மதவெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதவெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

தாம்பரம்: மதவெறியைத் தூண்டும் திமுக எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ.வின் அராஜகத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டி...

எம்.எல்.ஏ.வின் அராஜகத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டி...


ஜாதி மதங்கள் கடந்து சமத்துவத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரத்தில் ஆளும் திமுகவின் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவின் முஸ்லிம் விரோதப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.
கடந்த 09.08.2010 அன்று இரவு 7.30 மணிக்கு மக்கள் கூட்டம் நிறைந்த சண்முகம் சாலை அதனருகில் உள்ள அப்துல் ரசாக் சாலையில் தாம்பரம் ரெங்கனாதபுரத்தை சார்ந்த அசனார் (வயது 25) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வருகிறார். எதிர்புறம் பத்மநாபன் என்பவர் ஆட்டோவில் வருகிறார். தாம்பரம் பெரிய மசூதிக்கு சொந்தமான வணிக வளாகம் முன்னால் இரு வாகனமும் மோதி கொள்கின்றனர். இரு வாகன ஓட்டிகளும் வாய்த் தகராறில் துவங்கி கை கலப்பு வரை செல்கிறது. இதனிடையே பீட்டர் இங்லேண்ட் துணிக்கடை ஊழியர் வினோத் என்பவரும் உரிமையாளர் கே.பி. ஜெகதீசன் என்பவரும் பத்மநாபனுக்கு ஆதர வாக அசனாரை சரமாரியாகத் தாக்குகின்றனர். இதனைக் கண்ட சண்முகம் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களும் சில முஸ்லிம்களும் தாக்குதல் நடத்திய கும்பலிடம் இருந்து அசனாரை மீட்க வருகிறார்கள். உடனே கடை உரிமையாளர் ஜெகதீசன் என்பவர் வாகனத்தில் வந்தவர் அசனார் முஸ்லிம் என்பதற்காகவும் அவரை மீட்க வந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காகவும் தன்னையும் தன் கடையின் கண்ணாடியையும் தமுமுகவினர் தாக்கி விட்டனர் என்று தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ.வுக்கும் தாம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் டி.காமராஜ் (எம்.எல்.ஏ.வின் மைத்துனர்) என்பவருக்கும் தகவல்தர, ஏற்கனவே தமுமுக மீதும் இஸ்லாமிய சமூகத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. நகரமன்ற துணைத்தலைவர் காமராஜர் மூலம் தனது குண்டர் படையை ஏவி 9.8.2010 அன்று இரவு பொதுமக்கள் அஞ்சி நடுங்கும் வகையில் 150&க்கும் மேற்பட்ட குண்டர்களை வைத்துக் கொண்டு அராஜகம் செய்தார். மேலும் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. தனது அதிகார பலத்தை பயன்ப டுத்தி, தமுமுகவினர் மீது காவல் துறையை ஏவி விட்டார். இதிலும் மதவெறி அடங்காத எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. போலிசை தூண்டிவிட்டு தமுமுக சகோதரர்கள் எம்.பயாஸ், எம். அப்பாஸ், சதாம் உசேன், ஷாஜமான், முகமது அலி, ஹமிது, அசனார் உள்ளிட்டவர்களை கே.பி.ஜெகதீசன்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக குற்றப்பிரிவு எண் 307ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வைத்தார். கைதானோர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதிலும் திருப்தி கொள்ளாத எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. 10.08.2010 அன்று, தான் ஒரு திராவிட இயக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்து ஜாதி சங்க உறுப்பினராக மாறி, மதவெறி கும்பலோடு கைகோர்த்து தமுமுகவினரை கண்டிக்கிறோம் என்ற பெயரில் வியாபாரிகளை மிரட்டி கட்டாய கடை அடைப்பு நடத்தினார். இதனை கேள்விப்பட்ட தமுமுகவினர் தாம்பரத்தில் ஒன்றுகூடினர். எந்த அசம்பாவிதமும் நடைபெற்றுவி டக்கூடாது என்பதற்காக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் யாக்கூப் தலைமையில் மிகவும் கட்டுப்பாடுடன் பொறுமை காத்தனர்.

