமாரியாகத் தாக்குகின்றனர். இதனைக் கண்ட சண்முகம் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களும் சில முஸ்லிம்களும் தாக்குதல் நடத்திய கும்பலிடம் இருந்து அசனாரை மீட்க வருகிறார்கள். உடனே கடை உரிமையாளர் ஜெகதீசன் என்பவர் வாகனத்தில் வந்தவர் அசனார் முஸ்லிம் என்பதற்காகவும் அவரை மீட்க வந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காகவும் தன்னையும் தன் கடையின் கண்ணாடியையும் தமுமுகவினர் தாக்கி விட்டனர் என்று தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ.வுக்கும் தாம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் டி.காமராஜ் (எம்.எல்.ஏ.வின் மைத்துனர்) என்பவருக்கும் தகவல்தர, ஏற்கனவே தமுமுக மீதும் இஸ்லாமிய சமூகத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. நகரமன்ற துணைத்தலைவர் காமராஜர் மூலம் தனது குண்டர் படையை ஏவி 9.8.2010 அன்று இரவு பொதுமக்கள் அஞ்சி நடுங்கும் வகையில் 150&க்கும் மேற்பட்ட குண்டர்களை வைத்துக் கொண்டு அராஜகம் செய்தார். மேலும் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. தனது அதிகார பலத்தை பயன்ப டுத்தி, தமுமுகவினர் மீது காவல் துறையை ஏவி விட்டார். இதிலும் மதவெறி அடங்காத எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. போலிசை தூண்டிவிட்டு தமுமுக சகோதரர்கள் எம்.பயாஸ், எம். அப்பாஸ், சதாம் உசேன், ஷாஜமான், முகமது அலி, ஹமிது, அசனார் உள்ளிட்டவர்களை கே.பி.ஜெகதீசன்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக குற்றப்பிரிவு எண் 307ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வைத்தார். கைதானோர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதிலும் திருப்தி கொள்ளாத எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. 10.08.2010 அன்று, தான் ஒரு திராவிட இயக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்து ஜாதி சங்க உறுப்பினராக மாறி, மதவெறி கும்பலோடு கைகோர்த்து தமுமுகவினரை கண்டிக்கிறோம் என்ற பெயரில் வியாபாரிகளை மிரட்டி கட்டாய கடை அடைப்பு நடத்தினார். இதனை கேள்விப்பட்ட தமுமுகவினர் தாம்பரத்தில் ஒன்றுகூடினர். எந்த அசம்பாவிதமும் நடைபெற்றுவி டக்கூடாது என்பதற்காக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் யாக்கூப் தலைமையில் மிகவும் கட்டுப்பாடுடன் பொறுமை காத்தனர்.
காவல் துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டனர். 10.08.2010 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது அவர்கள் நேரடியாக களத்திற்கு வந்தார். முன்னதாக தமுமுக மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜுனைது, மாவட்ட மமக செயலாளர் எம். யாக்கூப், துணைச் செயலாளர் ம.ஹைதர் அலி, தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே.ஜாஹிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒன்று திரண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. 2006&ல் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் எஸ்.ஆர். ராஜாவை அறிமுகப்படுத்தி வெற்றிபெறச் செய்த தமுமுகவினரை துச் சமாக மதித்து தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை காட்டிக்கொண்டே இருந்தார். வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் தரப்புக்கும் எம்.எல்.ஏ. தரப்புக்கும் அடிதடி தகராறு நடந்தபோது த.வெள்ளை யனைக் காப்பாற்றியது தமுமுக வினர்தான். சென்னையின் பெருநக ரமான தாம்பரத்தில் சிறுகடை வியாபாரிகளின் நலன் காக்க நாள்தோறும் போராடிக் கொண்டி ருக்கும் தமுமுகவை அழித்துவிட வேண்டும் என எம்.எல்.ஏ. கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்.
மக்களின் பிரச்சனையை உடனுக் குடன் முடித்துக் கொடுத்து மக்களின் நன் மதிப்பை பெற்று தமுமுகவினர் வளர்ந்து வரும் இச்சூழலில் இந்து முன்னணியுடன் கைகோர்த்துக் கொண்டு மதவெறியைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடைய முயல்கிறார். இதனிடையே விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, காங்கிரஸ் கட்சியின் மு.அக்பர், கம்யூனிஸ்ட் லோகநாதன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் முகம்மது சித்திக், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட நிர்வாகிகள், வணிகர் சங்கம் ஹாஜி சலீம், சேவியர் அருள்தாஸ் ஆகியோர் தமுமுக மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர்.

எம்.எல்.ஏ தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்ட தமுமுகவினர்...
வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கம் கடையை திறக்கச் சொல்ல, எம்.எல்.ஏ. ராஜாவின் தூண்டுதலின் பேரில் குண்டர் படை வியாபாரிகளை மிரட்டி கடை களை அடைத்தனர். தமுமுக வினரை மதவெறியை தூண்டுபவர் என்று சுவரொட்டி ஒட்டப்பட்டு தாம்பரத்தில் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
திமுகவைச் சேர்ந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., வெற்றிகொண்டான் போன்ற திமுக முக்கியப் பிரமுகர்கள் முஸ்லிம்களிடத்தில் நல்லுறவை ஏற்படுத்துவது போன்று தாம்பரம் பொதுக்கூட்டத்தில் பேசி சென்றாலும் எஸ்.ஆர்.ராஜாவின் முஸ்லிம் விரோதப் போக்கு நீடித்துக்கொண்டே இருக்கிறது. மதமோதலைத் தூண்டி விடும் எஸ்.ஆர்.ராஜாவைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும், வணிகர் சங்கமும் சுவரொட்டிகளை ஒட்டின. ஆனால் எம்.எல்.ஏ.வின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் சுவரொ ட்டிகளை கிழித்து எறிந்தனர்.
திராவிட இயக்கத்தில் மத வெறியைத் தூண்டும் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா மீது திமுக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் தேர்தலில் மண்ணைக் கவ்வுவது நிச்சயம்.
தோழர் ஜீவா, என்.ஆர்.ராசமாணிக்கம், முனு ஆதி போன்ற சமூக சிந்தனைவாதிகள் வாழ்ந்த தாம்பரத்தில் மதவெறி சிந்தனையுடன் செயல்படும் ராஜாவால் திமுக அரசுக்கு தீராக் களங்கம் ஏற்பட்டுள்ளது.
வன்னிஅரசு - மாநில செய்தி தொடர்பாளர், விடுதலை சிறுத்தை கட்சி
தாம்பரத்தில் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வருகிறோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது.
மூ. அக்பர், காங்கிரஸ் கட்சி
எனது அரசியல் வாழ்வில் இது போன்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை. இரு வாகன மோதலை மத மோதலாக கையா ண்ட தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா கண்டனத்திற் குரியவர்.
வணிகர்சங்க பிரமுகர்-ஹாஜி சலிம்
தாம்பரத்தில் ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில் தான் கடை அடைப்பு நடைபெறுகிறது. எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.
-மாயவரம் அமீன்
சனி, 9 ஜனவரி, 2010
புதிய வரலாறு படைக்கும் அப்துற் ரஹிம் மருத்துவமனை
த மு மு க வின் மாநில செயலாளர் (காலம் சென்ற ) மவ்லவி.அப்துல் ரஹீம் பெயரில் கோவை மாவட்டம் குனியமுத்தூரில் மருத்துவ மனை துவக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த சூழல் இந்த மருத்துவமனையின் சேவை குனியமுத்தூர் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த மருத்துவமனையின் மருத்துவக்குழுவில் பி. வெங்கடாசலம் (அறுவை சிகிச்சை மற்றும் பொது மருத்துவம்) திருமதி.மாலா வெங்கடாசலம் (மகப்பேரு மற்றும் பொது மருத்துவம்) டாக்டர். மானேக் ஆகிய 3 மருத்துவர்கள் மற்றும் 2 செவிலியர்கள் உள்ளனர். மருத்துவமனையின் ஒரு பகுதியில் படுக்கை வசதியும், இன்னொரு பகுதியில் ஊசி மற்றும் மருந்துகள் வழங்கும் பிரிவும் இயங்கி வருகின்றது. ஒரு நாளைக்கு சராசரியாக 60 நோயாளிகள் வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.
முஸ்லிம்கள் மட்டுமின்றி பிற சமுதாயத்தினரும் இம்மருத்துவமனைக்கு வந்து குறைந்த செலவில் சிகிச்சை செய்து கொள்ள தடையில்லை என்பதால் பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சையினை மேற்கொள்கிறார்கள். எவ்விதமான பாகுபாடு இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனையானது கோவையில் சிறப்பு மிக்க இடத்தினைப் பிடிக்கும் என்றும் அங்குள்ள பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
.
மருத்துவமனை காலை 10 மணியிருந்து பகல் 2 மணியளவிலும் பின்னர் மாலை 5 மணியிருந்து இரவு 9 மணி வரையிலும் இயங்கி வருகின்றனது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பார்வை நேரம் அதிகப்படுத்துப் படுகின்றது.


தமுமுகவின் எண்ணற்ற மனிதநேய சேவைக்கு புதிய வடிவத்தை இந்த அப்துர் ரஹிம் மருத்துவமனைப் பெற்றுத் தந்துள்ளது. இதனைப் பின்பற்றி இனி தமிழகமெங்கும் புதிய மருத்துவமனைகள் உருவாகுவதற்கு இது சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.
-ராமேஸ்வரம் ராஃபி