காவல் துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டனர். 10.08.2010 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது அவர்கள் நேரடியாக களத்திற்கு வந்தார். முன்னதாக தமுமுக மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜுனைது, மாவட்ட மமக செயலாளர் எம். யாக்கூப், துணைச் செயலாளர் ம.ஹைதர் அலி, தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே.ஜாஹிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒன்று திரண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. 2006&ல் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் எஸ்.ஆர். ராஜாவை அறிமுகப்படுத்தி வெற்றிபெறச் செய்த தமுமுகவினரை துச் சமாக மதித்து தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை காட்டிக்கொண்டே இருந்தார். வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் தரப்புக்கும் எம்.எல்.ஏ. தரப்புக்கும் அடிதடி தகராறு நடந்தபோது த.வெள்ளை யனைக் காப்பாற்றியது தமுமுக வினர்தான். சென்னையின் பெருநக ரமான தாம்பரத்தில் சிறுகடை வியாபாரிகளின் நலன் காக்க நாள்தோறும் போராடிக் கொண்டி ருக்கும் தமுமுகவை அழித்துவிட வேண்டும் என எம்.எல்.ஏ. கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்.

மக்களின் பிரச்சனையை உடனுக் குடன் முடித்துக் கொடுத்து மக்களின் நன் மதிப்பை பெற்று தமுமுகவினர் வளர்ந்து வரும் இச்சூழலில் இந்து முன்னணியுடன் கைகோர்த்துக் கொண்டு மதவெறியைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடைய முயல்கிறார். இதனிடையே விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, காங்கிரஸ் கட்சியின் மு.அக்பர், கம்யூனிஸ்ட் லோகநாதன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் முகம்மது சித்திக், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட நிர்வாகிகள், வணிகர் சங்கம் ஹாஜி சலீம், சேவியர் அருள்தாஸ் ஆகியோர் தமுமுக மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர்.

 எம்.எல்.ஏ தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்ட தமுமுகவினர்...

எம்.எல்.ஏ தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்ட தமுமுகவினர்...


வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கம் கடையை திறக்கச் சொல்ல, எம்.எல்.ஏ. ராஜாவின் தூண்டுதலின் பேரில் குண்டர் படை வியாபாரிகளை மிரட்டி கடை களை அடைத்தனர். தமுமுக வினரை மதவெறியை தூண்டுபவர் என்று சுவரொட்டி ஒட்டப்பட்டு தாம்பரத்தில் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

திமுகவைச் சேர்ந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., வெற்றிகொண்டான் போன்ற திமுக முக்கியப் பிரமுகர்கள் முஸ்லிம்களிடத்தில் நல்லுறவை ஏற்படுத்துவது போன்று தாம்பரம் பொதுக்கூட்டத்தில் பேசி சென்றாலும் எஸ்.ஆர்.ராஜாவின் முஸ்லிம் விரோதப் போக்கு நீடித்துக்கொண்டே இருக்கிறது. மதமோதலைத் தூண்டி விடும் எஸ்.ஆர்.ராஜாவைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும், வணிகர் சங்கமும் சுவரொட்டிகளை ஒட்டின. ஆனால் எம்.எல்.ஏ.வின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் சுவரொ ட்டிகளை கிழித்து எறிந்தனர்.

திராவிட இயக்கத்தில் மத வெறியைத் தூண்டும் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா மீது திமுக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் தேர்தலில் மண்ணைக் கவ்வுவது நிச்சயம்.

தோழர் ஜீவா, என்.ஆர்.ராசமாணிக்கம், முனு ஆதி போன்ற சமூக சிந்தனைவாதிகள் வாழ்ந்த தாம்பரத்தில் மதவெறி சிந்தனையுடன் செயல்படும் ராஜாவால் திமுக அரசுக்கு தீராக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

வன்னிஅரசு - மாநில செய்தி தொடர்பாளர், விடுதலை சிறுத்தை கட்சி


தாம்பரத்தில் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வருகிறோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது.

மூ. அக்பர், காங்கிரஸ் கட்சி


எனது அரசியல் வாழ்வில் இது போன்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை. இரு வாகன மோதலை மத மோதலாக கையா ண்ட தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா கண்டனத்திற் குரியவர்.

வணிகர்சங்க பிரமுகர்-ஹாஜி சலிம்

தாம்பரத்தில் ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில் தான் கடை அடைப்பு நடைபெறுகிறது. எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.

-மாயவரம் அமீன்

சனி, 7 ஆகஸ்ட், 2010

மாணவர்களிடையே மதவெறியைத் தூண்டும் பா.ஜ.கவைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,ஆக7:தனது சதவிகிதத்திற்கும் அதிகமாக இந்திய சுதந்திரபோரில் இரத்தம் சிந்திய முஸ்லிம் சமுதாயம் தியாகம் செய்தது உயிரையும், பொருளையும் மட்டுமல்ல, தமது எதிர்கால சந்ததியினரின் கல்வியையும்தான்.
கல்வியிலும், பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்பதையும், அவர்களுக்கு உடனடியாக இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் சச்சார், மிஷ்ரா உள்ளிட்ட கமிஷன்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் மத்திய அரசு ஏற்கனவே சிறுபான்மையினர் கல்வியில் மேம்படுவதற்காக உதவித்தொகையை அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியிலிருந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களூம் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிவருகின்றன. இந்த நிதியுதவி அவர்களுடைய தேவையை முழுமையாக பூர்த்திச் செய்யாது என்பது வேறு விஷயம்.

இந்நிலையில்,தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் மக்களால் மறக்கடிக்கப்பட்டு செல்வாக்கை இழந்து புறம்போக்கு கட்சியாக மாறியுள்ள பா.ஜ.க குறுகிய வழியில் மக்கள் செல்வாக்கை பெறுவதற்கு தனது வழக்கமான ஆயுதமான மதவெறியைத் தூண்டிவிட்டு ஆதாயம் பெறவிரும்புகிறது.

வருகிற 2011 தமிழக சட்டசபைத் தேர்தலில் எப்படியாவது ஒரு சில இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தற்பொழுது சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கிவரும் கல்வி உதவித்தொகையை ஏதோ தமிழக அரசு வழங்குவதுபோல் ஒரு மாயை ஏற்படுத்தி,கல்வியில் இந்து என்பதால் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற பொய்ப்பிரச்சாரத்தை ஜூலைப் போராட்டம் என்றபெயரில் நடத்தி வருகின்றனர்.

உதவித்தொகையைப் பொறுத்தவரை அதில் ஆதாயம் பெறுவோர் ஏராளமாக உள்ளனர்.தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உதவித்தொகை, ஊனமுற்றோர், முன்னாள் இராணுவத்தினர்,தியாகிகள் என பல உதவித்தொகைகளில் ஹிந்துக்களே ஆதாயம் பெற்று வருகின்றனர்.ஆனால் உதவித்தொகையில் பார்ப்பணர்களுக்குத்தான் பங்கில்லை.ஆகவே பார்ப்பணர்களுக்கு உதவும் நோக்கிலேயே பார்ப்பணர்களால் உருவாக்கப்பட்ட பா.ஜ.க ஒட்டுமொத்த ஹிந்துக்களுக்கும் கல்வி உதவித்தொகை இல்லை என்ற கோஷத்தை எழுப்பி சிறுபான்மையினருக்கு கிடைக்கும் உதவித்தொகையை தடுக்க விரும்புகிறது. மேலும் மாணவர்களிடையே ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி கல்வி வளாகங்களை கலவர பூமியாக மாற்ற தமிழகத்தில் கல்வி உதவித்தொகை என்ற பெயரில் செயலாற்றி வருகிறது.

பா.ஜ.கவின் மதவெறியைத் தூண்டும் போக்கை கண்டித்து மக்கள் நல்வாழ்வில் நாட்டங்கொண்ட சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று(06/08/2010) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐயின் மாவட்டத்தலைவர் எ.செய்யது அலி தலைமைத் தாங்கினார். கத்தோலிக்க மறைமாவட்டத்தைச் சார்ந்த வழக்கறிஞர் லீனஸ் ராஜ் கருத்துரை வழங்கினார். எஸ்.டி.பி.ஐயின் மாநிலப்பேச்சாளர் செய்யத் இப்ராஹிம் கலந்துக் கொண்டு பா.ஜ.கவின் உண்மை முகத்தை தோலுரிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிறுபான்மை மக்கள் கலந்துக் கொண்டனர்.

செவ்வாய், 27 ஜூலை, 2010

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்


இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது கூடஆம்புலன்ஸ் சேவைகளுக்கு
இடையூறு செய்யக் கூடாது என்
பது சர்வதேச விதியாகும்.
ஆனால், கற்ப்பிணிகளின்
வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழகத்தில் தங்களது இருப்பை
வெளிகாட்டுவதற்காக சமீபகால
மாக, இந்து மாணவர்களுக்கு
கல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.
கடந்த ஜுலை 24 அன்று
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் இதே
கோரிக்கைக்காக மாநில தலைவர்
பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது தமுமுகவின்
ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்து
ஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்த
குடும்பத்தினரிடமிருந்து தொலை
பேசி அழைப்பு வந்திருக்கிறது.
ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும்
என்றும், வேகமாக வருமாறு
அதில் வேண்டியதால், தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர்
தாஜுதீன் வேகமாக ஹனீபா
மருத்துவமனையை நோக்கி திருப்பினார்.
வரும் வழியில், பாஜகவினர்
ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்
டிருந்ததால், அவர் வண்டியை
மெல்ல இரண்டாவது கியரில் நகர்த்தியிருக்கிறார்.
அப்போது காவல்
துறையும் கூட்டத்தை
விலக்கி, ஆம்புலன்ஸ்
செல்ல வழி ஏற்படுத்
தியுள்ளனர். பாஜக
தலைவர் பொன். ராதா
கிருஷ்ணன் தனது
ª த £ண்ட ர் களிட ம்
ஆம்புலன்ஸுக்கு வழி
விடுமாறு அறிவித்திருக்கிறார்.
எந்த விதி மீறலும்
யாருக்கும் இடையூறு
இல்லாமலும் ஹனீபா
மருத்துவமனையை நோக்கி ஆம்பு
லன்ஸ் எடுத்துச் சென்றுவிட்டார்.
மருத்துவமனை வாசலில் வண்
டியை நிறுத்திவிட்டு நோயாளி
யை பார்க்க டிரைவர் சென்று
விட்டார்.
அதற்குள் சுமார் 30 பேர் கொண்ட
பாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில்,
ஆம்புலன்ஸை கட்டைகளால்
உடைத்து, டிரைவரை கொலை
வெறியுடன் தேடி உள்ளனர்.
டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல்
டேங்கை உடைத்து, வண்டியை
துவம்சம் செய்ய, இதைப் பார்த்த
பொதுமக்கள் சப்தம் போட,
அதற்குள் ஓடிவந்த காவல்
துறையினர் பாஜகவினர் மீது
தடியடி நடத்தியதும், வன்முறை
கும்பல் ஓடத் தொடங்கியது.
அதற்குள் பாஜகவினர் தங்களின்
அயோக்கியத்தனத்தை மறைக்க,
ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும்
விதமாக வந்தது என வதந்திகளை
பரப்பினர்.
ஏற்கனவே அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
முகாமிட்டு இருந்ததால், அவர்

தலைமையிலான போலிசார்
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங்களையும் உடைத்தனர்.
போலிசார் துரத்த தொடங்கியதும் பாஜகவினர் கொடிகளை
போட்டுவிட்டு, வேனில் கட்டியிருந்த கொடிகளை அவிழ்த்து விட்டு ஓடத் தொடங்கினர்.
தமுமுக ஆம்புலன்ஸ் உடைக்கப்
பட்ட செய்தி அறிந்ததும் திருத்துறைப்பூண்டி நகர தமுமுகவினர்
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மாவட்ட தலைவர் தாஜுதீன்,
ஒன்றிய செயலாளர் கலிபுல்லாஹ்,
யூசுப் உள்ளிட்டோர் தலைமையில்
சாலை மறியலில் தமுமுகவினர்
இறங்க, பிறகு வழக்கு தொடுத்து
விட்டு அடுத்தகட்டமாக போராட்
டம் நடத்தலாம் என முடிவு
செய்யப்பட்டது.
செய் தியறிந்து திருவாரூர்
மாவட்ட தமுமுகவினர் திருத்து
றைப்பூண்டி நோக்கி விரைந் தனர்.
திருத்துறைப் பூண்டி நகரெங்கும்
பாஜகவினரை பொதுமக்கள் காரிதுப்பாத குறையாக திட்டிக்
கொண்டிருந்தனர்.
இதே, ஆம்புலன்ஸை பலமுறை
பாஜகவினர் அவசரத்துக்கு பயன்
படுத்தியது திருத்துறைப் பூண்டி
மக்களுக்கு நன்கு தெரியும்.
அப்போது கூட ஒரு இந்து சமுதாய
குடும்பத்துக்குத்தான் உதவ அந்த
ஆம்புலன்ஸ் சென்றதும். திருத்து
றைப்பூண்டி மக்களால் மூலைக்கு
மூலை பேசப்பட்டது.
காவல்துறை பாஜகவினரை
பிடிக்க வேண்டும் என பொது
மக்கள் தரப்பிலிருந்தே அழுத்த
ங்களும அதிகரிக்க, அனைத்துக்
கட்சியினரும் இந்த அராஜகத்தை
கண்டித்து, தமுமுகவினருக்கு
ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.
அடுத்த நாள் மமக துணைப்
பொதுச் செயலாளர் எம். தமிமுன்
அன்சாரி, திருத்துறைப்பூண்டிக்கு
வந்து நிலைமைகளை நேரில் விசாரித்தார்.
குற்றவாளிகள் பிடிக்கப்படாத
தை கண்டித்து திருவாரூரில் காவல் கண்காணிப்பாளர்
அலுவலகம் நோக்கி கருப்புக்கொடி
ஊர்வலம் நடத்தப்படும் என
அறிவிக்கப்பட்டது.
டி.ஐ.ஜி. அவர்களும் பொதுச்
செயலாளர் ஹைதர் அலியிடமும்,
மற்ற அதிகாரிகள் மமக துணைப்
பொதுச்செயலாளர் எம். தமிமுன்
அன்சாரியிடமும் பேசினார்கள். முதல்வர் கருணாநிதி திருவாரூக்கு
வரும் தினத்தில் கருப்புக் கொடி
ஊர்வலம் நடத்தாதீர்கள் என்றும்,
ஜுலை 30க்குள் குற்றவாளிகளை
பிடிக்கிறோம் என்று கூறியதால்,
ஜுலை 31 அன்று கருப்புக் கொடி
ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டது.
ஈவு, இரக்கமற்ற பாஜக
வன்முறை கும்பலின் செயல்
பொதுமக்களையே கோபப்படுத்தி
யது எனில், தமுமுகவினரை
தமிழகமெங்கும் கொந்தளிக்க
வைத்துள்ளது.
தமுமுகவினர் இதுவரை ஜனநாயகத்தை மீறவில்லை. காவல்துறை
தனது கடமையை வாக்களித்தப்படி
செய்யாவிடில், அதன் பின் விளைவுகளுக்கு காவல்துறைதான்
பொறுப்பேற்க வேண்டும். காரணம், எங்களின் ஒவ்வொரு ஆம்புலன்ஸும் எங்களது ரத்தம் வியர்வையினால் ஓடிக் கொண்
டிருக்கிறது. ஆம்புலன்ஸின் மீது
விழுந்த தாக்குதல், எங்களின் P நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்குதல்களாகும்.